Monday, March 6, 2017

'பெரியார்' தியாகத்தையும், 'திருச்சி பெரியார் மையம்' தியாகத்தையும்;


இழிவு படுத்தும் சமூக குற்றம் தொடர்பான சி.பி.ஐ விசாரணை?



'பெரியார் பொம்மைகளை உடைத்தல், பெரியார் படங்களை எரித்தல்' போராட்ட 'சிக்னல்'?


முகநூலில் வெளிவந்துள்ள கீழ்வரும் தகவலானது, எனது கவனத்தை ஈர்த்தது.

16 பக்கங்கள் கொண்ட இந்த சிறுநூலை ('மார்க்சிய லெனினிய குழுக்களில் உள்ள பார்ப்பனரல்லாதார்களின் சிந்தனைக்கு')  திராவிடர் கழகம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டிருக்கிறது. இன்று பெரியார் திடலில் இரண்டு ரூபாய் அய்ம்பது காசுகளுக்கு வாங்கி, வரும் வழியில் வாசித்து முடித்தேன். 20 வருடங்கள் கழித்தும் இப்போதும் இந்த நூல் பொருத்தப்பாடு மிகுந்ததாக இருக்கிறது என்பது உண்மையிலேயே வருத்தத்திற்கு உரிய செய்திதான்!”

"நூல் ஆசிரியர் யார்?" என்ற கேள்வியும்;

" நூல் ஆசிரியர் பெயர் இல்லை ! வெறும் திராவிடர் கழக வெளியீடு என்றுதான் இருக்கிறது!"
"இது 1985 ஆம் ஆண்டு பெரியார் நாட்குறிப்பில் வந்தது.அதற்கு தனி ஆசிரியர் இல்லை.அது ஒரு குழு முயற்சி."

என்ற பதில்களும், அதன் கீழ் வெளிவந்துள்ளன.

மேலே குறிப்பிட்ட நாட்குறிப்பானது, தஞ்சை இரத்தினகிரி தலைமையில், மருதவாண‌ன், குப்பு.வீரமணி, நான் உள்ளிட்டோர் அடங்கிய குழுவின் முயற்சியில் உருவானது.

அதில் உள்ள 'மார்க்சிய லெனினிய குழுக்களில் உள்ள பார்ப்பனரல்லாதார்களின் சிந்தனைக்கு',  நான் எழுதியதாகும்.  மார்க்சிய லெனினிய புலமையுடன் 'பெரியார்' கொள்கையாளராக நான் பயணித்த காலக்கட்டத்தில் எழுதிய கட்டுரை அதுவாகும். ( ‘உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்சிக்கிய தமிழ்நாடு; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html )
பின்னர் 'திருச்சி பெரியார் மையம்' துவக்கி, செயல்பட்ட காலத்தில், அதை சிறு வெளியீடாக வெளியிட்டதாகவும் ஞாபகம் இருக்கிறது.

அதே போல,

இன்று இந்துத்வாவை எதிர்த்து வரும் கம்யூனிஸ்ட் அறிவு ஜீவியான திரு.அருணன் அவர்கள், 'திராவிட இயக்கம் ஒரு மார்க்சிய ஆய்வு' என்ற தலைப்பில், மார்க்சிஸ்ட் கட்சியின் 'தீக்கதிர்' இதழில் தொடர் கட்டுரைகள் வெளியிட்டார். அதற்கு மறுப்பாக, திரு.கி.வீரமணியை ஆசிரியராக கொண்ட 'உண்மை' இதழில், 15 - 11 - 1983 முதல் 01  -06 - 1984 வரை, நான் எழுதிய தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. எனது கட்டுரைகள் வெளிவந்த காலக்கட்டத்தில்,  'தீக்கதிர்' இதழில்,1984 பிப்ரவரியில் திரு.அருணன் எழுதிய‌ கட்டுரைகள் வெளிவந்தன. அது தொடர்பான எனது மறுப்பு கட்டுரைகள், திரு.கி.வீரமணியை ஆசிரியராகக் கொண்ட 'விடுதலை' இதழில் 26 - 02 - 1984 முதல் 06  - 03 - 1984 வரை, வெளிவந்துள்ளன.

திரு.அருணன் எழுதிய கட்டுரைகளையும், அவை தொடர்பான எனது மறுப்பு கட்டுரைகளையும் ஒரே புத்தகமாக வெளியிட திரு.அருணன் சம்மதிக்க தயாரா? என்ற கேள்வியை, கடைசியாக வெளிவந்த எனது கட்டுரையில் எழுப்பியிருந்தேன்.

எனது இசை ஆராய்ச்சிகளின் அடிப்படையில், ஈ.வெ.ரா அவர்களின் கொள்கைகளில் உள்ள குறைபாடுகளை, எனது பதிவுகளின் மூலமாக வெளிப்படுத்தி வரும் இந்த காலக் கட்டத்திலும்;

மேலே குறிப்பிட்டவாறு ஒரே புத்தகமாக வெளியிட, எனது சம்மதத்தினை, இந்துத்வாவை எதிர்ப்பதில் ஒன்றுபட்டுள்ள திரு.அருணன் அவர்களுக்கும், திரு.கி.வீரமணி அவர்களுக்கும், இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.’ ( ‘சசிகலா ஆதரவில் தி.க கி.வீரமணியும் கம்யூனிஸ்ட் தலைவர்களும்; 'புதிய ஆரிய - திராவிட நோயில்' வேறுபடுகிறார்களா?’; http://tamilsdirection.blogspot.in/2016/12/blog-post.htmlஅதே போல், இன்றைக்கும் தேவையான 'கானல் நீர் தேடும் கம்யூனிஸ்டுகள்' மற்றும் 'தொழிற்சங்கம்' தொடர்பானவை  உள்ளிட்டு, புனைப்பெயருடனும், பெயரின்றியும், எனது எழுத்துக்கள் பல கட்டுரைகளாகவும், தலையங்கங்களாகவும், 'உண்மை', 'விடுதலை', ‘The Modern Rationalist’ ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. அவற்றை தொகுத்து, வெளியிடவும், எனது சம்மதத்தினை இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்; பிரதிபலனாக எனக்கு எந்த சன்மானமும் தேவையில்லை.

