Friday, May 15, 2015



தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, பெரியாரின் வரலாற்று மரணம் முன் நிபந்தனையாகி விடுமா?


'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்குட்படாத எந்த கொள்கையும் மரணமடைவதைத் தடுக்க முடியாது என்று பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். அது தனது கொள்கைக்கும் பொருந்தும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

எனவே பெரியாரின் கொள்கைகளையும்,நிலைப்பாடுகளையும் 'காலதேச வர்த்தமான'  மாற்றங்களுக்குட்படுத்தாமல் பயணிக்கும், பெரியார் கட்சிகளும், ஆதரவாளர்களும், பெரியாருக்கு எவ்வளவு பெரிய தீங்கிழைக்கிறார்கள்? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம். பிறர் தூண்டியோ, தாமாகவோ பெரியார் படத்தை செருப்பால் அடித்து, சிறுநீர் கழித்து, புகைப்படங்கள் வெளியிட்டவர்கள்,  கண்ணுக்கு தெரிந்து தீங்கிழைத்தவர்கள் ஆவர். மேற்குறிப்பிட்ட தீங்கானது, அதை விட ஆழமான,மோசமான தீங்காகாதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இன்று 'இந்துத்வா' ஆதரவாளர்களில் சிலர், பெரியாரை இழிவுபடுத்திவரும் போக்கானது, 1967க்கு முன், திமுகவினர் மேற்கொண்ட போக்குடன், ஒப்பிடக்கூடியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

'தமிழ்நாட்டு தேசியவாதிகளிடம் வெளிப்பட்ட இந்த, - தாம் எதிர்க்கின்ற நபரின் தியாகங்களை மதிக்காத‌ போக்கு- , 1944க்குப் பிறகுதான், திராவிட கட்சிகளிடமும் வெளிப்பட்டது. தாம் எதிர்க்கின்ற நபர் புரிந்த தியாகங்களை மறந்து, உணர்ச்சிகர பேச்சில், எழுத்தில் அவரை, குறிப்பாக பெரியார் ஈ.வெ.ராவை, இழிவுபடுத்துவதில் தேசியவாதிகளை 1967க்கு முந்தைய தி.மு.கவினர் விஞ்சினர்; இப்போது தி.மு.கவினரை, இந்துத்வா கட்சியினரில் சிலர் விஞ்சி வருகின்றனர்.' 
(http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_25.html)

"1944இல் விதைக்கப்பட்ட 'உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகளை', (பிற்கால வாரிசு அரசியலுக்கு வழி வகுத்த) 'தனிநபர் விசுவாசமாக' மாற்றி, 1965இல் பெரியாரையே அவமதித்து, ஓரங்கட்டி, 'புதிய சிற்றின' தலைவர்கள் வளர முடிந்ததா?" என்பதையும் முந்தைய பதிவில் பார்த்தோம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பெரியாரின் (தூத்துக்குடி மாநாட்டு) உரையில் வெளிப்பட்ட சரியான போக்கானது, சறுக்கலுக்குள்ளாகி, சீரழிவு போக்கின் வலிமையைக் கூட்டியதும் அதற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.‘ஒரு தனி மனிதரும் சரி, சமூகத்தை வழி நடத்தும் வலிமையுள்ளவர்களும் சரி, அவர்கள் வாழ்வின் பயணத்தில், மேலேக் குறிப்பிட்ட செயல்நுட்ப அடிப்படையில்,  ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட திசைகளில் வழிகளானது, அவரவரின் அறிவு அனுபவத்தைப் பொறுத்து, அவர்களின் பார்வைகளில் படும். அவர் எந்த திசையில் உள்ள வழியைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறார்களோ, அந்த பயணத்தின் முடிவில், அதற்கான நன்மை, தீமைகளை அனுபவிப்பதிலிருந்து தப்ப முடியாது. ஒரு சமூகம் நன்மைகளை அனுபவிக்கும் போது, சமூகத்தை வழி நடத்திய தலைவர்கள் பாராட்டு பெறுகிறார்கள். அந்த சமூகம் மிக மோசமான விளைவுகளை அனுபவிக்கும்போது, அந்த தலைவர்களை உணர்ச்சிபூர்வமானவர்கள் கண்டிப்பார்கள். அந்த தலைவர்களின் பெயரில் பிழைப்பு நடத்துபவர்களும், அவர்களின் உணர்வு போதைத் தொண்டர்களும் அதை 'துரோகம்' என்று கூக்குரல் எழுப்புவதும் உண்டு.அந்த மோசமான விளைவுகளிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள், அந்த தலைவர்கள் எந்தெந்த கட்டத்தில் என்னென்ன தவறுகள், தமது பயணத்தில், புரிந்தார்கள் என்பதை திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் ஆராய்வார்கள்.’ 
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_23.html ) 

