Friday, January 19, 2018


தமிழ்நாட்டின் ‘செருப்பு அரசியல்’ (2);

'தமது பக்கமே கோல் போட்ட’(same side goal) 'உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியல்' ?




'ஆண்டாள்' தொடர்பான சர்ச்சையில் வைரமுத்துவின் பேச்சை கண்டித்த பிரபலங்களில், நானறிந்தவரையில், தனிப்பட்ட முறையில், வைரமுத்துவை இழிவாக கண்டித்தவர் எச்.ராஜா மட்டுமே. தாம் எதிர்க்கின்ற நபர்களை தனிப்பட்ட முறையில் இழிவாக, அண்ணாவையும், ஜீவாவையும், கண்டித்து, தமது 'குயில்' இதழில் எழுதியவர் பாரதிதாசன். ஆனால் பாரதியாரோ, பாரதிதாசனைப் போல, தாம் எதிர்த்த நபரை, காந்தி உள்ளிட்டு எவரையும், தனிப்பட்ட முறையில் இழிவாக கண்டிக்கவில்லை. எனவே எச்.ராஜாவை, அந்த நோக்கில், பாரதிதாசன் வாரிசாக அடையாளம் காணலாம். மேற்குறிப்பிட்ட சர்ச்சையில், வைரமுத்துவை ஆதரித்தவர்களில், எச்.ராஜாவைப் போல, உணர்ச்சிபூர்வமாக ஆவேசப்பட்டவர் பாரதிராஜா. இருவருமே தாம் ஆதரித்த நிலைப்பாடுகளின் வலிமைக்கு சேதாரம் விளைவிக்கும் 'தமது பக்கமே கோல் போட்ட’ (same side goal) 'உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியல்' என்ற ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் ஆவர்.


மேலே குறிப்பிட்ட உணர்ச்சிபூர்வ இரைச்சல்களில், கீழ்வரும் கேள்விகளின் அடிப்படையில், அறிவுபூர்வ விவாதம் வெளிப்படுவதானது பாதிக்கப்பட்டிருந்தால் வியப்பில்லை.


'தேவதாசி' ஒழிப்பு சட்டம் தொடர்பாக முத்துலட்சுமி ரெட்டி தமிழக சட்டசபையில் முன் வைத்த வாதங்கள் அடிப்படையிலும்;


வைரமுத்து சுட்டிக்காட்டிய கட்டுரை ஆசிரியரே, 'ஆண்டாள்' தொடர்பாக 'தேவதாசி' என்ற சொல்லுக்கு ஆதாரமே இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள பின்னும் (http://www.dinamalar.com/news_detail.asp?id=1941251  );



அதை உறுதிப்படுத்தாமல் தான் அந்த சொல்லைப் பயன்படுத்தியது தவறு என்று அறிவுநேர்மையுடன் வைரமுத்து ஒத்துக் கொள்ளாததையும்;



'கழகம்' என்ற சொல்லானது 'சூதாடுமிடம்' என்று திருக்குறளில்(937) வருவதன் அடிப்படையில், இன்று அதே பொருளில் 'திராவிட' கட்சிகளின் பெயரில் வரும் கழகத்தை குறிப்பிடமுடியுமா? என்ற கேள்வியையும்;



வைரமுத்து 'தான் செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக';



முன்வைத்துள்ள விளக்கமானது அறிவுநேர்மையாகுமா? என்ற கேள்வியையும்; 


பின் தள்ள, மேலே குறிப்பிட்ட உணர்ச்சிபூர்வ இரைச்சல்கள் உதவ அனுமதிக்க கூடாது.