எனது பதிவுகள் தொடர்பாக, இதுவரை பதிவு செய்துள்ள எந்த பின்னூட்டத்தையும்(feedback), இதுவரை அகற்றியதில்லை. எனது பதிவுகளை நூலாக வெளியிடும் போது, பதிவுக்கு 'எதிராக' பின்னூட்டங்கள் வந்திருந்தால், அவற்றையும் சேர்த்தே வெளியிடுவேன். 1944க்கு முன், ஈ.வெ.ரா அவர்களின் 'குடிஅரசு' இதழும், ஈ.வெ.ராவை கண்டித்து எழுதிய மடல்களை அப்படியே வெளியிட்டு, உரிய மறுப்பு விளக்கங்களுடன் பயணித்தது. அது 1944இல், தி.க தோற்றத்தில் திசை மாறி, உணர்ச்சிபூர்வ போக்கில், வழிபாடும் அரங்கேறி, நேர்மையான உழைப்பு, சுய சம்பாத்தியம், ஆகிய திறமைகளும் ஆர்வமும், 'இயல்பிலேயே' இல்லாத சிற்றின மனிதர்கள் எல்லாம், பொதுவாழ்வு வியாபாரிகளாக வளர்ந்ததன் விளைவின் உச்சக்கட்டமாக, இன்று 'சசிகலா பினாமி ஆட்சி'யில் தமிழ்நாடு சிக்கியுள்ளது; தி.க தலைவர் கி.வீரமணியின் ஆதரவுடனும், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் ஆதரவுடனும். 

மேலே குறிப்பிட்ட அருணனின் 'தீக்கதிர்' இதழ் கட்டுரைகளை மறுத்து, 'உண்மை', 'விடுதலை' இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளை தொகுத்து;

இன்று லண்டனில் வாழும் தொல்காப்பியன், அவரது தம்பி திருவள்ளுவன், தங்களின் செலவில், மேற்பார்வையில், 'பெரியாரியலா? மார்க்சியமா?'என்ற தலைப்பில், 'பெரியார் மையம்' வெளியீடாக 1991இல் வெளிவந்தது. அதில் தனிமனித முக்கியத்துவம் கூடாது என்று கருதி, நூலாசிரியராக, எனது பெயரை போட வேண்டாம் என்று நான் கேட்டு, அவ்வாறே அந்நூலும் வெளிவந்துள்ளது. 

'பெரியார் மையம்' வெளியீடுகளில், தோட்டக்குறிச்சி, நெற்குப்பை, ராஜபாளையம், போடி சாதிக் கலவரங்கள் தொடர்பான கட்டுரைகள், போன்ற வெளியீடுகள் எல்லாம், கூட்டு முயற்சியாக, எழுதப்பட்டு வெளிவந்தவை ஆகும். ஆனால் 'பெரியார் பார்வையில் இந்திய தேசியம்', ஆனைமுத்துக்கு மறுப்பான இரு சிறு வெளியீடுகள், சமூக உளவியல் தொடர்பான வெளியீடு போன்றவை எல்லாம், நான் எழுதி, என் பெயர் போடாமல் வெளிவந்தவை ஆகும்.

நான் இசையின் இயற்பியல் ( Physics of Music)  நோக்கில், பழந்தமிழ் இலக்கியங்களில் ஆய்வைத் தொடங்கியபின், 'திருச்சி பெரியார் மையம்' செயல் இழந்து விட்டதாக நினைத்திருந்தேன்; அதன்பின் அந்த 'பலத்தில்'(?) பொதுவாழ்வில் தொடர்ந்தவர்கள், இதுவரை அந்த வரிசையில் எந்த புதிய நூலும் வெளியிடவில்லை என்ற அடிப்படையில்.

'திருச்சி பெரியார் மையத்தில் இருந்து, பின்னர் சசிகலா குடும்ப அரசியல் வலைப்பின்னலில் இடம் பெற்று, எனது பார்வையில் பொது ஒழுக்கத்திற்கும் சட்டத்திற்கும் விரோதமாக, பயணித்து வரும் தஞ்சாவூர் ஆர்.பாண்டியன், தமது எடுபிடிகளுடன் 'திருச்சி பெரியார் மையம்' ஒளிவட்டத்துடன் செயல்படுவதை அறிந்து அதிர்ந்தேன்.

தஞ்சாவூர் பாண்டியன் சசிகலா குடும்ப அரசியல் வலைப்பின்னலில் இடம் பெற்று;

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 'ஆம் ஆத்மி கட்சி'யின் மாநில பொறுப்பாளராகவும் பயணிக்க (https://www.youtube.com/watch?v=ipDFDFYiCcU  );

அவ்வாறு என் பெயரைப் போடாமல், ’திருச்சி பெரியார் மையம்’ வெளியீடுகள் வந்ததும் ஒரு காரணம் என்பதை, இப்போது உணர்ந்துள்ளேன். சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ள 'சிற்றின மனிதர்கள்' எல்லாம், 'எடுபிடியாக' 'வாய்ப்புள்ள' சமூக வட்டத்தில் நுழைந்து, 'ஒழுக்கக்கேடான குறுக்கு வழியில்' பணம் ஈட்ட வாய்ப்பு கிட்டும்போது, சமூக கிருமியான தமது 'சுயரூபத்தை' வெளிப்படுத்துவார்கள். (http://tamilsdirection.blogspot.sg/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html ) 'திராவிட அரசியல் கொள்ளையர்களுக்கு' எடுபிடிகளாக 'பிழைத்துக் கொண்டு', 'பெரியார் கொள்கையாளர்களாக' வெளிச்சம் போடுபவர்களும், அதில் அடக்கம்.

அகத்தில் 'சுயலாப கள்வர்' நோயுடன் உதவியாளராக பயணித்து, வாய்ப்பு கிடைத்தவுடன், தனது 'சுயரூபத்தை' வெளிப்படுத்தி, ஜெயலலிதா மறைவிற்குப் பின், இன்னொரு ஜெயலலிதாவாக செயல்பட முயன்று, இன்று தோல்வி முகத்தில் உள்ள‌ சசிகலா பயணித்த அதே திசையில்;

திருச்சி பெரியார் மையத்திலிருந்து நான் ஒதுங்கி, இசை ஆய்வுகளில் மூழ்கிய பின், எனக்கு  தெரியாமல், 'திருச்சி பெரியார் மையம்' ஒளிவட்டத்தில் செயல்பட்டு, சசிகலா குடும்ப வலைப் பின்னலில் இடம் பெற்று, கடந்த பாராளுமன்ற தேர்தலில் 'ஆம் ஆத்மி கட்சி' தமிழ்நாடு மாநில‌ பொறுப்பாளராகும் அளவுக்கு,  அரவிந்த் கெஜ்ரிவாலையே ஏமாற்றி, பயணித்து வரும், தஞ்சாவூர் பாண்டியனின், அந்த சமூக கேடான பயணம் தொடர்பாக, மேலே குறிப்பிட்ட காரணமானது தெரிந்த பின்னும், 'மெளனமாக' நான் இருந்தால், அது சமூக குற்றமாகி விடும்.

