Sunday, November 27, 2016



காலனி ஆட்சியின் நலன்களுக்காக, ‘செயற்கையாக’‌  அட்டவணைப்படுத்திய; 

எனது சாதி அடையாளத்தை தொடருவதில், எனக்கு உடன்பாடில்லை (1)




NOTE: Due to blog tech problem, change 'in ' in the links to 'com' to open the links.

எனது சாதி 'நத்தமான்' என்றும், 'நத்தமான், மலையமான், சுருதிமான்'  ஆகிய மூன்று பிரிவினரும், இன்று 'உடையார்' என்ற அடையாளத்திலும், அவர்களோடு 'மூப்பனார்' என்ற பிரிவும் சேர்ந்து, 'பார்க்கவகுலம்' என்றும், இன்றைய சாதி சங்கங்களின் 'அணி வகுப்பில்' இடம் பெற்றுள்ளனர்; என்பது எனது (மறைந்த) தந்தை என்னிடம் தெரிவித்தவை ஆகும்: 

எனது சாதிச் சான்றிதழில் 'பார்க்கவ குல நத்தமார்' என்று உள்ளது; 'பாரி' என்ற மன்னருக்கும், 'பார்க்கவ குலம்' என்பதற்கும் உள்ள தொடர்பு பற்றி, ஏதும் சான்று இருப்பதாக, எனது தேடலில் வெளிப்படவில்லை.

இன்று நகரங்களில் ஊழல் வழிகளில், விரும்பிய 'சாதிச் சான்றிதழை' வாங்கி வருகிறார்களா? அந்த 'சாதிச் சான்றிதழை' சரி பார்க்கும்(verification) சார்பற்ற சமூக செயல் நுணுக்கமும் (Objective Social Mechanism)  சீர் குலைந்துள்ளதா? என்பதும் ஆய்விற்குறியதாகும்.

'நத்தமான்', மலையமான், சுருதிமான்', 'கள்ளர், மறவர், அகமுடையார்', 'பள்ளர்' ஆகிய பிரிவினரை ஒரு குழு அடையாளத்திற்குட்படுத்தும் சான்றும் இருக்கிறது.

“ Pallis, Agambadiyars, Surudimans,Malaiyamans, Nattamans of the western hilly and forest area north of Kaveri, and Kallara and perhaps Maravars too of the semi-dry area south of the same river, seem to have composed the army during the Chola period “
Page130 ‘ South Indian Scoiety in Transition; Ancient to Medieval’
By Noboru Karashima- OXFORD University Press 2009

மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வரவழைக்கப்பட்டவர்களில்;

சோழ அரசில் இராணுவத்தில் பணியாற்றிய;

'பள்ளர்', காலனிய சூழ்ச்சியின் தொடர்ச்சியான, தலித் சாதியினராக வலம் வருகின்றனர்;

'கள்ளர், மறவர், அகமுடையார்', காலனிய சூழ்ச்சியின் தொடர்ச்சியான, 'முக்குலத்தோர்' சாதியினராக வலம் வருகின்றனர்;

'நத்தமான்', மலையமான், சுருதிமான்', ஆகிய பிரிவினர், காலனிய சூழ்ச்சியின் தொடர்ச்சியான,  இன்று   'உடையார்‍ பார்க்கவ குல'  சாதியினராக வலம் வருகின்றனர்.

அதாவது, இன்றைய சாதி சங்கங்களின் 'அணி வகுப்புகளின் அடையாளங்கள்' எல்லாம், காலனி சூழ்ச்சியின் தொடர்ச்சியா? என்ற, அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டிய கட்டம் வந்து விட்டது. 