தமிழில் 'சாதி' என்ற சொல்லின் பொருளானது, காலனிய சூழ்ச்சியில் திரிந்தது தெரியாமலும்;( http://tamilsdirection.blogspot.in/2016/01/   )

'நிலவுடமை' என்ற கருத்தும் மேற்கத்திய இறக்குமதி என்பதும், அது ஆண்டாள் வாழ்ந்த தமிழகத்துக்கு பொருந்தாது என்பது தெரியாமலும்;

மேற்கத்திய குறிப்பாய (western paradigm)  'பெண் உரிமை'யின் வரை எல்லைகள் (limitations)  புரியாமலும்;( ; http://tamilsdirection.blogspot.in/2016/07/normal-0-false-false-false-en-in-x-none.html
 

வைரமுத்து வெளிப்படுத்தியுள்ள விளக்கமும் விவாதத்திற்கு உரியதாகும்



தமது மொழித் திறமையின் (language skills) மூலம்,  தாம் புரிந்த தவறுகளிலிருந்து தப்பிக்க, ஒரு வகை 'கவர்ச்சிகர மொழி' நடையை, பிரபலமானவர்கள் கையாளும் போது, அவர்களுடன், அவர்கள் கையாண்ட மொழி நடையும், மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் கேலிப் பொருள் ஆகிவிடும் அபாயமும் தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது. ( http://tamilsdirection.blogspot.in/2015/06/  )


திராவிடக்கட்சிகளில் எதிர்க்கின்ற தலைவர்களை உணர்ச்சிபூர்வமாக இழிவுபடுத்தும் பேச்சாளர்கள் ஒரு காலத்தில் 'செல்வாக்குடன்' வலம் வந்தார்கள். அந்த நிலையிலும் கூட, அவர்களில் எவரும் தி., தி.மு., ...தி.மு. ஆகிய கட்சிகளில் மேல் மட்ட தலைவர்களாக இருந்ததில்லை. ஆனால் கடந்த 10 வருடங்களாக அப்படிப்பட்ட பேச்சுகளுக்கான 'ரசிகர்கள்', திராவிட கட்சிகளில் குறைந்து விட்டார்கள். இன்றுள்ள மாணவர்களும், இளைஞர்களும், கிராம மக்களும் அத்தகைய பேச்சுகளை ரசிக்காதது மட்டுமல்ல, வெறுக்கவும் செய்கிறார்கள்.


ஆனால் பா..கவில் தேசிய அளவில் தலைவராக இருக்கும் எச்.ராஜா, திராவிடக் கட்சிகளின் ' இரண்டாம் தர' பேச்சாளரைப் போல, உணர்ச்சிபூர்வமாக எதிர்க்கின்ற நபரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி பேசி வருவதை, பா..கவில் எவரும் கண்டித்து, அந்த தவறான போக்கிலிருந்து அவரை திருத்த முனைந்ததாக தெரியவில்லை.


"பெரியார் படத்தை செருப்பால் அடிப்பேன்' என்று அறிவித்து, உணர்ச்சிபூர்வமாக பயணிக்கும் பா.ஜ.க தலைவர் எச்.ராஜா ஆவார்.  (‘தமிழ்நாட்டின் செருப்பு அரசியல்?’; http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none.html அதைப் பற்றி கவலைப்படாமல், எச்.ராஜாவுக்கு 'நெருக்கமான' 'திராவிட' தலைவர்களும், 'அந்த' திராவிட‌ தலைவர்களுக்கு நெருக்கமாக 'முயலும்' 'பெரியார்' கட்சிகளின் தலைவர்களும், உண்மையில் ஈ.வெ.ரா அவர்களை அவமதித்தவர்கள் இல்லையா? என்ற கேள்வியானது;


இன்று 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா'வில் பயணிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்களுக்கு தோன்றியதுண்டா? என்பதானது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.

புறத்தில் 'எலியும் பூனையும் போல' காட்சி தந்து, உணர்ச்சிபூர்வமாக வெறுப்பு பேச்சுகள் மூலம் அப்பாவித் தொண்டர்களை உசுப்பி விட்டு, தமக்குள் 'பரிமாற்ற பலன் தரும்' நட்புடன்(?) வலம் வரும் தலைவர்களும் கட்சிகளும் இனி தமிழ்நாட்டில் எடுபட முடியாது; திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் வார்ட் கவுன்சிலர் வரை அந்த நோய் பரவி, மக்கள் மத்தியில் அம்பலமானதன் விளைவாக.


அதே போல, சுயலாப நோக்கின்றி வாழ்ந்து, மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள தலைவர்களை இழிவுபடுத்தி கண்டிக்கும் தலைவர்கள் உள்ள கட்சியும் தமிழ்நாட்டில் எடுபட முடியாது.