தூத்துக்குடி மாநாட்டிற்குப்பின் பெரியார் 'சறுக்கிய' போக்கில், பயணித்த கட்சிகள், இப்போது மக்கள் செல்வாக்கை இழந்து, ஆதாயத்தொண்டர்கள் பலத்தையே நம்பி பயணித்து வருவதையும் ஏற்கனவே பார்த்தோம்.

அந்த போக்குகளுக்கு வித்திட்ட பெரியாரின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும், திறந்த மனதும், அறிவு நேர்மையும், சுயலாப நோக்குமுமற்ற, 'புலமையாளர்களின்' முயற்சிகள் துணையுடன், 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்குட்படுத்தி, உரிய மாற்றங்களுடன் அவற்றில் , நிகழ்கால தேவைகளுக்குதவும் 'உயிரை' உறுதி செய்து,   பெரியாரின் வரலாற்று மரணத்தை தடுக்க வேண்டிய காலக்கட்டம் இது. தமிழும், தமிழுணர்வும் மாணவர்களின் கேலிப்பொருட்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளதா? ('தமிழும், தமிழ் உணர்வும்,  மாணவர்களின்  கேலிப்பொருள் வரிசையில் ?';
http://tamilsdirection.blogspot.com/2015_06_01_archive.html) தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நீக்க சூழலில், வெளிநாடு வேலை வாய்ப்புகள், கிரிக்கெட், etc மூலம் 'இந்தியர்' அடையாளம் வலுப்பெற்று வருவதானது, தமிழ்/திராவிட கட்சிகளை மாணவர்கள் மத்தியில் செல்லாக்காசாக்கியுள்ளதா? என்ற கேள்விகளை ஆராய வேண்டிய ஆபத்தான சூழலில் தமிழ்நாடு பயணிக்கிறது.

 தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்)  மரணப்பயணத்தோடு, தமிழர்கள் அகத்தில் பெற்று வரும் சீரழிவையும், அதனால் தமிழ்நாடு புறத்தில் பெற்றுவரும் சீரழிவையும் , தாமதமின்றி தடுக்க வேண்டிய காலக்கட்டம் இது. தவறினால், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, பெரியாரின் வரலாற்று மரணம்,  முன் நிபந்தனையாகி விடும். 

தமக்கு இப்போதிருக்கும் செல்வம், செல்வாக்கு, வசதிகளுடன் தமது காலத்தை பெரியார் கட்சிகளின் தலைவர்கள் கழித்து விடலாம். ஆனால் தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, பெரியாரின் வரலாற்று மரணத்தை முன்நிபந்தனையாக்கிய குற்றவாளிகளாக அவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதை தடுக்க முடியாது. எனது ஆய்வுகள் அடிப்படையில் தெளிவு பெற்று, 2005 முதல் நான் மட்டுமே, நானறிந்த வரையில், தனி ஆளாக எதிர்நீச்சல் போட்டு வரும் அடிப்படையில்,  இந்த அபாய அறிவிப்பை முன் வைக்கிறேன்.

 ‘பெரியாரை பின்பற்றுபவர்களின் விபரீதமான நீதி உணர்வு ‘ - ‘Periyar’s Followers Have A Perverse Sense Of Justice’ -  என்ற தலைப்பில் பத்ரி சேஷாத்திரி ( பிரபல புத்தக வெளியீட்டாளர்) எழுதியுள்ள ஆங்கில கட்டுரை தொடர்பான எனது பதிவும், தனி ஆளாக எதிர்நீச்சல் போட்டு வரும் அடிப்படையில் உருவானதாகும். 
(http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_23.html) 'பா.ஜ.க  எச்.ராஜா பேசியது சரி என்றால்;என்னை போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருக்க அருகதையில்லை'  
(http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_18.html) என்ற பதிவை நான் எழுதியதும் அந்த அடிப்படையில் தான்.