"சங்க காலத்தில், அனைத்து தொழிலும் ஈடுபட்டவர்கள் எல்லாம் பறை வகை இசை கருவிகளை இசைத்து, புறநானூறு (335:7) கூறும் இலக்கணப்படி, 'பறையராக', குடிமகனாக‌ (citizen) வாழ்ந்து வந்துள்ள பின்னணியில், 'பறை' எப்போது, 'தீண்டத்தகாத' தாள இசைக்கருவியானது? 'பறையர்' எப்போது தீண்டத்தகாத சாதியினராக 'அடையாள' படுத்தப்பட்டனர்?" என்பதையும்;

"இன்றுள்ள 'சாதி அமைப்பு' என்பதானது,  காலனிய ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டு, ஆனால் காலங்காலமாக இருந்து வந்த ஒன்றாக, படித்தவர்களும் ஏமாறும் அளவுக்கு பரப்பப்பட்ட சூழ்ச்சியா? என்ற கேள்வியை எழுப்பும் சான்றுகளை"யும்;

ஏற்கனவே பார்த்தோம்.


1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறி, 'சுயமரியாதை' இயக்கம் தொடங்கிய ஈ.வெ.ரா அவர்கள்;

'சாதி', 'இனம்' தொடர்பான காலனிய சூழ்ச்சி வலையில் சிக்கி, 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி, பயணித்ததன் விளைவாக 1967இல் 'திராவிட முன்னேற்ற கழகம்' ஆட்சிக்கு வந்த பின், 'திராவிட' கட்சிகளின் ஆட்சிகளில், தமிழர்கள் தமது இயல்பான சுயமரியாதையையும் இழந்து, பணம் சம்பாதிக்க எவர் காலிலும், எப்போதும் விழ 'போட்டி போடும்', 'அவமரியாதை' தமிழர் நோயை வளர்த்த விளைவில் முடிந்துள்ளதா?


ஒழுக்கக்கேடான 'தரகு' மற்றும் 'குறுக்கு வழி' 'அதிவேக' பணக்காரர்களை 'மதித்து' நெருக்கமாகும் அசிங்கத்தில், படித்தவர்கள், பாமரர்கள் என்ற வேறுபாடின்றி, அது முடிந்துள்ளதா? என்ற கேள்விகள் எழுந்துள்ள சமூக சூழலில்;


'பெரியார் சமூக கிருமிகளால்' எனது குடும்பத்தில் ஏற்பட்ட சீர்குலைவிற்குப்பின், 



ஒரு மனிதரின், தராதரம், பாரம்பரியம், பண்பாடு பற்றிய கவலையின்றி, அவர் ஒழுக்கக்கேடான, சட்ட விரோத வழிகளில், 'அதிவேக' பணக்காரரானதைப் பாராட்டி, 'பணமே தெய்வம்' என்ற போக்கில், பயணிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை, சமூக செயல்நெறி மதகுகளை((Social Functional Checks) ) சீர் குலைக்கும்,  சமூக குற்றவாளிகளாக கருதி, ஒதுக்கி வாழ்கிறேன்.
 (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html

'அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த உதயகுமாரோ, அச்சுறுத்தல் மற்றும் கொலை மூலம் சொத்தையும் அல்லது கூடுதலாக‌ உயிரையும் இழந்த கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர், ஏ ஆர் ரகுமான், நிகழ்காலத்தில் சத்யம் தியேட்டர்ஸ் வரை பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில், நமது குடும்பத்தினர் இல்லையே என்ற நோக்கில், அகத்தில் சீரழிந்து, புறத்தில் 'யோக்கியர்களாக'  வேடமிட்டு, ஆண்ட, ஆளும் கட்சிகளின் தலைவர்களை ஆதரித்த 'பெரியார்' ஆதரவாளர்களே, தமிழின் தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமான 'முதன்மை சமூகக் குற்றவாளிகள்' என்பதே, எனது ஆய்வு முடிவாகும்.