இன்று 'திருச்சி பெரியார் மையம்' ஒளிவட்டத்தில், சசிகலா குடும்ப அரசியல் வலைப்பின்னலில் இடம் பெற்று, 'அதிவேக' பணக்காரராகி,  செயல்பட்டு வரும் வழக்கறிஞர் தஞ்சாவூர் பாண்டியன் ஒரு முறையாவது,  'பெரியாரியல் பார்வையில் இந்திய தேசியம்' நூலை முழுவதும், படித்திருப்பாரா? என்பது கேள்விக்குறியே. எனது விளக்க உதவியின்றி, அன்று மற்றவர்களுக்கும் அந்நூல் விளங்கியிருக்காது.

இல்லையென்றால்;

அந்த புத்தகத்தையும், 'மா.லெ.கு.பா.பார்வைக்கு' நூலையும், என்னை தவிர்த்து, 'குழுவாக' செயல்பட்ட மற்றவர்களுடன் சேர்ந்து, இன்றைய சமூக சூழலுக்கு ஏற்றவாறு, தஞ்சாவூர் பாண்டியன் திருத்தி, வெளியிடலாமே?

அந்த வெளியீடு உண்மையிலேயே சிறப்பாக இருந்தால், அதை பகிரங்கமாக பாராட்டுவதிலும் எனக்கு தயக்கம் கிடையாது. அறிவுபூர்வ விமர்சனங்கள், விவாதங்களில்,  நான் இருந்தது வரை செயல்பட்டது, 'திருச்சி பெரியார் மையம்' என்ற பின்னணியில்;

நான் ஒதுங்கிய பிறகு, 'திருச்சி பெரியார் மையம்' ஒளிவட்டத்தில் செயல்பட்டவர்களில் எவராவது, 'பெரியார்' கொள்கைகள், நிலைப்பாடுகள் தொடர்பாக, எனது ஆய்வுகளின் அடிப்படையில், கடந்த சுமார் 10 வருடங்களாக‌ முன்வைத்த வாதங்களை, இதுவரை அறிவுபூர்வமாக மறுத்துள்ளார்களா? இனியாவது மறுப்பார்களா? தமிழ்நாட்டில் 'குருட்டு பகுத்தறிவு பார்வை' நோயில் சிக்கி, உணர்ச்சிபூர்வ போக்குகளை வளர்த்து வரும் நிகழ்கால சாட்சிகளாக, அவர்கள் எல்லாம் பயணிக்கிறார்களா? (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_16.htmlஇல்லையென்றால், 'திருச்சி பெரியார் மையம்' என்ற ஒளிவட்டத்தில் செயல்படுவதானது, அறிவுபூர்வ நோக்கில், நேர்மையாகுமா? நான் பங்களித்த 'திருச்சி பெரியார் மையத்தினை' அவமானப்படுத்துவதாகாதா? என் முதுகுக்குப் பின்னால், என்னை இழிவுபடுத்தி, அந்த அவமானத்திலிருந்து தப்பிக்க முடியுமா? 'பொது வாழ்வில், என்னுடன் நீண்ட காலம் பழகி, அவ்வாறு என்னை இழிவுபடுத்திய 'முதல் நபராக’,  தஞ்சாவூர் ஆர்.பாண்டியனும், அவரின் 'எடுபிடிகளும்' வெளிப்பட்டுள்ளார்கள்; 'திராவிட மனநோயாளிகள்' பற்றிய எனது ஆய்விற்கு உதவி.(http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) எந்த சுயலாபத்திற்காக, 'பெரியார்' ஈ.வெ.ராவை 1949 முதல் 1967 வரை, தி.மு.கவினர் இழிவுபடுத்தினார்களோ, அதே நோக்கிலும், போக்கிலுமே, தஞ்சாவூர் ஆர்.பாண்டியனும், அவரின் 'எடுபிடிகளும்', 'திருச்சி பெரியார் மையம்' செயல்பாட்டிலிருந்து, நான் ஒதுங்கியபின், என்னை இழிவுபடுத்த தொடங்கினார்கள். தி.மு.கவை வீழ்த்த,  ஈ.வெ.ரா மேற்கொண்ட உணர்ச்சிகர அணுகுமுறையை,  நான் மேற்கொள்ள மாட்டேன். மாறாக,  அதை அரிய சமூகவியல் சிக்னலாக (Sociological signal)  கருதி, அறிவுபூர்வமாக,  தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கான எனது முயற்சிகளுடன் 'ஒருங்கிணைத்து' செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்; ஈ.வெ.ரா தோற்ற இடத்தில், தமிழர்களிடையே 'நாய்களும், கழுதைகளும்' சிறுமமாகி, தன்மானமும் அறிவும் ஊக்கம் பெறும் இலக்கில், நான் வெற்றி பெறுவேன் என்ற தன்னம்பிக்கையுடன்; திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும், 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு, ஈ.வெ.ராவின் கொள்கைகளை உட்படுத்தி, ஈ.வெ.ராவை 'மீட்கும்' முயற்சியில்; சுயலாப கள்வர் நோயில் சிக்காத, அவரின் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து.’  (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html
      
ஆனால் 'திருச்சி பெரியார் மையம்' ஒளிவட்டமானது, வழக்கறிஞர் தஞ்சாவூர் பாண்டியன் சசிகலா குடும்ப அரசியல் வலைப்பின்னலில் இடம் பெற்று, 'அதிவேக' பணக்காரராக உதவியிருந்தால்;

அது 'சுயலாப' நோக்கற்ற‌ 'பெரியார்' கொள்கையாளர்களின் கவனத்திற்கும், சமூக விசாரணைக்கும் உரியதாகும். அதாவது 'பெரியார்' போர்வையில், புறத்தில் 'பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு', அகத்தில் 'சுயலாப கள்வர்' என வாழ்ந்து, என்னென்ன வழிகளில், முறைகளில் தமிழ்நாட்டை சீரழித்து (http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html );

எவ்வாறு 'அதிவேக பணக்காரர்' ஆகி, 'பெரியார்' தமிழ்நாட்டை சீரழிக்க தான் அவதரித்தாரா? என்ற கேள்வியை அத்தகையோர் எழுப்பியுள்ளதானது, அந்த விசாரணையில் வெளிப்பட்டால், வியப்பில்லை. 'பெரியார்' போர்வையில், புறத்தில் 'பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு', அகத்தில் 'சுயலாப கள்வர்' என்ற போக்கானது, ஈ.வெ.ரா அவர்கள், 'பெரியார்' பிம்ப சிறையில் சிக்கி, வளர்ந்த போக்கின் ஊடே வளர்ந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.