தனது திரைப்படம் தோல்வியடைந்ததால் மனமுடைந்த தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர், தமது பூஜை அறையில் இருந்த முருகன் சிலையை செருப்பால் அடித்து விட்டு, பின் அதே சிலையை கட்டிப்பிடித்து அழுத சம்பவத்தை அவரே பத்திரிக்கையில் வெளிப்படுத்தினார்.



நமது நலனில் அக்கறை உள்ளவர் என்று நாம் மிகவும் மதிக்கும் நபர், நமக்கு பிடிக்காத செயலை செய்யும் போது, அவர் மேல் கோபப்படாமல் வருத்தப்படுவதே பொதுவான மனித இயல்பு ஆகும்.


பொது மக்களுக்கும் பொதுச்சொத்துக்கும் பங்கமின்றி, தமது காசில் கடையில் விற்ற பிள்ளையார் பொம்மைகளை விலைக்கு வாங்கி உடைத்தல் போன்ற போராட்டங்களை ஈ.வெ.ராவும், அவர் கட்சியினரும் நடத்திய போது, அதை அவ்வாறு பொறுத்துக் கொண்ட ஆத்தீகர்கள் தான் அந்த காலக்கட்டத்தில் இருந்தார்கள். மாறாக ' பெரியாரை செருப்பால் அடிப்பேன்' என்று உணர்ச்சிகரமாக பேசி விட்டு, பின் தேர்தலில் ஆதரவு கேட்டு திராவிடக் கட்சி தலைவர்களின் வாசலை மிதிக்கும்; தமது குடும்ப விழாக்களுக்கு அவர்களை அழைக்கும்; 'இரட்டை வேட' பக்தர்கள் அந்த காலக்கட்டத்தில் வாழவில்லை.

அஸ்ஸாமில் பிரிவினைக்காக போராடிய தலைவர்களை, கீழ்வரும் எச்.ராஜா பாணியில், அஸ்ஸாம் பா.ஜ.க தலைவர்களில் எவராவது இழிவுபடுத்தி கண்டித்திருந்தால், இன்று

அஸ்ஸாமில் பிரிவினைக்காக போராடிய மாணவர் தலைவரை ஈர்த்து பா.ஜ.கவில் சேர்த்து, இன்று அவரை முதல்வராகக் கொண்டு அஸ்ஸாமில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்திருக்க முடியுமா?



"முதலில் .வே.ரா ஒரு தேச துரோகி என்பதை நாம் மனதில் பதியவைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் 1944-ல் .வே.ரா தலைமையில் சேலத்தில் நடைபெற்ற திராவிடக்கட்சியின் துவக்க மாநாட்டில் C.N.அண்ணாதுரை ஒரு தீர்மானம் கொண்டுவருகிறார். தீர்மானம் என்ன சொல்கிறது என்றால்வெள்ளையன் இந்த நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினாலும் லண்டனில் இருந்து கொண்டு சென்னை ராஜதானியையாவது ஆளவேண்டும்”. இப்படி ஒரு மானங்கெட்ட தீர்மானத்தை போட்ட தேச துரோகிகள் தானேடா .வே.ரா, அண்ணாதுரை, வீரமணி, கருணாநிதி & கம்பெனி. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் கிடைத்ததை கருப்பு தினம் என்று .வே.ரா அறிவித்து எல்லா வீட்டிலும் கறுப்பு கொடி ஏற்ற சொன்னாரா இல்லையா??. எனவே வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு வெளியெறிய போதே இந்த இரண்டு பேரையும் சேர்த்து அடித்து துரத்தியிருக்க வேண்டும்." சென்னை 'வள்ளுவர்கோட்டத்தில் 18 ஏப்ரல் 2015 அன்று நடைபெற்ற கறுப்பு சட்டை எரிப்பு போராட்டத்தில் .வெ.ரா வையும், வீரமணியையும், கம்யூனிசத்தையும் சேர்த்து எரித்து தள்ளிய திரு H.ராஜா அவர்களின் காரசாரமான பேச்சு' என்று முகப்புத்தகத்தில் வெளிவந்துள்ளது.பெரியாரைப் பற்றியும், அண்ணாவைப் பற்றியும், இவ்வளவு இழிவான கருத்துள்ள எச்.ராஜா, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, மதுரையில் அழகிரியின் வீட்டிற்கு சென்று, தனக்கு ஆதரவு தருமாறு கெஞ்சியது சரியா? என்ற கேள்வியை, மனசாட்சியும், அறிவுநேர்மையும் உள்ள எச்.ராஜா ஆதரவாளர்களுக்கு விட்டு விடலாம்.