என்னுடன் குடும்ப உறவில் தொடரும், சிங்கப்பூரில் வாழும் எனது மகனைத் தவிர்த்து; 

சமூக நோயால் விளைந்த எனது குடும்ப சீர்குலைவை தனிப்பட்ட பிரச்சினையாக அணுகாமல், சமூக சீர்குலைவிற்கு எதிரான போரில் எனது பங்களிப்பாக:

தமிழ்நாட்டில், 'பெரியார்' இயக்கத்தில் 'சுயலாப' நோக்கின்றி, எனது அறிவு உழைப்பு, உடல் உழைப்பு, பணம், உள்ளிட்ட இன்னும் பல கஷ்ட நஷ்டங்களின் 'பலனாக', 'அவ மரியாதை' தமிழராக இருக்க விரும்பாததால், நான் 'குடும்ப உறவற்ற, சுயசம்பாத்தியத்தில், உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions)  தமிழ்நாட்டில் வாழும், 'சுயமரியாதையுள்ள‌ அனாதை' (De-linked from the blood relations in India) என்று அடையாளம் பெறலாம்; அல்லது இப்போது எனக்கு பாதுகாவலர்களாக இருப்பவர்கள் அடையாளத்தில், நான் 'பறையர்' என்ற அடையாளம் பெறலாம்; சாகும் போது, எனக்கு ஒரு அடையாளம் தேவை என்றால், அது 'இந்து சைவ‌ பறையர்' என்று இருப்பதையே நான் விரும்புவேன்; எனது இசை ஆராய்ச்சிகள் மூலம் பெற்ற அறிவின் காரணமாகவும்.( ‘Experiencing God, the Infinite, through Resonance’; http://veepandi.blogspot.com/ இக்கட்டுரை தொடர்பான அறிவுபூர்வ விமர்சனத்தை, ஆங்கில அறிவுள்ள 'பெரியார்' கொள்கையாளர்களிடமிருந்து வரவேற்கிறேன். Email:pannpandi@yahoo.co.in) மேற்கத்திய எழுத்தாளர்களும், கணிதத்திலும், 'பறையர்' என்ற சொல்லை தவறாக பயன்படுத்துவதை, உரிய சான்றுகளுடன் கண்டித்தும் பதிவு செய்துள்ளேன். (‘Can the ancient Tamil word ‘pariah’ be rescued from the misuse in the western world?’
http://tamilsdirection.blogspot.com/2016/09/can-ancient-tamil-word-pariah-be.html )

இன்று எனது பாதுகாவலர்களாக(guardians), நண்பர்களாக இருப்பவரில் எவரும் 'நத்தமான்' அடையாளத்தினராக இல்லை. "ஏன் இல்லை?" என்ற கேள்விக்கு,  எனது குடும்பம், உறவினர்கள் உள்ளிட்ட வட்டத்தில், எனது குடும்பத்தை சீர் குலைத்த, ஒரு 'பெரியார்' சமூக கிருமியின் பிரவேசத்தைத் தடுக்கும் வலிமையை, அது தொடர்பான சமூக செயல்நெறி மதகுகள் எவ்வாறு இழந்தன? என்ற எனது ஆய்வானது, விடையை வெளிப்படுத்தலாம்.

“ஒரு சமூகத்தில் 'செல்வாக்கான நபர்களில்' பெரும்பான்மையோரிடம் உள்ள 'இயல்பே', அந்த சமூகத்தின் இயல்பாக வெளிப்படும். சமூகத்தில் இயல்பில் 'சிற்றின' மனிதர்கள் எல்லாம், எண்ணிக்கையிலும் வலிமையிலும், சிறுமமாக (Minimum) இருக்கும் வரையில், அச்சமூகத்தில் ஊழலும், குற்றங்களும் சிறுமமாக இருக்க, ஓரளவு நிலையான சமநிலையில் (Stable Equilibrium), அச்சமூகமானது பயணிக்கும். 'சிற்றின' மனிதர்கள் எல்லாம், எண்ணிக்கையிலும் வலிமையிலும் அதிகரிக்க, சமூகத்தில் உள்ள 'நல்லின' மற்றும் 'சிற்றின' மனிதர்களின் இயல்புகளுக்கிடையே உள்ள சமநிலை சீர்குலைவும் (disrupted equilibrium), கொந்தளிப்பும்(turbulence), அச்சமூக இயல்பிலும் வெளிப்படும்.