இறந்த காந்தியை நம்பமுடியாத அளவுக்கு மிகவும் பாராட்டிய ஈ.வெ.ரா அவர்கள், பின்னர் 'காந்தி பிம்பம்' ஆனது, பொதுவாழ்வு வியாபாரத்திற்கு துணை புரியும் போக்கை அம்பலப்படுத்தவே, 'காந்தி பொம்மையை உடைத்தல், காந்தி படங்களை எரித்தல்' போராட்ட அவசியம் குறித்து பிரச்சாரம் செய்தார். அறிவுபூர்வமாக அதற்கான நியாயங்களை மறுக்காமல், 'மனம் புண்படுகிறது' என்று காந்தி அன்பர்கள் முன்வைத்த கருத்தினை, ஈ.வெ.ரா ஏற்கவில்லை. அது சரி, என்றால், இன்று 'பெரியார்' பிம்பமானது, இன்னும் மோசமான பொதுவாழ்வு வியாபாரத்திற்கு துணை புரிந்து வருவதானது, மேற்குறிப்பிட்ட விசாரணையில் வெளிப்பட்டால்;


இன்று 'பெரியார் பொம்மைகளை உடைத்தல், பெரியார் படங்களை எரித்தல்' போராட்ட அவசியம் குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் வெளிப்பட்டாலும், வியப்பில்லை. ஒருவரை தனிப்பட்ட முறையில் பாராட்டுவதற்கும், கண்டிப்பதற்கும், சமூக நோக்கில் பாராட்டுவதற்கும், கண்டிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் பற்றிய தெளிவு உள்ளவர்கள் எல்லாம்;

அவ்வாறு சமூக கேடான பிம்பங்கள் தொடர்பான, 'பொம்மைகளை உடைத்தல், படங்களை எரித்தல்' ஆகிய போராட்டங்களை, அந்த தனிநபர்களுக்கு எதிரான போராட்டங்களாக குழப்பிக் கொள்ள மாட்டார்கள்.

ஈ.வெ.ரா அவர்களை 'பெரியார்'  சிறையிலிருந்து மீட்டு, 'பெரியார்' தமிழ்நாட்டை சீரழிக்க தான் அவதரித்தாரா?' என்ற குற்றச்சாட்டிலிருந்து, வரலாற்றில் அவர் மீள, 'பெரியார் பொம்மைகளை உடைத்தல், படங்களை எரித்தல்' போராட்டமானது துணை புரியலாம்.

‘மார்க்சிய லெனினிய புலமையுடன், 'பெரியார்' கொள்கையாளராக பயணித்து வந்த நான், பின் 'இசையின் இயற்பியல்' (Physics of Music) நோக்கில், பழந்தமிழ் இலக்கியங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம்;

'இனம்', 'சாதி' தொடர்பான மேற்கத்திய சூழ்ச்சியில், ஈ.வெ.ரா அவர்கள் சிக்கி;

1944வரை அவரின் இணையற்ற தியாகத்தால் சேமித்திருந்த சமூக ஆற்றல்கள் எல்லாம்;

'திராவிடர், திராவிட' சிறை உருவாக்கத்திற்கு பயன்பட்டு, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழித்து வருவதை கண்டு பிடித்தேன். 2005-இல் நான் தஞ்சை இரத்தினகிரியை சந்தித்த வேளையில், அதை தெரிவித்தேன். இன்றுவரை அதை மறுத்தோ அல்லது ஏற்றுக் கொண்டோ, அவர் எந்த விளக்கமும் தரவில்லை.

அது முதல், கடந்த சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக, 'தனி மனித இராணுவமாக' அந்த மேற்கத்திய சூழ்ச்சியிலிருந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்க, எனது வரையறைகளுக்குட்பட்டு (within my limitations) , பங்களித்து வந்துள்ளேன்.’ ( ‘'திராவிடர், திராவிட'  சிறையிலிருந்து; தமிழை எவ்வாறு மீட்க முடியும்?; http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post.html & http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post.html

1919 முதல் 1944 வரை 'பெரியார்' ஈ.வெ.ராவின் இணையற்ற தியாகத்தால் சேமித்திருந்த சமூக ஆற்றல்கள் எல்லாம்; 


1944‍-இல் திசை திரும்பியதன் விளைவாக, 'திராவிட' கட்சிகள் ஆட்சியைப் பிடித்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழிக்கவே பயன்பட்டது: ஈ.வெ.ராவின் 'மீட்பு' முயற்சிகளையும் ஓரங்கட்டி:


அதன் தொடர்ச்சியாக நானும் ஏமாற, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'சமூக கிருமிகளாக' வளர்ந்து, சசிகலா வலைப்பின்னலில் இடம் பெற்று, 'திருச்சி பெரியார் மையம்' ஒளிவட்டத்தில், எனது சமூக பார்வையின் குவியத்திற்கு, தஞ்சாவூர் பாண்டியனும் அவரின் எடுபிடிகளும் வந்துள்ள சூழலில்:

மேலே குறிப்பிட்டுள்ளவாறு, எனது முயற்சிகளில் நான் பெறும் வெற்றியின் மூலம், தமிழும், தமிழரும், தமிழ்நாடும் மீளவும் வாய்ப்புள்ளது. 

‘இன்று 'ஜல்லிக்கட்டு ஆதரவு', 'ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு', நேற்று 'மீத்தேன் திட்ட எதிர்ப்பு' என்று வெளிப்பட்டு, வெற்றியை நோக்கி, பயணிக்கும் போராட்டங்கள் எல்லாம்;

1991இல் தமிழ்நாட்டில் 'புதிதாக', முளைவிட்டு 'அதிவேகமாக' வளர்ந்த 'ஊழல் பேராசை' போக்கில்;

கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் உள்ளிட்ட இன்னும் பல தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, தற்கொலைக்கு தூண்டி, 'அபகரித்த' போது:

'ஜல்லிக்கட்டு ஆதரவு' போன்ற போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்திருந்தால்;

மலைகள், காடுகள், தாது மணல், ஆற்று மணல், ஏரிகள் உள்ளிட்ட இயற்கை கனி வளங்கள் எல்லாம்;

அடுத்து அடுத்து வந்த ஆட்சிகளில் சூறையாடப்பட்டிருக்குமா?

மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தொடங்கும் 'துணிச்சல்' வந்திருக்குமா? அந்த அரசியல் கொள்ளையர்களை புரவலராக கொண்டு, தமிழ் அமைப்புகளும், உணர்ச்சிமிகு கவிஞர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் 'பிழைக்கும்' துணிச்சலும் வந்திருக்குமா? மேலே குறிப்பிட்ட அபகரிப்பில் சொத்து, உயிர் இழந்தவர்களில் எவராவது, அவர்களின் குடும்பத்தினராக இருந்திருந்தால், அந்த 'தன்மான கேடான துணிச்சல்', அவர்களுக்கு வந்திருக்குமா? பணம் சம்பாதிக்க, தன்மானம் இழந்து வாலாட்டும் 'நாய்களாகவும்', பணத்தைத் தவிர, அறிவு, நேர்மை, உண்மை உள்ளிட்ட எவற்றையும் மதிக்கத் தெரியாத 'கழுதைகளாகவும்', தமிழ்நாட்டில் 'வாழ்வியல் புத்திசாலிகளின்'(?) எண்ணிக்கையும் வளர்ந்திருக்குமா?

'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'வளர்ந்து', 'சசிகலா குடும்ப அரசியல்' வலைப்பின்னலில் இடம் பெற்று, 'அதிவேக பணக்காரரான பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம், 'வாழ்வியல் முன் மாதிரி'(Role Model?) ஆக‌, என்னைப் போன்று, உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்வது 'முட்டாள்த்தனம்' என்று எனது குடும்பத்திலும், சுற்றத்திலும், தமிழ்நாட்டில் கணிசமான தமிழர்கள் மத்தியிலும் 'பலர்' மதி மயங்கி, பயணித்து வருவது, நடந்திருக்குமா? அந்த போக்கில் தமிழ்நாடு பயணித்து, தலை குனிவான 'சசிகலா பினாமி ஆட்சி'யானது அரங்கேறியிருக்குமா? ‘ (http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post.html ) 'பணத்தை 'தெய்வமாக' கருதி, தமிழர்களில் கணிசமானோர் தலைகுனிவாக வாழத் தொடங்கியுள்ளார்கள்', என்பதை வெளிப்படுத்தியுள்ள ‘சமூக அபாய எச்சரிக்கையே’ சசிகலாவின் பினாமி ஆட்சியாகும். 'பெரியாரின்' பகுத்தறிவானது, அதற்கு துணை போவதானது, உலக அளவில் பகுத்தறிவுக்கே தலைகுனிவாகும்.

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் ஊடுருவி, 'இந்தியாவிற்கு எதிராக' அப்போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி, வெறுப்புக்கும், கண்டனத்திற்கும் உள்ளானது.

ஆனால் அடுத்து நடக்கும் மாணவர், இளைஞர்கள் போராட்டத்தில்;

'பெரியார் பொம்மைகளை உடைத்தல், பெரியார் படங்களை எரித்தல்' போராட்ட அவசியம் குறித்து பிரச்சாரம் நடந்தால்;

அப்போராட்டமானது எதிர்பாராத மிகுந்த‌ ஆதரவுடன் அரங்கேறினால் வியப்பில்லை: 'பெரியார் கட்சிகள்' சசிகலா குடும்ப அரசியலை ஆதரிக்கும் போக்கு தொடர்ந்தால்.

“நமது பார்வை முற்றிலும் இனநல பொதுநலப் பார்வையே - தந்தை பெரியார் பார்வையே!” (http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-condemns-union-government-10/slider-pf221468-273788.html) என்று அறிவித்து, 'சசிகலா பினாமி ஆட்சியை' கி.வீரமணியும் ஆதரிக்கிறார்; சுப்பிரமணிய சுவாமியும் ஆதரிக்கிறார்; ஜெயேந்திரரும் ஆதரிக்கிறார்.( http://www.dinamalar.com/news_detail.asp?id=1726233 & ஜீனியர் விகடன் 2.4.17) மூன்று பேருமே ஜெயலலிதாவின் ('சமூகநீதி காத்த வீராங்கனையின்') மர்மமான மருத்துவம் மற்றும் மரணம் பற்றிய, சி.பி.அய் விசாரணை கோரிக்கையை ஆதரிக்கவில்லை. அதே போல, சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து ஜெயேந்திரர் உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவருமே விடுதலை ஆன பின், சங்கரராமனை கொலை செய்தது யார்? என்ற விசாரணை நடந்து, உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தால் தான், தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி (Rule of Law) இருப்பதாகும், என்ற கவலையும், அந்த மூன்று பேருக்குமே (அந்த மூன்று பேரின் -  இந்துத்வா ஆதரவு/எதிர்ப்பு - ஆதரவாளர்களுக்குமே) இருப்பதாக தெரியவில்லை. 'எல்லாம் தந்தை பெரியார் பார்வையே!' என்றால், 'பெரியார் பொம்மைகளை உடைத்தல், பெரியார் படங்களை எரித்தல்' போராட்டமானது, அவசியம் ஆகாதா? (' வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.htmlபேராசிரியர்களும், துணை வேந்தர்களும் கட்சித் தலைவர்கள், முதல்வர்கள் காலில் விழுந்து வணங்கும் நாடாக தமிழ்நாடு உள்ளது. ரசிகர்கள் நடிகர்களுக்கும், கட்சித் தொண்டர்கள் தலைவர்களுக்கும் கடவுளர்களாகக் ‘கட் அவுட்வைத்து பாலாபிசேகம் செய்வதைக் குறை சொல்ல முடியுமா? (‘வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html )


எளிமையின் இலக்கணங்களாக வாழ்ந்த 'பெரியார்' ஈ.வெ.ரா  அவர்கள் இடத்தில் கி.வீரமணியும், காஞ்சி 'மகா பெரியவர்' சந்திரசேகரர் (http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_10.html அவர்கள் இடத்தில் ஜெயேந்திரரும், இருப்பதானது, தமிழ்நாட்டில் பிராமண, பிராமணரல்லாதோர் என்ற வேறுபாடின்றி, ஒரே வகை சமூக சீரழிவில் சிக்கியுள்ளதன் வெளிப்பாடா? அதனை வெட்ட வெளிச்சமாக்கியது, 'சசிகலா பினாமி ஆட்சியா'? என்பதும் ஆய்விற்குரியதாகும். (‘திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக‌ செயல்நெறி மதகுகள் (2); பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.htmlதமிழ்நாட்டில், திராவிடர்/திராவிட கட்சிகள் வேர் பிடிக்கும் முன்,  முஸ்லீம்களிலும், பிராமணர்கள் உள்ளிட்ட இந்து சாதிகளிலும், தத்தம் 'ஆச்சார' நெறிமுறைகளை கடை பிடித்து, அதே நேரத்தில் 'சுயலாப நோக்கற்ற' இயல்பான அன்புடன், சாதி, மதம் கடந்து பழகிய போக்கில், தமிழ்நாடு பயணித்தது தொடர்பான வியப்பூட்டும் தகவல்களை கீழ்வரும் நூல் மூலம் தெரிந்து கொண்டேன்.           

      நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - ‘என் கதை’

ரமண மகரிஷியும், காஞ்சி 'மகா பெரியவர்' சந்திரசேகரரும், அது போல, இயல்பான அன்புடன் தன்னுடன் பழகியதை, மறைந்த 'மயன் தொழில்நுட்ப அறிஞர்' கணபதி ஸ்தபதி (கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வடித்தவர்) என்னிடம் மிகுந்த நெகிழ்ச்சியுடன் விளக்கினார்; தனது வாழ்க்கை வரலாற்று நூலிலும் விளக்கியுள்ளார். (http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

"இன்று அவர் (சசிகலா) ஜெயலலிதாவை கொலை செய்து விட்டார் என்று கூறுகிறார்கள். வெட்கமாக இல்லையா, என அவர்களை கேட்கிறேன். இந்த விஷமத்தை பரப்புகிறவர்கள் யார் என்று தெரியும். அவர்கள் முகமூடியை ஊர், ஊராக சென்று கிழித்துக்காட்டுவேன்" என்று சூளுரைத்த (சசிகலா) நடராஜன், தம் பக்கம் தவறு இல்லையென்றால், அது தொடர்பான சி.பி.ஐ விசாரணையை எதிர்க்க வேண்டியதில்லை. (‘‘துக்ளக்கும், சசிகலா நடராஜனும்;  'வின்னர்' திரைப்பட வடிவேலு பாணியில் நடராஜன்‘ ; http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_18.html & http://tamil.oneindia.com/news/tamilnadu/questions-about-jayalalithaa-death-poes-garden-276238.html & Jayalalithaa's discharge summary released by TN govt: Crucial questions regarding her death still unanswered http://www.firstpost.com/india/jayalalithaas-discharge-summary-released-by-tn-govt-crucial-questions-regarding-her-death-still-unanswered-3321442.html )

'திருச்சி பெரியார் மையம்' ஒளிவட்டமானது, வழக்கறிஞர் தஞ்சாவூர் பாண்டியன் சசிகலா குடும்ப அரசியல் வலைப்பின்னலில் இடம் பெற்று, 'அதிவேக' பணக்காரராக உதவியிருக்கிறது, என்று நான் சந்தேகிக்கிறேன்.

இந்தியாவில் சட்டம் பாரபட்சமின்றி செயல்பட்டிருந்தால், சிறை சென்றிருக்க வேண்டிய வழிகளில் தான்;

வழக்கறிஞர் தஞ்சாவூர் பாண்டியன் சசிகலா குடும்ப அரசியல் வலைப்பின்னலில் இடம் பெற்று, 'அதிவேக' பணக்காரராகியுள்ளார்; அந்த போக்கில் (அந்த பணபலத்துடனும், அந்த பண பலத்தில் தமது எடுபிடிகளுடனும், 'ஆம் ஆத்மி கட்சியில்' முக்கியத்துவம் பெற, அதே 'திருச்சி பெரியார் மையம்' ஒளிவட்டம் முக்கிய பங்காற்றி) பயணித்ததாலேயே, கடந்த பாராளுமன்ற தேர்தலில், 'ஆம் ஆத்மி கட்சியின்'  மாநிலப் பொறுப்பாளராக செயல்பட்டார்;

என்பது தொடர்பான, சி.பி.ஐ விசாரணைக்கு உதவக் கூடிய தகவல்கள் என்னிடம் உள்ளன.

தம் பக்கம் தவறு எல்லை என்று வழக்கறிஞர் தஞ்சாவூர் பாண்டியன் என்று கருதினால்;

அவரும் ( சசிகலா) நடராஜனை போல, சி.பி.அய் விசாரணைக்கு உட்படுவதே சரியாகும்.

விசாரணையில் இருவருமே குற்றம் அற்றவர்கள் என்று நிரூபணமானால்;

அந்த இருவர் மீதும் சந்தேகப் பட்டதற்கு, நான் மன்னிப்பு கேட்க வேண்டியதும், எனது சமூக கடமையாகும்.

பல்வேறு தரப்புகளில் வெளிப்பட்டு வரும் கோரிக்கைகள் காரணமாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை மற்றும் மரணம் தொடர்பான, சி.பி.அய் விசாரணை தொடங்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் வழக்கறிஞர் தஞ்சாவூர் பாண்டியன் மீது மேலே குறிப்பிட்ட சி.பி.ஐ விசாரணை தொடங்க வேண்டுமானால், தகுந்த தடய‌ங்களுடன் எவரும் புகார் செய்ய, சி.பி.ஐ இணையதளத்தில் வழி இருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டின் 'ஆம் ஆத்மி கட்சி' மாநில பொறுப்பாளராக அவர் செயல்படுவது அறிந்தவுடன், சி.பி.ஐ-இல், புகார் கொடுக்கலாமா? என்று யோசித்தேன்.

அவ்வாறு செய்தால், அது ஒரு சமூக குற்றத்திற்கு எதிரான எனது செயலாக கருதப்படாமல், தனிமனித விரோதமாக கருதப்படும் என்பதால், புகார் செய்யவில்லை. அதே காரணத்தால், எனது புகாரிலிருந்து தப்பித்துள்ள இன்னொரு நபர், இன்று மோடி ஆட்சியில், டெல்லியில் உயர் அதிகாரியான( Dr. Josephine R. Little Flower G Nursing Advisor; http://nursingandmidwifery.gov.in/contactus.html#.WL82STuGPIU ) ஜோசப்பின் ஆவார். பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல் ஒழிப்பானது, பாரபட்சமின்றி செயல்பட்டால், அந்த இருவருமே சிறை செல்ல நேரிடும், என்பதும் எனது கணிப்பாகும். அத்தகையோர் எல்லாம் சிறை செல்ல தொடங்கினால், தமிழ்நாடு மீட்சி திசையில் பயணிக்க தொடங்கும், என்பதும் னது ஆய்வு முடிவாகும்.

