Tuesday, December 5, 2017

'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடு' (1) ;


எனது நிலைப்பாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ?



இசைத் தகவல் தொழில்நுட்ப நிபுணராக (Music Information technologist) வலம் வரும் எனது இன்றைய நிலையையும்;

'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடு 'பெரியார்' கொள்கையாளனாக பயணித்த நிலையையும்;

பொதுவாழ்வு வியாபாரிகளாக இல்லாமல், கூர்ந்து கவனித்து வரும் சிலருக்கு;

எனது நிலைப்பாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் எல்லாம் புரிந்தும், புரியாமலும், குழப்பமாகவும் இருப்பதாக, எனக்கு வரும் உள்ளீடுகள் (inputs) தெரிவிக்கின்றன.

மார்க்சிய‍-லெனினிய புலமையுடன் 'பெரியார்' கொள்கையாளராக நான் பயணித்ததன் விளைவாக வெளிவந்த 'பெரியாரியல் பார்வையில் இந்திய தேசியம்' என்ற நூலானது;

மேலே குறிப்பிட்ட குழப்பத்திற்கு முக்கிய காரணமாக தொடர்வதாகவும்;

அது பற்றி, நான் தெளிவுபடுத்த வேண்டியது எனது சமூக கடமை;

என்றும் அந்த உள்ளீடுகள் தெரிவித்துள்ளன.

.வெ.ரா அவர்கள் வலியுறுத்திய 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு', 'பெரியார்' கொள்கையையை உட்படுத்தாமல் பயணிப்பவர்கள் எல்லாம், 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மனநோயில் பாதிக்கப்பட்டவர்களா? என்ற கேள்வியை எனது பதிவுகளில் எழுப்பியிருந்தேன்

அது தொடர்பாக என் மீது வைக்கப்பட்ட விமர்சனமும், விளக்கமும் வருமாறு:

"அப்போது (நான் 'பெரியார்' கொள்கையாளராக இருந்த காலத்தில்) அவர் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தாரா? அந்த நோய்க்கான மருந்தை எப்போது கண்டு பிடித்தார்? அவரோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட எங்களைப் போன்றவர்களுக்கு ஏன் மருந்தைக் கொடுக்காமல் தான் மட்டும் மருந்தை உட்கொண்டு சரியானார்? இந்தக் கேள்விகள் உடன் செயலாற்றிய எங்களுக்கு ஏற்படுவது நியாயமா? இல்லையா?”

என்று என் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனம் தொடர்பாக;

‘நியாயமான கேள்விகள். ஆமாம். நான் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை, எனது இசை ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்து, என்னால் முடிந்தவரை, 2005லிருந்து, என்னை (தஞ்சை இரத்தினகிரி, மனோகரன் உள்ளிட்டு) சந்தித்த 'பெரியார்' ஆதரவாளர்களிடம் விளக்கி வருகிறேன்; பதிவுகள் வெளியிட்டு வருகிறேன். 2006 ‘தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலரில்’  வெளிவந்த, கீழ்வரும் கட்டுரை, ஆர்வமுள்ளவர்கள் பார்வைக்குகறுப்புவெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்’ ; http://tamilsdirection.blogspot.sg/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html   ( ‘தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை; பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட  'பெரியார்'  .வெ.ரா (1)’; http://tamilsdirection.blogspot.sg/2017/09/blog-post_20.html  )

'பெரியாரியல் பார்வையில் இந்திய தேசியம்' என்ற நூலில், இந்திய அரசு பற்றிய .வெ.ரா அவர்களின் நிலையை, கீழ்வரும் சான்றுடன் விளக்கியிருந்தேன்.