எனது இந்திய குடிஉரிமையை 'சரண்டர்'(surrender) செய்து, என்னை மதித்து, எனது ஆய்வுகளை ஊக்குவிக்கும் நாட்டில் பகிரங்கமாக அடைக்கலம்(asylum)  கேட்க, அனுமதிக்குமாறு, இந்திய குடியரசு தலைவருக்கு மடல் எழுத எண்ணியதற்கு , 2005 முதல் நான் மட்டுமே, தனி ஆளாக எதிர்நீச்சல் போட்டு வருவதால் ஏற்பட்ட சலிப்பும் காரணமாகும். எனது ஆய்வுகளின் அடிப்படையில், எனது சமூக வட்டத்தில் இடம் பெற்று , என் மீது மிகுந்த அன்பும் ஆதரவும் செலுத்துபவர்கள், குறிப்பாக வெளிநாடுகளில் வாழ்பவர்கள், அதை கைவிடுமாறு கேட்டுக் கொண்டதையும் கணக்கில் கொண்டு, எனது ஆய்வுகள் மூலம் பணம், புகழ் ஈட்டும் நோக்கமில்லாததால், எனது ஆய்வுகளின் வளர்ச்சியை விட, தமிழ்நாட்டிலேயே இருந்து எதிர்நீச்சல் போட்டே, எஞ்சிய வாழ்க்கையையும் முடித்து விடலாம் என்று முடிவு செய்துள்ளேன். 

“நாம் ஏற்றுக்கொண்ட கொள்கை தொடர்பான 'அறிவுபூர்வ' விவாதங்களை தவிர்த்து,  நாம் 'உணர்ச்சி பூர்வ கொள்கைப் பற்றுடன்'  வாழ்வது என்பது; ஒன்று அந்த கொள்கை செத்து, பிணம் தின்னும் கழுகுகளாக நாம் வாழ்வதை உணர்த்தும்; அல்லது நாமே 'கொள்கைப் பிணமாக' உயிருடன் வாழ்வதை உணர்த்தும்.'கொள்கைப் பிணமாக' வாழ்பவர்கள் தான், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கை தொடர்பான அறிவுபூர்வ விவாதங்களைத் தவிர்த்து வாழ முடியும்.

நாம் ஒவ்வொருவரும் எப்படி வாழ்கிறோம்? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.

எனது வாழ்வின் பெரும்பகுதியை, சுயலாப நோக்கின்றி,  பெரியார் கொள்கையாளனாக கழித்தவன் நான். (அதன் காரணமாகவே நிகழ்காலத்தில். வேறு எவரும் சந்தித்திருக்க வாய்ப்பில்லாத, இழப்புகளுடன், அந்த இழப்புகளையே எனது பதிவுகளுக்கான மதிப்புமிக்க உள்ளீடுகளாக(inputs)  மாற்றி, வாழ்ந்து வருபவன் நான்.) பின் இசை ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது, பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் வரைஎல்லைகள் (limitations)  பற்றிய புரிதல் அவருக்கு இல்லாததால், தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு தொடர்பான, 'மிகவும் ஆபத்தான' , 'தமிழர்களை 'வேரற்ற'வர்களாக ஆக்கும், அவர் வெளிப்படுத்திய‌ கொள்கைகளை உண்மை என்று நம்பி, எனது வாழ்வின் பெரும்பகுதியை வீணாக்கி விட்டேனோ? என்ற ஐயம் எழுந்தது. அது தொடர்பான அறிவுபூர்வ விவாதத்தைத் தொடங்க, நான் எழுதிய கட்டுரையானது, 'கறுப்பு, வெள்ளை (அல்லது  சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்' என்ற தலைப்பில், 'தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் 2006 வெளிவந்தது. 
(https://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html)  இன்று வரை எந்த பெரியார் கொள்கையாளரிடமிருந்து அதை ஆதரித்தோ, எதிர்த்தோ எந்த கருத்தும் எனக்கு வரவில்லை.”
(http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_17.html) 'கொள்கைப் பிணம்' தின்னும் கழுகுகளும்,'கொள்கைப் பிணங்களும்' செல்வாக்கு செலுத்தும் சமூகத்தில், தமிழர்கள் அகத்தில்  சீரழிந்து, அதனால் தமிழ்நாடு புறத்தில் சீரழிவதில் வியப்புண்டோ? தமிழர்கள் அகத்தில்  சீரழிந்து, 'சுமரியாதை, மானம், அறிவு' இழந்து, 'பணம்' ஈட்ட, 'மனித நாய்களாகவும், காக்கைகளாகவும்' தமிழ்நாட்டில் 'தமிழர்கள்' அதிகரித்து வரும் போக்கிற்கான காரணங்களை தேடி, 'தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்களாக' மாறி வருவதை, சரி செய்வதில், ஆர்வமின்றி, 'சாதி ஒழிப்பு, மனித உரிமை' என்ற வட்டங்களுக்குள்   செயல்படுவது, தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளவா? அல்லது ஊரை ஏமாற்றவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