சமூகத்தில்,  சமூகக் குற்றங்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் (Threshold)  இருப்பின், அச்சமூகம் சமநிலையில் இருக்கும். வரை எல்லையை தாண்டிய பின், கொந்தளிப்பு (turbulence) உருவாகும். வரை எல்லைக்கு மேல் (Threshold)   தாண்டல் நெடுக்கம் ( range above the threshold)  அதிகரிக்க, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே,  தற்கொலை,கொலை, கொள்ளை, வன்முறை உள்ளிட்ட சமூகக் குற்றங்கள் மூலமாக,  கொந்தளிப்பு அதிகரிக்கும். கொந்தளிப்புக் கட்டத்திற்கான (Turbulent phase)  வரை எல்லையை (Threshold)  அடைந்ததும், அடுத்த கட்ட சமநிலைக்கான மாற்றம் (Transition) துவங்கும் திருப்பு முனையை அடையும். இதற்கு மேலும் மோசமாக வாய்ப்பில்லை என்ற நிலையில், அந்த திருப்புமுனைக் கட்டத்தில் தமிழ்நாடு இருக்கிறது. “

( http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html) 

தமிழ்நாட்டில் அந்த கொந்தளிப்பு கட்ட உச்ச வரை எல்லையின்(Threshold) சிக்னலாக(signal);

"மனித உறுப்புகளில் 'அசிங்கம்' என்ற அணுகுமுறை  இல்லாத பழந்தமிழ் இலக்கியங்களை, தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி அணுகி;

மேற்கத்திய குறிப்பாயத்திற்கு (Western Paradigm) அடிமையாகி, தமிழையும், தமிழ் இலக்கியங்களையும், தமிழர்க்கு கேடேன்று தவறாக கருதி, 'திராவிட' இயக்கங்கள்  பயணித்தன் விளைவுகளா, சிம்புவின் 'பீப்' பாடலும், அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளும்? என்பது ஆய்விற்குரியதாகும்." 
(http://tamilsdirection.blogspot.com/2016/08/blog-post.html )

மேலே குறிப்பிட்ட கொந்தளிப்பான காலக் கட்டத்தில், சமூக சீரழிவு போக்கில் பயணிப்பவர்களை அடையாளம் கண்டு, தமக்கு நெருக்கமான சமூக வட்டத்திலிருந்து அகற்றாவிடில், அந்த சீரழிவு போக்கிற்கு, எதிர் நீச்சல் போடுபவர்கள் எல்லாம், கடுமையான விலை கொடுக்க வேண்டியதிலிருந்து தப்ப முடியாது. எந்தப் பக்கம் 'பலம்' வளர்கிறது? என்று ஊன்றி கவனித்து, தாவும் 'சமூக கிருமிகளை' ஒதுக்கவில்லையென்றால், நமக்கு தெரியாமலேயே, 'ஒட்டுண்ணிகளாக', நமது பலத்தை 'உறிஞ்சி', நம்மை பலகீனமாக்கும் விளைவிலிருந்தும், நாம் தப்ப முடியாது. திருச்சி 'பெரியார் மையத்தில்' நேர்மையான சுயசம்பாத்தியம் மூலம் வாழ்ந்தவரிடம், எனது குடும்பத்தை சீர் குலைத்த, ஒழுக்ககேடான வழிகளில் பணம் ஈட்டி, 'அதிவேக பணக்காரரான' பெரியார் சமூக கிருமியும், கூட்டாளி சமூக கிருமியும், 'உதவி' என்று கேட்டு, பணம் வாங்கி ஏமாற்றியதானது, அந்த வகையைச் சாரும்.

தமிழ்நாடு 'கொந்தளிப்பான கட்டத்தில்' இருப்பதன் காரணமாகவே, எண்ணற்ற குடும்பங்களில் 'வெடிக்கும்' பிரச்சினைகள் காரணமாக, மோசடி, வன்முறை, கொலை, தற்கொலைகள்  'அபரீதமாக' அதிகரித்து வருகின்றன.

கல்லூரி ஆசிரியர் சங்கத்திலும், 'பெரியார்' இயக்கத்திலும் நான் பங்களித்த காலக்கட்டங்களில், பொதுநோக்கில், என்னை சுற்றியிருந்தோர் 'பிரமிக்கும்' அளவுக்கு, வன்முறையையும் தேவைக்கேற்ப, பிரயோகித்த நான், எனது சொந்த பிரச்சினை என்று வரும்போது, இழப்புகளை பற்றிய கவலையின்றி விட்டுக் கொடுத்தே வந்துள்ளேன்.