‘‘இந்திய விடுதலையை 'உரிமை மாற்ற' ஏற்பாடாக கருதி, .வெ.ரா வெளியிட்ட கருத்து வருமாறு:

"வடநாட்டு வணிக முதலைகள், மேல்நாட்டு வணிக வேந்தர்களுக்கு கங்காணிகளாகத் தென்னாட்டு மக்களைச் சுரண்டுவதற்கே திட்டமிட்டு, வேலை செய்யப்பட்டு, இதற்கு தேசியமுலாம் பூசப்படுகிறது." குடிஅரசு 27.12.1948

.வெ.ரா அவர்கள் வலியுறுத்திய 'காலதேச வர்த்தமான மாற்றங்களில்' உலக அளவிலும், அதன் விளைவான இந்திய அளவிலும், 'அரசு' என்பதானது பெற்று வரும் மாற்றங்கள் பற்றியும், ஏற்கனவே விளக்கியுள்ளேன்.(‘ தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (3)- 'தனி நாடு' உண்மையில் தனி நாடா?’ ; http://tamilsdirection.blogspot.sg/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_26.html )

தென்னாட்டு மக்களை விட, அதிக பாதிப்புக்கள்ளான வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் பலர், தமிழ்நாட்டிற்கு கூலிகளாக வேலை பார்க்க வரும் காலக்கட்டம் இதுவாகும்.(‘ பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில்; தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா? வீழ்ந்து வருகிறார்களா?’; http://tamilsdirection.blogspot.sg/2016/09/1967.html

இந்திய ஊழல் கோரப்பசியாளர்களிடம், செல்வாக்கை இழந்த, மேல்நாட்டு வணிக வேந்தர்கள் ஆதரவுடன் உருவானது தான், 'ஆம் ஆத்மி கட்சியா'? என்ற கேள்வியை எழுப்பும் சான்றுகளும், வெளிவரத் தொடங்கியுள்ளன. (http://tamilsdirection.blogspot.sg/2015/02/12.html   & http://tamilsdirection.blogspot.sg/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html  & https://www.youtube.com/watch?v=ipDFDFYiCcU & https://www.youtube.com/watch?v=3iy_g5tq_P8  & கெஜ்ரி‍ - கமல் காமெடி; http://www.dinamalar.com/news_detail.asp?id=1860122 )

மேல்நாட்டு வணிக வேந்தர்கள் ஆதரவுடன்திராவிட அரசியல் கொள்ளையை உரசாமல், தமிழ்நாட்டில், என்.ஜி.ஓக்கள் வளர்ந்து வந்த போக்கின் பின்பலத்தில், தமிழ்நாட்டில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மண்ணைக் கவ்விய, ஆம் ஆத்மி கட்சி, கமலுடன் கூட்டு சேர்ந்தது நல்ல காமெடியே ஆகும்.

இன்று 'வடநாட்டு வணிக முதலைகளை' மிரட்டி, தமது செல்வத்தையும், வியாபாரத்தையும் 'திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்கள்' பெருக்கி வந்துள்ளது தொடர்பான சான்றுகள், ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. 'வார்டு' கவுன்சிலரே பலநூறு கோடி அதிபராகி வருகின்றனர். அதற்கு விலையாக தரப்பட்டதே தமிழுக்கும், தமிழருக்கும்  தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட இழப்புகளும் சேதங்களும் ஆகும்.’ ( ‘கோபம்: 'பெரியாரின்' தோல்வியும், அண்ணாவின் வெற்றியும் (2)- ஒரு பின்னூட்டமும்(Feedback)  விளக்கமும்’; http://tamilsdirection.blogspot.sg/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html ) & (‘தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை; பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட  'பெரியார்.வெ.ரா (1)’; http://tamilsdirection.blogspot.sg/2017/09/blog-post_20.html )

தமிழ்நாட்டில் 'தனித்தமிழ்நாடு உணர்ச்சிபூர்வ போதை' ம் வந்துள்ளதை, 'ராஜிவ் கொலை' மூலம் பெற்ற கீழ்வரும் அனுபவம் தெளிவுபடுத்தியது. உணர்ச்சிபூர்வபோதை என்று வரும் போது, 'பாரதி போதையாளர்களும்' அவ்வாறே வலம் வந்ததும், அதில் வெளிப்பட்டது.