பெரியார் .வெ.ரா அவர்களின் 'தனி திராவிட நாடு' கோரிக்கையை ராஜாஜி பகிரங்கமாக ஆதரித்தது எச்.ராஜாவுக்கு தெரியாது போலும். தெரிந்திருந்தால், .வெ.ரா, அண்ணதுரையுடன் ராஜாஜியையும் அடித்து துரத்தியிருக்க வேண்டும் என்று பேசியிருப்பார்.

"We going to soon get the cooperation of my friend and comrade, Acharya (Rajagopalachari), for the separation of Dravida Nadu. Not only him, but all Brahmins ... are going to support our demand for separation"- Periyar EVR ;http://en.wikipedia.org/wiki/C._R._formula


அது மட்டுமல்ல,எச்.ராஜா இந்து மகா சபை தலைவர்களையும் 'அடித்து துரத்தியிருக்க வேண்டும்' என்று பேசியிருப்பார். ஏனென்றால், இரண்டாம் உலகப் போரின் போது, காங்கிரஸ் வெள்ளையரை எதிர்த்த போது, திராவிடர் கழகத்தைப் போலவே, இந்து மகா சபாவும் ஆங்கிலேயர் ஆட்சியை ஆதரித்தனர்.

“The Congress condemned Britain’s declaration of India as a “belligerent country” without its consent, and resented London’s refusal to promise India’s independence after the war. The Muslim League and the Hindu Mahasabha, however, supported the British war effort, seeking furtherance of their sectarian interests.” http://www.thehindu.com/books/freedom-movement-a-holistic-feat/article61951.ece


ஆங்கிலேயருக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டங்களை ஆதரிக்காததில், தி.கவிற்கும், இந்து மகாசபைக்கும் அதிக வேறுபாடு கிடையாது.

“the Hindu Mahasabha did not actively support agitations against British rule in India. Under the leadership of Mohandas Gandhi, the Congress led several nationwide campaigns of non-violent civil disobedience. The Mahasabha refused to endorse any of the movements and participated in the legislative councils established by the British, which were otherwise boycotted by the Congress and most of the population..”



1925இல் காங்கிரசை விட்டு வெளியேறி, பெரியார் .வெ.ரா சுயமரியாதை இயக்கம் தொடங்கினார். 1925 முதல் 1947 இல் இந்தியா விடுதலை அடையும் வரை, அவர் அனுபவித்த அளவுக்கு சிறைத் தண்டனைகளும், அவர் நடத்திய பத்திரிக்கைகள் அனுபவித்த அளவுக்கு காலனிய அரசின் ஒடுக்குமுறைகளையும், தமிழ்நாட்டில் எந்த காங்கிரஸ், இந்துத்வா தலைவர்கள், அவர்கள் நடத்திய பத்திரிக்கைகள், அனுபவித்திருக்கிறார்களா? என்ற கேள்வியை எச்.ராஜாவும், அவரின் பேச்சை பாராட்டுபவர்களும் மனசாட்சியுடனும், அறிவுநேர்மையுடனும் பரிசீலிப்பார்களா?