‘பெரியாரின் உள்ளீடுகளை(inputs) இரண்டு வகையாகப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமே. அவரின் நேரடி அனுபவ உள்ளிடுகளை அவர் திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுட்னும் தனது அறிவு செயல்வினைக்கு( processing)  உட்படுத்திய முடிவுகள், இன்றும் 'மக்கள் நலத்தில்' உண்மையான அக்கறை கொண்ட கட்சிகளுக்கு அரிய பாடங்களாகும். (உதாரணத்திற்கு குறிப்பு 1) 

அதே நேரத்தில் அவருக்கிருந்த கல்வி வரை எல்லைகள்(limitations)  காரணமாக,அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை-  நேரடியாக இன்றி மற்றவரைச் சார்ந்திருந்த-  உள்ளீடுகள் ஆகும். அந்த இரண்டாவது வகை உள்ளிடுகளின் அடிப்படையில்,அவர் வெளிப்படுத்திய கருத்துகளே 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்றவை தமிழர்க்குக் கேடேன்று, நோய் பிடித்த தாவரத்தின் நோய் மூலமாக அதன் ஆணி வேர்களையே அடையாளம் கண்டு சிதைத்த முயற்சிகளுக்கு வழி வகுத்தன. 

எனது இசை ஆய்வுகளின் முலம், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் செய்த பெருந்தவறை நான் அடையாளம் கண்டேன். பெரியார் இயக்கத்தில் தமது பிழைப்பிற்காக இல்லாமல், உண்மையான சமுகப்பற்றுடனும், பெரியாரைப் போலவே அறிவு நேர்மையுடனும், திறந்த மனதுடனும் தமது தவறுகளை அடையாளம் கண்டவுடன் ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்ளும் இயல்புடையவர்கள் பார்வைக்காகவும், பின் தொடர் விவாதத்திற்காகவும், அவ்வாறு நான் அடையாளம் கண்டவை கட்டுரையாக, (மேலே குறிப்பிட்டவாறு)  2006 'தமிழர் கண்ணோட்டம்' பொங்கல் மலரில் வெளிவந்தது. இன்று வரை அதை ஏற்றோ,மறுத்தோ ஒரு கருத்தையும் நான் சந்திக்கவில்லை.’ 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html) (பெண்ண‌டிமை தொடர்பான கருத்துக்களையும், வெளிவந்துள்ள  (published)  அறிவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறிப்பு கீழே)

‘திராவிடர் இயக்க வரலாற்றில் அறிவுபூர்வ போக்குகள் பலகீனமாகி, உணர்ச்சிபூர்வ போக்குகள் செல்வாக்குடன் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையை எப்போது, எப்படி அடைந்தது? தமிழ்நாட்டு சமூக அமைப்புகளின் (குடும்பம், கட்சி, etc  ) செயல்பட்டுக்கான சமூக ரத்த ஓட்டத்தில் (மனித உறவுகளில் லாப நட்டம் பார்க்கும்) 'கள்வர் பண்பு' ( திருக்குறள் 813  ) எப்போது, எப்படி நுழைந்து கெடுத்தது? என்பது போன்ற கேள்விகளைத் திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் ஆராய வேண்டிய கட்டத்தில் தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்பு நோக்கிய முயற்சிகள் இருக்கின்றன.’ 
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html) சிற்றின மனிதர்கள் சமூகக் கேடான தீயினமாக வளர்ந்ததற்கான, 'பொது மூலதனமாக' பெரியார் சிக்கி விட்டதை, திருச்சி பெரியார் மையம் மூலம் நான் கண்டுபிடித்ததையும்(discovery) ,  முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.