'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'வளர்ந்த'(?) 'பெரியார் சமூக கிருமி'களையும், 'பணமே தெய்வம்' என்று வாழும் உறவினர்களையும், மேலே குறிப்பிட்ட 'கொந்தளிப்பான' காலக்கட்டத்தில், எனது குடும்பப் பாதுகாப்புக்கான வரை எல்லையைப் புரிந்து, அதற்கு அப்பால், அவர்களை வைக்காதது எனது தவறே ஆகும். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' (புறநானூறு;192) மனித உறவுகள் உள்ளிட்ட சமூகம் மற்றும் இயற்கையுடன் 'சுயலாப'நோக்கின்றி, பிறர் நம்மை 'ஏமாளி'யாக்கினாலும் கவலையின்றி, உண்மை, நேர்மை ஆகிய பண்புகளை 'எந்த கட்டத்திலும்' இழக்காமல் பயணிக்கும்போது, நாம் சந்திக்கும் துயரங்களும், அவமானங்களும், நம்மை அகத்திலும் புறத்திலும் 'நம்பமுடியாத' சிகரங்களை நோக்கி, பயணிக்கச் செய்யும், இயற்கையின் (கடவுளின், விதியின், 'டாவோவின்'-‘Tao’) சமூக செயல்நுட்பம் என்பதற்கு, எனது வாழ்க்கைப்பயணமே சாட்சியாகும்.
(http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html) 

அந்த பயணத்தில், 'நெருக்கடியான' கட்டங்களில், என்னை 'வலுவாக்கி'  கொள்ள, நான் நினைவு கூறும் குறள்:
'பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
 பற்றுக பற்று விடற்கு' (திருக்குறள் 350)


இந்த பதிவிற்காக, எனது பாதுகாவலர்களின், நண்பர்களின், அடையாளங்களை நினைவு கூர்ந்தால்;

'பறையர்', 'கோனார்', 'மருத்துவர்'(முன்பு சிகை அலங்காரம் தொழில் செய்த சாதி), 'பிராமணர்' (அதற்குள் எந்த பிரிவு என்பது தெரியாது), ரெட்டியார், 'தேவர்', செட்டியார், ஆசாரி ஆகியோரே எனது சமூக வட்டத்தில்; எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ள, சந்திக்க, நான் அனுமதித்துள்ள எனது பாதுகாவலர்கள், நண்பர்கள் ஆவர். வசதியிருந்தும் பொழுது போக்காக மாடு மேய்ப்பவர், பிரதமர் மோடிக்கு நெருக்கமான, புகழுடன் வாழ்ந்தாலும், தனக்கு வேண்டியவர்களின் தவறுகளையும், பொது அரங்கில் துணிச்சலுடன், நானறிந்த வரையில் கண்டித்த ஒரே எழுத்தாளர், மாநில அரசின் தலைமை செயலாளர்(Chief Secretary) மட்டத்தில் பணி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முதல், அமெரிக்காவில் உயர்ந்த வேலை கிடைத்து, விமான நிலையம் வரை சென்று, பின் சொந்த மண்ணின் நினைவால், வெளிநாட்டு வாய்ப்புகளை ஒதுக்கி, 'முன்மாதிரியாக'(Role Model)  பிறருக்கு உதவிகள் புரிந்து தமிழ்நாட்டில் வாழும் நிபுணர்(Expert),  வரை, பல்வேறு சமூக மட்டங்களில் உள்ள அவர்கள் எல்லோரும், மனித உறவுகளில் 'சுயலாப கள்வர்' நோய் இல்லாத, இயல்பான அன்பும், உண்மையும் நேர்மையும் மிக்கவர்கள் ஆவர். அவர்கள் சுயலாப நோக்கின்றி, எனது ஆய்வுகளை (R & D Projects) ஊக்குவித்து, உதவியும் வருபவர்கள்  ஆவர். வெளிப்படுத்தி கொள்ளாமலேயே, ஒருவரையொருவர் கூர்ந்து கவனித்து, 'முன்மாதிரியாக'(Role Model) பிறரிடம் இருப்பதை அடையாளம் கண்டு, அகவயப்படுத்தி, ஒவ்வொருவரும் அகத்திலும் புறத்திலும் வளர்ந்து வரும் சமூக வட்டத்தில் நான் வாழ்கிறேன்.