இந்தியா விடுதலையான பின் நடந்த 1952 முதல் பொது தேர்தலில், தனி திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து, பெரியார் .வெ.ரா ஆதரித்த கட்சிகள் பெருவாரியாக வெற்றி பெற, காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெறவில்லை என்பது, எச்.ராஜாவுக்கு தெரியாது போலும். தெரிந்திருந்தால் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்களை அடித்து துரத்தியிருக்க வேண்டும் என்று பேசியிருப்பார்.அப்படி இருந்த தமிழ்நாடு, இன்று இப்படி எச்.ராஜா பேசும் அளவுக்கு சீரழிந்ததற்கு, திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளின் சாதனையா? தேர்தலில் தம்மை ஆதரிக்குமாறு எச்.ராஜா  கேட்கும் அளவுக்கும், அவரின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ளும் அளவுக்கும், 'திராவிட' கட்சித் தலைவர்களுடன் அவருக்கு உள்ள 'உறவானது', நாட்டின் நலனுக்கா? அல்லது அவரவரின் சொந்த நலனுக்கா?  என்பதும் ஆய்விற்குரியதாகும்.

வெள்ளைக்காரர் ஆட்சிக்கு முன் தமிழ்நாடே பல மன்னர்கள் ஆட்சியில் இருந்தது எச்.ராஜாவுக்கு தெரியாதா? வீரசவர்க்கார் எழுதிய 'எரிமலை' -'The Indian War of Independence' - நூலில் 1857 இல் வடநாட்டில் இருந்த முஸ்லீம் அரசர்களும் இந்து அரசர்களும் சேர்ந்து, வெள்ளையரை எதிர்த்ததை, ‘முதலாம் விடுதலைப் போர்என்று குறிப்பிடுவது எச்.ராஜாவுக்கு தெரியாதா? அந்த போர் வெற்றி பெற்றிருந்தால், வெள்ளைக்காரர் இந்தியாவை விட்டு வெளியேறியிருப்பார்கள். ஆனால் இந்தியா பல மன்னர்களின் ஆட்சிகளில் இருந்திருக்கும் என்பது எச்.ராஜாவுக்கு தெரியாதா


'இந்தியர்' என்ற அடையாளம் இந்தியாவில் உரிய அளவுக்கு வலுப்பெறாததன் காரணமாகவே, இந்தியாவில் பிரிவினை முயற்சிகள் மக்கள் ஆதரவுடன் நடைபெற்று வருவதும், அதைப் பலகீனப்படுத்தி, இந்தியர் என்ற அடையாளத்தை வலிமையாக்க, மத்திய அரசு எவ்வளவு கடுமையாக முயற்சிக்கிறது என்பது எச்.ராஜாவுக்கு தெரியாதா?


இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுக்கு தேவைப்படும் 'பெரும் விரிவுரை - கிராண்ட் நேரேட்டிவ் (Grand Narrative)  ஆனது, மேற்கத்திய சூழ்ச்சியில் சிக்கி இருப்பதும், அந்த சூழ்ச்சியிலிருந்து அந்த 'கிராண்ட் நேரேட்டிவை' மீட்டு, இந்தியர் என்ற உணர்வை வலிமைப்படுத்த ராஜிவ் மல்கோத்ரா போன்ற அறிஞர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பற்றி எச்.ராஜாவுக்கு தெரியுமா? (http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_18.html )


இது போன்ற கேள்விகளை சந்திப்பதை தவிர்க்கவே, திராவிடக்கட்சிகளில் எச்.ராஜா போன்ற உணர்ச்சிபூர்வ பேச்சாளார்களை மேல்மட்ட தலைவர்களாக அனுமதித்ததில்லை


எச்.ராஜா வைரமுத்துவை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தியதை கண்டிக்காமல், மகிழ்ந்து பாராட்டுபவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு தமிழக பா..கவில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு தமிழக பா.. தமிழ்நாட்டில் மாற்றாக வர வாய்ப்பே இல்லை.


தமிழ்நாட்டில் ‘ஊழல்வாதிகளின் அரவணைப்பில் வளர்ந்த 'இந்துத்வா எதிர்ப்பானது' இன்று மக்களின் வெறுப்புக்கும், கண்டனத்திற்கும் உள்ளாகி, இந்துத்வாவை தமிழ்நாட்டில் பிரமிக்கும் அளவுக்கு வளர்த்து விட்டுள்ளதா?