"நாம் இப்படியே எவ்வளவு காலம் பேசிக் கொண்டிருக்கிறோம்? தனித்தமிழ்நாடுக்கு எப்போது முயற்சி செய்யப் போகிறோம்?" என்று, நான் 'பெரியார்' இயக்கத்தில் இருந்த சமயம், ஒரு 'தோழர்' அடிக்கடி – ‘தனித் தமிழ்நாடு உணர்ச்சிபூர்வ போதையில் - என்னிடம் கேட்பார்.. ராஜிவ் கொலைக்குப் பின், 'ராஜிவ் கொலையும், சதிகளும்' புத்தகம் வெளியிட்டு, மத்திய, மாநில உளவுத் துறையினர் 'அடிக்கடி' என்னையும், மற்ற 'திருச்சி பெரியார் மைய'த் தோழர்களையும் விசாரிக்க ஆரம்பித்த பின், அவர் பெரியார் இயக்கத்தை விட்டே ஒதுங்கி விட்டார். அந்த சமயத்தில் தஞ்சை ந்திருந்த ஜெயகாந்தனைச் சந்தித்து, அந்த புத்தகத்தை நான் கொடுத்தேன். தலைப்பைப் பார்த்து, அதை வாங்க மறுத்து விட்டார். மத்திய அரசு தொடர்பானநெருக்கடி நிலை, தடா, பொடா உள்ளிட்டு எந்த அநீதியையும் எதிர்க்காத‌ 'புத்திசாலித்தனமான முற்போக்கு' எழுத்தாளர் அவர். தமிழ்நாட்டில் பாரதி வழிபாட்டு புழுதிப் புயலுக்கான, உணர்ச்சிபூர்வ போதைக் காற்றை உருவாக்கியவர்களில் முதலிடம் வகிப்பவர் அவர்.ஜெயகாந்தன் உள்ளிட்டு எந்த எழுத்தாளராவது தமிழின் மரணப் பயணத்தைக் குறித்து எழுதியிருக்கிறர்களா? ( http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

ராஜிவ் கொலைக்குப் பின், தமிழ்நாடானது பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆதிக்கத்தில் சிக்குண்டு பயணித்ததும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளியிட்ட அபாய எச்சரிக்கை வெளியீடுகளை புறக்கணித்து, 'அரசியல் தற்கொலைப் போக்கில்'  ஈழ விடுதலை பயணித்ததும்;

எனக்குள் ஏற்படுத்திய வெறுப்பின் காரணமாக, அதுவரை பொழுதுபோக்காக ஈடுபட்டிருந்த நான்,  இசை ஆய்வில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினேன்.

இசை இயற்பியல் (Physics of Music)  ஆய்விற்கு பழந்தமிழ் இலக்கியங்களை உட்படுத்தினேன். தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய தெளிவின்றி, .வெ.ரா அவர்கள் தாய்மொழி, தமிழ் இலக்கியங்கள், புராணங்கள் பற்றிய தவறான புரிதலில், 'தமிழ் அடையாள அழிப்பு' நோக்கி பயணித்தது எனக்கு தெளிவானது. 2005 முதல் இன்றுவரை அது தொடர்பாக முன்வைத்து வரும் கருத்துக்களுக்கு, கடந்த சில வருடங்களாக 'பெரியார்' ஆதரவாளர்களிடமிருந்து பின்னூட்டங்கள் வரத் தொடங்கியுள்ளதானது வரவேற்க வேண்டியதாகும்.

ராஜிவ் கொலைக்கு அடுத்து, இசை ஆய்வில் முழுமையாக ஈடுபட்டு, அதில் வெளிப்பட்ட மேலே குறிப்பிட்ட .வெ.ரா தொடர்பான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கிய போக்கில்:

'திருச்சி பெரியார் மையம்' மூலம் உருவான சமூக கிருமிகள், எனது உற்றத்திலும், சுற்றத்திலும் ஏற்படுத்திய சீர்குலைவுகளை, தனிப்பட்ட பாதிப்புகளாக கருதாமல்,  (  http://tamilsdirection.blogspot.sg/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html      & http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html & http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html )