காலனி ஆட்சியில், காலனி ஆட்சியாளர்களின் நலன்களுக்காக, அவர்கள் அட்டவணைப்படுத்தியதன், நிகழ்கால  தொடர்ச்சியே, 'பார்க்கவ குல நத்தமான்' என்ற, எனது பிற்படுத்தப்பட்ட சாதி அடையாளமாகும். அதை தொடருவதில் எனக்கு உடன்பாடில்லை. 'தமிழர்', 'சாதி எதிர்ப்பாளர்', என்று புறத்தில் வெளிப்படுத்திக் கொண்டு, அகத்தில் சாதி உணர்வுடன் குடும்பம், சுற்றம் என வாழும் போக்கில், எப்போதுமே இருந்திராத எனக்கு, சங்க கால தமிழரிடையே இல்லாத, காலனி சூழ்ச்சியில் இன்று தொடர்ந்து வரும், சாதி அடையாளத்தை தொடர்வதில் விருப்பமும் இல்லை.  எனக்கு சரியெனப்படுவதை, எவர் மீதும் எப்போதும், நான் திணித்ததில்லை. சங்க இலக்கியங்களில், இசையில் புலமையுள்ளவர்கள் 'பறையர்' என்ற அடையாளத்தில், குடிமகன்' (Citizen) என்பதற்கான இலக்கணத்தில் இடம் பெற்றனர்.(புறநானூறு 335:7-8; http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html) எனது இசை ஆராய்ச்சி மூலம், நானறிந்த சைவத்தைப் பின்பற்றி வாழ்வதால், 'சைவ பறையர்' என்பதே எனது வாழ்வு அடிப்படையிலான (ipso facto)  அடையாளம் ஆகும்.

“தமிழர்களிடையே 'பண்பின்' அடிப்படையில் இருந்த 'இனம்' என்ற சொல்லை, 'ரேஸ்' (Race) என்ற பொருளில் திரித்து, 'திராவிடர் கழகம்' தோன்றாமல் இருந்திருந்தால், 'திருச்சி பெரியார் மையம்' தோன்றி, 'இழிவுக்கு இலக்கணமான' மனிதர்கள் மூலம், எனது சமூக வட்டம் சீர்குலைந்திருக்குமா? அந்த கேள்வியை ஒதுக்கி,  'அந்த'  பாதிப்பினை எனது தனிப்பட்ட பிரச்சினையாக கருதும் 'பெரியார்' கொள்கையாளர்கள் இருந்தால், அவர்கள் எல்லாம் 'சுயலாப'  நோக்கில், தமது 'நேர்மை வழிகாட்டியை' முடக்கி, புறத்தில் 'யோக்கியர்களாக' பயணிக்கும், மேலே குறிப்பிட்ட 'முதன்மை சமூகக் குற்றவாளிகள்'  ஆக மாட்டார்களா?  தமிழ்நாட்டில் குடும்பம், நட்பு உள்ளிட்ட உறவுகளில், 'பணத்துக்காக' சீர்குலைவுகள் அதிகரிக்கும் வேகத்தில், (திருச்சி 'அன்னை ஆசிரமம்' போன்ற நேர்மையான அமைப்புகள் மூலம் நானறிந்த வரையில்) முதியோர் இல்லங்களும், கைவிடப்பட்ட குழந்தைகளும், குடும்பங்களில் வன்முறை, கொலை, தற்கொலைகள் 'அதிவேகமாக' அதிகரித்து வருவதும் உண்மையா? சுயலாபங்களுக்காக குடும்பம், நட்பு உள்ளிட்ட உறவுகளை காவு கொடுக்கும் சமூக நோயில், இந்தியாவிலேயே, தமிழ்நாடு முன்னணியில் இருந்தால், அந்த நோயின் வளர்ச்சிக்கும், திராவிட இயக்க வளர்ச்சிக்கும், தொடர்பு உண்டா? என்ற ஆய்விலும், நானும் ஈடுபட தூண்டியது.”
(http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