வேறு வழியின்றி, இயற்கையின் போக்கில், தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியை முன்னெடுக்கும் பணியானது, இந்துத்வா மூலமே நடைபெற தொடங்கியுள்ளதா?' என்ற கேள்வியையும் ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_13.html  )


தமிழ்நாட்டில் பிரமிக்கும் வகையில் வேர் பிடித்து வளர்ந்து வரும் 'இந்துத்வா'வுடன் இணக்கமான 'தமிழத்துவா'வை பிணைத்து, குஜராத் மாநில பா.ஜ.க, அஸ்ஸாம் மாநில பா.ஜ.க போன்று, தமிழக பா.ஜ.கவோ அல்லது வேறு கட்சியோ பயணித்தால் மட்டுமே, தமிழ்நாட்டில் உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை உண்மையான மக்கள் ஆதரவுடன் நிரப்ப முடியும்.’ (http://tamilsdirection.blogspot.in/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html )


ஆனால் எச்.ராஜா போன்றவர்கள் தமது உணர்சிபூர்வ வெறுப்பு அரசியல் போக்கினை திருத்திக் கொள்ளாத வரையில், தமிழக பா.ஜ.க அந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வாய்ப்பே இல்லை.




1857 முதலாம் விடுதலைப் போர் வெற்றி பெற்றிருந்தால், இன்று இந்தியா பல மன்னர்கள் ஆட்சியில் இருந்திருக்கும் என்பதை கருத்தில் கொள்ளாமல்;


இந்தியா போன்ற காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற நாடுகளில், 'நாட்டுப்பற்று' என்பது, அடையாளச் சிக்கலை (Identity Crisis)  தீர்த்து பயணிக்க வேண்டிய‌ 'தேச கட்டுமானத்துடன்', எந்த அளவுக்கு தொடர்பு கொண்டது? என்பதும் புரியாமல்;

இந்திய விடுதலைக்குப் பின், நேரு குடும்ப வாரிசு அரசியலானது இந்திய முழுவதும் தொத்து நோய் போல், பிரிவினைப் போக்குகளுடன் பின்னி பரவ;

மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளும் கூட, மேற்குறிப்பிட்ட 'தேச கட்டுமான' சவால் பற்றிய புரிதலின்றி, 'தேசியம்' என்ற பேரில் எச்.ராஜா போல, 'இந்தியர் யார்?' என்று தீர்மானிக்கும் 'எஜமானர்களாக' தம்மை கருதிக் கொண்டு, உண்மையில்  தேச கட்டுமான சீர்குலைவுகளை 'இந்துத்வா' என்ற பேரில் முன்னெடுப்பதை, தடுக்காமல் இருப்பது, தொடர்ந்தால்;

சர்வதேச ஆதிக்க சக்திகளுக்கு இடையிலான 'சமநிலை' (equilibrium) குலையும் போது, இந்தியாவானது, சோவியத் ஒன்றியத்தை விட, இன்னும் மோசமான முறையில் ' சிதறலுக்கு' உள்ளாகி, ஆப்பிரிக்காவுடன் போட்டி போடும் நிலை உருவாகும்; என்பதும் எனது கணிப்பாகும்.

இந்தியாவில்
தேச கட்டுமானம் (Nation Building)  சந்தித்து வரும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கா விட்டால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எல்லாம் ஆப்பிரிக்காவைப் போல, குடும்ப அரசியல் கொள்ளையர்களிடம் சிக்கி சீரழிந்து விடும், என்பதும் எனது ஆய்வு முடிவாகும். (http://tamilsdirection.blogspot.in/2017/06/is-language-policy-derailing-nation.html)


'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடு' கொள்கை ஆதரவாளராக பயணித்து வந்த நான் (http://tamilsdirection.blogspot.in/2017/12/1-music-informationtechnologist-inputs.html );


இன்று 'இந்துத்வா'வுடன் இணக்கமான 'தமிழத்துவா'வை பிணைப்பதன் மூலமே, தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தை தடுத்து, தமிழ்நாட்டின் கனிவளங்களை  சூறையாடி வருவதை நிறுத்தி, தமிழ்நாட்டை மீட்கும் முயற்சிக்கு, என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கி வருகிறேன்; அறிவுபூர்வ விவாதத்தினை எதிர்நோக்கி.

No comments:

Post a Comment