பெரியார் ஈ.வெ.ராவைத் தெரிந்து கொள்ளாமல், தமிழில் சரியாக படிக்கத் தெரியாமல், இன்றைய மாணவர்கள், 'தமது கல்வி, தாம் பயன்படுத்தும் 'டிஜிட்டல்' கருவிகள்(digital devices), வேலைவாய்ப்பு, சினிமா, நடிகர்கள், கிரிக்கெட் போன்றவற்றில்  'லேடஸ்ட்'(latest)  தகவல்களை, நுனிவிரலில் வைத்து அசத்துகிறார்கள்.தமிழ்வழிக் கல்வியை சிதைத்து, ஆங்கிலவழிக் கல்வி மூலம் 'திரிந்த மேற்கத்திய' பண்பாட்டில் 'அதிக எண்ணிக்கையில் அதிவேகமாக' வளரும் இது போன்ற மாணவர்களில், தமிழறிஞர்கள்/பேராசிரியர்கள்/தமிழ் ஆர்வலர்கள் குடும்பப் பிள்ளைகள் விதி விலக்காக இருப்பதும் அரிதாகி வருகிறது. ‘மீடியா’க்களில் செல்வாக்குடன் வலம் வரும் ஆதாயத்தொண்டர்களும், கட்சித் தலைவர்களும், இது போன்ற மாணவர்களும், தமிழ்நாட்டிலேயே தனி தனித் தீவுகளில் வாழ்கிறார்கள்.' என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
(http://tamilsdirection.blogspot.com/2015/02/12_17.html) 'கட்சி, கொள்கை சம்பந்தமின்றி,  மாணவர்கள் மத்தியில் மோடிக்குள்ள அபரீதமான செல்வாக்கிற்கும், நடுத்தர, ஏழை,  தமிழர்களில் பெரும்பாலோரின் மத்தியில், மற்ற எவரையும் விட, ஜெயலலிதாவிற்குள்ள அதீதமான செல்வாக்கிற்கும், அதுவே காரணமா?' என்பதையும் முந்தைய பதிவில் பார்த்தோம். இளைய சமூகத்தின் பார்வையிலிருந்து, பெரியார் 'சருகாகி உதிரும்' போக்கு உள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

'தமிழ், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றில் இருந்ததை 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' (சிலப்பதிகாரம்: அரங்கேற்றுக் காதை 65) ( முந்தையப் பதிவில் விளக்கியுள்ளவாறு) என்ற செயல்நுட்பத்திற்கு உட்படுத்தாமல், அவற்றைத் தமிழர்க்குக் கேடானவையாகக் கருதி, உருவாக்கிய கொள்கைகள் வழியில் பெரியார் பயணித்தார். அதாவது ஒரு சமூகத்தின் ஆணி வேரையே நோயாகக் கருதி அவர் பயணித்ததால், அவரது இயக்கத்திற்கான சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களிலிருந்து அவர் அந்நியமானார். எனவே ஏற்கனவே கையிருப்பில் இருந்த சமூக ஆற்றலில் இயக்கம் பயணித்து , வலுவிழக்க நேரிட்டது. மிகுந்த தியாகங்களுடன் தோன்றி வளர்ந்த அவரது இயக்கம் சந்தித்த இந்த முரண்பாடுகள் காரணமாகவே, 'குறுக்கு வழி செல்வம் சேர்க்கும்' நோயாளிகள் பொது வாழ்வில் 'அதி வேகமாக' வளர்ந்து,
(http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html),  விமர்சனப் பார்வையற்ற உணர்ச்சிபூர்வ 'தமிழுணர்வாளர்கள்' அவர்களிடம் சிக்கியதால்,  பெரியாரையும் மீறி, தமிழையும், தமிழர்களிடம் இருந்த பண்பாடுகளையும் சீரழித்து, தமிழ்நாட்டை வீழ்ச்சிப் பாதையில் பயணிக்க அம்முரண்பாடுகள் வழி வகுத்ததா? அந்த நோயில் தமிழ்நாட்டில் கணிசமானோர் சிக்கியதால், அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும் பிற மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் தமிழ்நாட்டில் வளர வழி வகுத்ததா? என்பது போன்ற கேள்விகளை ஆராயாமல், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் தப்பித்து மீள முடியுமா?' 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html)