“வீட்டில் சமையலறையில் வெறும் தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், திக்குச்சி தான் விரயமாகும். ஆனால் சமையல் வாயு சிலிண்டர் கசிந்து, வாயு நிரம்பிய நிலையில்,தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், வீடே எரிந்து சாம்பலாகும். அது போன்ற விபத்துகளும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன. 
(http://tamilsdirection.blogspot.in/2016/06/blog-post_19.html   )

சமூகத்தில் உணர்ச்சிபூர்வ பேச்சுகள் என்பவை மூலம், சமுகத்தில் சமூக எரிவாயுவை நிரப்பலாம். அதன்பின் எந்த பக்கத்திலிருந்தும்,  ‘வன்முறை’ என்ற தீக்குச்சியைக் கொளுத்தி போட்டு, சாதி, மதக்கலவரங்களை உண்டாக்குவது எளிது.

தோட்டக்குறிச்சி, நெற்குப்பை, ராஜபாளையம், போடி கலவரங்களை (திருச்சி பெரியார் மையத்தில் பங்களிப்பு வழங்கிய காலத்தில்) ஆய்வு செய்து, நான் கண்ட உண்மை அது. அந்த உணர்ச்சிபூர்வ பேச்சாளர்களோ, அவர்களது குடும்பத்தினரோ, சாதி, மத கலவரங்களில் பாதிக்கப்படுவதில்லை. மாறாக அதுவே பொதுவாழ்வு வியாபாரமாகி, அவர்களின் செல்வம் நம்பமுடியாத அளவிற்கு அதிகரிக்க வழி செய்கிறது. 
(http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

'சாதி' தொடர்பான காலனிய சூழ்ச்சி பற்றிய புரிதலின்றியே, ஈ.வெ.ரா அவர்கள் 'சாதி ஒழிப்பு' போராட்டத்தை முன்னெடுத்தாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.( குறிப்பு கீழே) 1944இல் தமிழில் 'இனம்' என்ற சொல் திரிந்து, உருவான‌ 'திராவிடர் கழகம்' மூலம் 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்களின் ஊடே, அறிவுபூர்வ விவாதங்களை பின் தள்ளி, உணர்ச்சிபூர்வ போக்குகள் அரங்கேறிய போக்கில், அரசியல் நீக்கத்துடன் (Depoliticize) அடையாளச் சிதைவும் விளைந்த சமூக செயல்நுட்பத்தில்;

தமிழ்நாட்டில் தமிழர்களிடையே சாதி வெறியும், அதனையும் மூலதனமாக்கிய பொதுவாழ்வு வியாபாரமும் வளர்ந்து
உச்சத்தை அடைந்து, 50 வயதுக்கும் அதிகமானவர்களிடமிருந்து அந்நியமாகி, மாணவர்களும் இளைஞர்களும் பயணிக்கத் தொடங்கியுள்ள போக்கில், கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் மரணவாயிலை நெருங்கி விட்டனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.('தமிழ்நாட்டில் அமாவாசைகளின் புரட்சியானது தொடங்கி விட்டது'