தராதரம் தெரியாமல், எனது வீட்டிற்குள் அனுமதித்தது தவறு, என்று என்னை வருத்தப்பட வைத்துள்ளவர்கள், தஞ்சாவூர் பாண்டியனும், ஜோசப்பினும் ஆவர். ஆனால் அந்த தவறையும் நான் செய்திருக்கவில்லையென்றால், 'பெரியார் சமூக கிருமி'களாக யார், யார், எந்த சமூக செயல்நுட்பத்தில் வள‌ர்ந்துள்ளார்கள்? அந்த சமூக சூழலில் எனது உறவுகளில், 'பணமே தெய்வம்' என்று பயணிப்பவர்கள் யார்? என்றும் கண்டுபிடித்திருக்க முடியாது. எனவே நாம் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்தால், 'தீதிலும் ஒரு நன்று வெளிப்படும்' என்பதும், நான் அனுபவபூர்வமாக கற்ற பாடமாகும்.  'தமிழ்நாட்டில் 'ஆதிக்க' அளவில், குடும்பத்திலும், சமூக வட்டத்திலும், சமூகத்திலும் நடக்கும் தவறுகளைத் தடுப்பதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ, வலிமையற்றதாக சமூக செயல்நெறி மதகுகள் உள்ளன.' என்ற எனது கண்டுபிடிப்பிற்கான தூண்டுகோல்கள், அந்த இருவருமே ஆவர். (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.htmlஎனவே தமிழ்நாட்டில் 1944-இல், 'இனம்' என்ற சொல்லின் பொருள் திரிந்து, அரங்கேறிய பாதகமான சமூக மடைமாற்றத்தை, நான் கண்டுபிடிக்கும் ஆய்வில் என்னை தூண்டி, அந்த இருவரும் 'திராவிடர்/திராவிட' இயக்க வரலாற்றில் இடம் பெற வேண்டியவர்களாகி விட்டார்கள். 



எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில், நான் 'பெரியார் சமூக கிருமிகளாக' அடையாளம் கண்டவர்களில்;


1944இல் இளைஞர்களாயிருந்து, 1970களின் கடைசியில் நான் பெரியார் இயக்கத்தினுள் நுழைந்து, எனக்கு அறிமுகமானவர்களில் எவரும் கிடையாது. 1947க்குப் பின் வசதியான/வசதி குறைவான குடும்பங்களில் பிறந்து, ஒழுங்குடனும், பொறுப்புடனும் நன்கு படித்து, பெரியார் ஆதரவாளர்களாக, வளர்ந்தவர்களில் எவரும் கிடையாது. வசதி குறைவான குடும்பத்தில் பிறந்து, படிக்கிற காலத்தில் 'காலித்தனமாக' இருந்து கொண்டு, அல்லது 'காலிகளின் வால்கள் நண்பர்களாக' இருந்து கொண்டு, 'பெரியார்'' ஆதரவாளர்களாக, வாழ்வை 'அனுபவித்து', அதன் மூலம் பெற்ற‌ 'அறிவின்' துணையோடு, 'திராவிட அரசியல் கொள்ளைக் கும்பலுடன்' கூட்டு சேர்ந்து, 'குறுக்கு வழிகளில்', 'பெரியார் சமுக கிருமி' செயல்நுட்பத்தில், 'அதிவேக பணக்காரர்களாவதோடு, தமது சமூக வட்டத்தில், அந்த 'தனித்துவமான' கள்வர் நோயையும், அவர்கள் பரப்பி வருகிறார்கள்; சமூகத்தில் உள்ள அறிவுக்கு எதிரான உணர்ச்சிபூர்வ போக்குகளின் துணையோடும், ('ஊழல் எதிர்ப்பு அலையில்' மோடி பிரதமரான பின்னரும்) அரசின் ஊழல் ஒழிப்பில் உள்ள ஓட்டைகளின் துணையோடும். ( http://tamilsdirection.blogspot.in/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html  & http://indiafacts.org/lessons-from-bjps-bihar-election-fiasco/ & https://www.pgurus.com/now-ten-cases-against-chidambaram-family-what-is-cbi-ed-cbdt-delhi-police-doing-time-for-pm-to-intervene/ )

தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா அவர்கள், 'இனம்' தொடர்பான மேற்கத்திய சூழ்ச்சியில் சிக்கி, பழந்தமிழ் இலக்கியங்களின் அறிவுச் செல்வத்தை புறக்கணித்து;

மனிதருக்கு பணிந்து சேவகம் செய்ய வேண்டிய புலன்களை எல்லாம், 'மேற்கத்திய முற்போக்கு பகுத்தறிவு' பார்வையில், 'விடுதலை' செய்ய முயன்றதன் விளைவாகவே;(http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html  & http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html  & http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html  & http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html  & http://tamilsdirection.blogspot.sg/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.htmlஅகத்தில் 'சுயலாப கள்வரான' மனித மிருகங்கள் எல்லாம், 'மேற்கத்திய முற்போக்கு' முகமூடிகளுடன் வளர்ந்து, தமிழ்நாட்டை சீர்குலைத்து, கீழ்வரும் கேள்விகள் எழ, காரணமானார்களா? 

இன்று தமிழ்நாட்டில் பணம் சம்பாதிக்க, தன்மானம் இழந்து வாலாட்டும் 'நாய்களாகவும்', பணத்தைத் தவிர, அறிவு, நேர்மை, உண்மை உள்ளிட்ட எவற்றையும் மதிக்கத் தெரியாத 'கழுதைகளாகவும்' வாழும் தமிழர்கள் அதிகரித்து வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தம் பக்கம் தவறு இல்லாததால், ஆட்சேபணையில்லை என்று தஞ்சாவூர் பாண்டியன் பகிரங்கமாக அறிவித்தால், நான் புகார் கொடுப்பேன்; 'பெரியார்' தியாகத்தையும், 'திருச்சி பெரியார் மையம்' தியாகத்தையும் இழிவு படுத்தும் சமூக குற்றம் புரிந்துள்ளதால்.