தமிழர்களின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு ஆகிய சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களானது, ஆங்கிலவழிக்கல்வி மூலம், திரிந்த மேற்கத்திய பண்பாட்டில் சிக்கியுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் அந்நியப்பட்டு, வண்டு போகும் ஆபத்தில் சிக்கியுள்ளது.  அதிலிருந்து மீள தவறினால், தமிழ்நாட்டில் தமிழர்கள் எல்லாம், தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்களாக, அறிவு புலத்திலும், உடல் உழைப்பிலும் பின்தங்கி, பெரும்பாலோர் 'தரகர்களாகவும்', 'திருடர்களாகவும்' பிழைப்பதில் முடியும் ஆபத்து, தவிர்க்கமுடியாதாகி விடும். எனவே, கடைசி ‘பெரியார் மீட்பு முயற்சி’யாக, 'உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகளை' விட்டு விலகி, திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும் பெரியாரின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும், 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்குட்படுத்தி மறு ஆய்வு செய்து, உரிய திருத்தங்களை பகிரங்கமாக அறிவித்து பயணிப்பதே ஒரே வழியாகும். தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு தொடர்பான மறு ஆய்வையும் உரிய திருத்தங்களையும் தாமதப்படுத்துவது என்பது, பெரியாரின் வரலாற்று மரணத்தை வேகப்படுத்துவதாகிவிடும்.
                                               --------------------------------

பெரியாரின் பெண்ண‌டிமை தொடர்பான கருத்துக்களையும், வெளிவந்துள்ள  (published)  அறிவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஆர்வமுள்ளவர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறிப்பு :

“ இவ்வியாச விவகாரத்தின் ஜீவநாடி ஆண் உரிமை என்ன? பெண் உரிமை என்ன? இவ்விரண்டிற்கும் ஏன் வித்தியாசம் இருக்க வேண்டும்? என்பதேயாகும்.‍‍‍‍‍‍...........மனித சமூக வளர்ச்சிக்கு இரு பாலார் குணங்களும் சமமாக இருக்க வேண்டும் என்பதே நமது கருத்தாகும்.இருபாலாருக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும் இருக்கின்றது." 'பெண் ஏன் அடிமையானாள்?' பக்கம் 23 - 24

பெரியார் மேலே எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பான அறிவியல் ஆய்வு முடிவுகளில் சில கீழே உள்ளன. 

How Men's Brains Are Wired Differently than Women's?
male brains had more connections within hemispheres, whereas female brains were more connected between hemispheres;
male brains may be optimized for motor skills, and female brains may be optimized for combining analytical and intuitive thinking;

Data from this study and previous research supports the notion that males and females rely on different brain networks to perform the same function, with the implications must notable in the academic realm. Halpern and colleagues (2007) suggest that we can use this knowledge to teach female and male students ways to solve problems that correspond to their most efficient cognitive process (i.e. verbal versus visuospatial solution strategies) to allow more flexibility in their problem solving and positively impact performance overall.’ (‘Gender differences in working memory networks: A BrainMap


தமிழ்நாட்டின் வரலாற்றில் பெண் கல்வி, அரசவையில் அமைச்சர்களாக, புலவர்களாக பெண்கள் இருந்தது தொடர்பான சான்றுகளை, மேற்கத்திய வரலாற்றில் அவை தொடர்பான சான்றுகளுடன் ஒப்பிடுவதும் பலனளிக்கும். இன்றும் ஒரே பணியில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்தியாவில் ஊதியத்தில் வேறுபாடு கிடையாது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இன்றும் அந்த பிரச்சினை எவ்வாறு உள்ளது? என்று ஆய்வதும் பலனளிக்கும். 

செவிலியர் (nursing)  பணியில் பெண்களுக்கு இப்போதுள்ள பெரும்பான்மை எண்ணிக்கையை, ஆண்களுக்கு 50% அமுல்படுத்த குறைப்பது தவறு; மூட்டை தூக்குதல் போன்ற உடலுழைப்பு பணிகளில் ஆண்களுக்கு இப்போதுள்ள பெரும்பான்மை எண்ணிக்கையை, பெண்களுக்கு 50% அமுல்படுத்த குறைப்பது தவறு; என்பது என் கருத்து.

No comments:

Post a Comment