http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none.html

அறிவுபூர்வ விமர்சன போக்கைப் புறக்கணித்து, 'சுயலாப' நோக்கில் பயணித்து வரும் 'பெரியார்' கட்சிகளும், அந்த போக்கிலேயே 'மூழ்கி', அதே நிலையை அடைந்துள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். இனி மேலும் செலவு செய்வதில், அரசியல்ரீதியாக 'பலன்'(?) கிட்டாது என்று, அந்த போக்கில் பயணித்த தலைவர்கள் முடிவு செய்து, அதன் தொடர்ச்சியாக, ஆதாயத் தொண்டர்கள் பலத்தில் ஆடிய ஆட்டங்கள் எல்லாம், அடங்கும் காலமும் அதிக தொலைவில் இல்லை. அதன் தொடர்ச்சியாக, அரசியல் நீக்கமானது (Depoliticize) முடிவுக்கு வந்து, 50 வயதுக்கும் அதிகமானவர்கள் எல்லாம் ஒதுங்க, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான,  மாணவர்களும், இளைஞர்களும் முன்னணி வகிக்கும் புதிய அரசியலானது துவங்கவும் வாய்ப்பிருக்கிறது. உலகில் பல நாடுகளில் நடந்து வருவது போல, தமிழ்நாட்டிலும் அரசியல் கொள்ளையர்களின் வலைப்பின்னலானது சட்டத்தின் பிடியில் சிக்கி, அவர்களின் சொத்துக்கள் பறிமுதலாகி, அவர்கள் தண்டனைகளுக்குள்ளாவதும் சாத்தியமானால், வியப்பில்லை.

தமிழில் இப்ப இருக்கிற சாதி என்பது, வெள்ளைக்காரன் திணித்தது; 

தமிழில் 'சாதி'ங்கிறது பற‌வைகளுக்கும், (பெரும்பாணாற்றுப்படை 229),  நீர்வாழ் மிருகங்களுக்கும் ( தொல்காப்பியம் பொருள் 9; 44) தான் இருந்தது.

இப்ப 'உயர்ந்த சாதி'ங்கிற நினைப்பில் வாழ்பவர்களும்;

'தாழ்ந்த சாதி'ங்கிற நினைப்பில் வாழ்பவர்களும்;

அந்த (காலனி சூழ்ச்சியில் முளை விட்டு, இன்று 'பெரியார் சமூக கிருமி'களின் கூட்டுடன், வெளிநாட்டு நிதி உதவி N.G.Oக்களின் சூழ்ச்சியில் தொடரும்) 'சதி'யில சிக்கின, உயர்வு - தாழ்வு மோதலில் சிக்கி, எதிரெதிராக 'காட்சி' தரும் பொது வாழ்வு வியாபாரிகளை வளர்த்து, இழப்புகளுக்கு உள்ளாகும்,  'ஏமாளிகள்' என்பதும், என் கருத்தாகும். ('“நம் மூதாதையர் யாரும் செய்திராத அசிங்கத்தினை”;  
http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post_19.html )

குறிப்பு:

" 'பெரியார்' ஈ.வெ.ராவின் உள்ளீடுகளை(inputs) இரண்டு வகையாகப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமே. அவரின் நேரடி அனுபவ உள்ளிடுகளை அவர் திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுட்னும் தனது அறிவு செயல்வினைக்கு( processing)  உட்படுத்திய முடிவுகள், இன்றும் 'மக்கள் நலத்தில்' உண்மையான அக்கறை கொண்ட கட்சிகளுக்கு அரிய பாடங்களாகும்." என்பதையும்;

"அதே நேரத்தில் அவருக்கிருந்த கல்வி வரை எல்லைகள்(limitations)  காரணமாக, அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை-  நேரடியாக இன்றி மற்றவரைச் சார்ந்திருந்த-  உள்ளீடுகள் ஆகும். அந்த இரண்டாவது வகை உள்ளிடுகளின் அடிப்படையில்,அவர் வெளிப்படுத்திய கருத்துகளே 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்றவை தமிழர்க்குக் கேடேன்று, நோய் பிடித்த தாவரத்தின் நோய் மூலமாக அதன் ஆணி வேர்களையே அடையாளம் கண்டு சிதைத்த முயற்சிகளுக்கு வழி வகுத்தன. (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html )" என்பதையும்;

ஏற்கனவே பார்த்தோம். 
(http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) 

ஈ.வெ.ரா அவர்களின் பெண்ண‌டிமை தொடர்பான கருத்துக்களையும், வெளிவந்துள்ள  (published)  அறிவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மறுபரிசிலனை செய்ய வேண்டிய கட்டமும் வந்து விட்டது. 
(http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

No comments:

Post a Comment