இல்லையென்றால், 'இயற்கை' வழியில் அவர் ஏற்கனவே அனுபவித்து வரும் தண்டனைகளுடன் சேர்ந்து, மேலே குறிப்பிட்டபடி துவங்க உள்ள சி.பி.ஐ விசாரணையின் போது, அந்த தேடலில், 'சசிகலா குடும்ப வலைப் பின்னலில்' ஏதேனும் தடயம் சிக்கி, அவரும் விசாரணை வளையத்திற்குள் வந்து, அவரும் அவரின் எடுபிடிகளும் தண்டிக்கப்படுகிறார்களா? என்று வேடிக்கை பார்ப்பதில் கூட எனக்கு உண்மையிலேயே விருப்பமில்லை. அவர்களையெல்லாம் 'கெட்ட கனவாக' கருதி, மறந்து, எனது ஆய்வுகளில் நான் பயணிப்பதே, எனது விருப்பமாகும். (http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html

ஏனெனில், எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்புகள் ஏற்படுத்திய எவரின் மீதும் பழிவாங்கும் நோக்கமின்றியும், அவர்கள் என்னிடம் உதவி எதிர்பார்த்தால், இயலுமானால் உதவியும், அவர்களை இயன்றவரை புண்படுத்தாமல் எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றியும், நான் பயணித்து வருவதை, 'அவ்வாறு' இழப்புகள் ஏற்படுத்தியவர்களே அறிவார்கள்.


'சமூக ஒப்பீடு தொத்து நோயில்' (Social Comparison Infection) சிக்கி, 'பாதுகாப்பின்மை'க்குள்ளாகி (insecurity) பயணிக்கும் 'திராவிட மனநோயாளியாக' வாழாமல்;


என்னிடம் இருப்பதில் திருப்தியுடன், 'உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்' (Passions) வாழ்வதே, எனது வெற்றியின் இரகசியமாகும். ‘சாதாரண மனிதராக வாழ்வதில் உள்ள‍ - இயல்பான இன்பங்களை அனுபவிக்கும் ‘சுதந்திரம், ‘முக்கிய நபராக(VIP) வாழ்பவருக்கு கிடைக்காது……… அந்த 'சுதந்திரத்திற்கும்' கீழ்வரும் ஆபத்தும் இருப்பதால், அது தொடர்பாக எச்சரிக்கையுடன் பயணிக்க, இப்போதே திட்டமிட்டு வருகிறேன்.


கி.முவில் வாழ்ந்த விட்ரிவியஸ்(Vitrivius; https://en.wikipedia.org/wiki/Vitruvius) தொடங்கி, 2000 வருடங்களாக, நவீன காலம்(Modern era) வரை மேற்கொண்டு வரும் முயற்சிகளில் முதல் முறையாக‌, கட்டிடக்கலையில் (Architecture)  உறைந்துள்ள இசையை (Frozen Music) பிரித்தெடுத்து, கணினி வழி வெளிப்படுத்தும் 'லாஜிக்கை'(Logic), எனது வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் ஆய்வு குழு கண்டுபிடித்துள்ளது; நிரூபிக்கப்பட்டுள்ளது (Validated); 'காப்புரிமைக்கான' (Patent) முதல் கட்டம் கடந்து, காப்புரிமை எண் (Patent Number) பெற்று, அடுத்த கட்டத்தை நோக்கி, பயணிக்கிறது. மத்திய அரசின் நிதி உதவியில், திருச்சி NIT-இல் நடந்து வருவதால், அதை ஊடகத்தில் வெளிப்படுத்துவதை நான் தடுக்க முடியாது; அடுத்த கட்டமாக, கணினி வழி மென்பொருள் (Application Software) உருவாக்கும் ஆய்வினையும் தொடங்க வேண்டி இருப்பதால்.............


நமது புலன்கள் அடிமையாக, நமக்கு பணிந்து சேவகம் செய்ய வேண்டிய திறமை நமக்கு இருந்தால், நாம் 'பொறிவாயில் ஐந்தவித்தான்' (திருக்குறள் 6,) என்ற வகையில் வாழ்பவர்கள் ஆவோம். 'அவித்தல்' என்பது 'அடக்குதல்' ( subdue) ஆகும்.

நமது புலன்களுக்கு நாம் சேவகம் செய்ய ஆரம்பித்தால், நாளடைவில், நம்மையறியாமலேயே, நாம் ச‌முகத்திலிருந்தும் இயற்கையிலிருந்தும் வெளிப்படும் இன்பங்களை அனுபவிக்கத் தெரியாத, - இயற்கையான நமது இயல்பிலிருந்து மாறிய‌ - மேற்குறிப்பிட்ட‌, பணம் சம்பாதிக்க, தன்மானம் இழந்து வாலாட்டும் 'நாய்களாகவும்', பணத்தைத் தவிர, அறிவு, நேர்மை, உண்மை உள்ளிட்ட எவற்றையும் மதிக்கத் தெரியாத 'கழுதைகளாகவும்' வாழ நேரிடும்.

தமிழில் 'இனம்' என்ற சொல்லின் பொருள் திரிந்து, 1944-இல் நேர்மையான உழைப்பு, சுய சம்பாத்தியம், ஆகிய திறமைகளும் ஆர்வமும், 'இயல்பிலேயே' இல்லாத சிற்றின மனிதர்கள் எல்லாம், பொதுவாழ்வு வியாபாரிகளாக வளர்ந்ததன் விளைவுகளாக, இன்று நம்மிடையே 'நாய்களாகவும், கழுதைகளாகவும்' உலவுபவர்களை, அடையாளம் கண்டு ஒதுக்கினால் தான்;

நமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் நாம் வாழ்ந்து சாதனைகளும் படைக்க‌ முடியும், என்பதும், நான் அனுபவபூர்வமாக கற்ற பாடமாகும். 'திராவிடர், திராவிட' குழப்பங்களில் சிக்காத சாதாரண மனிதர்கள் எல்லாம், மேற்குறிப்பிட்ட திரிதலுக்குள்ளாகாத, 'இனம்' ஆகிய மனிதர்களாக தான், இன்றும் வாழ்கிறார்கள்.

இனம் இனத்தோடு சேரும் என்ற இயற்கை விதியின்படி, சமூக ஒப்பீடு நோயில் சிக்காமல், நமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் நாம் வாழும்போது, நமது சமூக வட்டமானது, அந்நோயாளிகளிடமிருந்து விலகி, நம்மைப் போன்றே வாழும் மனிதர்களை உள்ளடக்கிய சமூக வட்டமாக மாறுவதும், இயற்கை விதி போலவே நடைபெறுகிறது என்பதும், எனது அனுபவமாகும்..’(“இன்பத்தைத் திருடும் ஒப்பீடு"; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

No comments:

Post a Comment