சமூகவியல் ஆய்வு நோக்கில் கூடுதல் கவனம் செலுத்த, அப்பாதிப்புகள் எல்லாம் என்னை தூண்டியது. 1944இல் எவ்வாறு காலனிய சூழ்ச்சியில், 'இனம்’ என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் திரிந்து, அந்த சூழ்ச்சியில் .வெ.ரா அவர்கள் சிக்கி, அதுவரை அவர் சேமித்து வைத்திருந்த சமூக ஆற்றல்கள் எல்லாம், பாதகமான சமூக மடைமாற்றத்திற்கு உள்ளானது? என்ற கண்டுபிடிப்பிற்கு, அந்த முயற்சியானது, என்னை இட்டுச் சென்றது. (http://tamilsdirection.blogspot.sg/2016/01/ )

மேலே குறிப்பிட்ட போக்கில் பயணித்த எனது சமூகவியல் ஆய்வுகளில், ஜெயலலிதாவின் 'மர்ம மரணமானது' கூடுதல் வெளிச்சம் தந்து, கீழ்வரும் பதிவானது வெளிவர வழி செய்தது.

‘தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட‌', பிரிவினை போக்கும்; இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக', 'பாதை மாறிய', பிரிவினைப் போக்கும்; சங்கமமானதன் விளைவே, 'சசிகலா பினாமி' ஆட்சியா?’ ( http://tamilsdirection.blogspot.sg/2017/02/blog-post_19.html )

அதை தொடர்ந்து, பாதகமான சமூக மடைமாற்றத்தின் முடிவினை வெளிப்படுத்தும் 'சிக்னலாக';

சசிகலாவின் "சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளும்' முயற்சியில், அரசியல் விஞ்ஞானத்தில்( Political Science)  புதிய ஆராய்ச்சிக்கு வழி வகுக்கும் 'ஓபிஎஸ் நிகழ்வு'  ( ‘OPS PHENOMENON’ ) என்பதானது வெளிப்பட்டுள்ளது.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/02/digital-age-2017.html )

1944இல் பாதகமான சமூக மடைமாற்றம் ஏற்பட்டதன் விளைவாக, 1967-இல் முளைவிட்டு, 1969-இல் ஊக்கம் பெற்று, 1991-இல் வீரியம் பெற்ற 'அரசியல் அமாவாசை சமூக செயல்நுட்பமானது', ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' மூலம் முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளது;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும். (http://tamilsdirection.blogspot.sg/2017/04/1967.html )

திருச்சி பெரியார் மையத்தில் என்னுடன் பங்களித்தவர்களில், லண்டனில் வாழும் நண்பர் தொல்காப்பியனைத் தவிர, வேறு எவரும் இதுவரை  எனது பதிவுகள் தொடர்பாக எந்த பின்னூட்டத்தையும் தரவில்லை, என்பதானது, அத்தகையோரெல்லாம் 'திராவிட மனநோயாளிகளாக' பயணித்ததை; ( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

நான் கண்டுபிடிக்காமல் ஏமாந்து, அவர்களுடன் பயணித்திருந்தேனா? என்ற சுய விமர்சனத்தை, எனக்குள் அரங்கேற்றியுள்ளது. சுயமாக நேர்மையான முறையில் பணமோ, சமூகத்தில் செல்வாக்கோ, ஈட்ட வழியும்/மனதும் இல்லாதவர்களுக்கு, 'குறுக்கு வழி ஏணியாக' ஈ.வெ.ரா அவர்களும், அவர் வழியில் என் போன்றோரும், சமூகத்திற்கு கேடான திசையில் பயணித்தோமா? என்பதும் அந்த ஆய்வில் அடக்கமாகும்.

விவாத வரம்பின் எல்லையை மீறி, விவாதத்தில் ஈடுபடுபவர்களையும், விவாதப் பொருளாக‌, விவாதத்திற்குள் கொண்டு வந்து, விவாத எல்லையை, தன்னிச்சையாக, விரிவுபடுத்தும் 'நாகரீகமற்ற அரைகுறை அறிவாளிகளையும்' அவர்களில் அடையாளம் கண்டேன்; புலமையாளர்கள் 'அசிங்கப்பட அஞ்சி' ஒதுங்கியதே, தமிழ்மொழி, இலக்கியங்கள் தொடர்பான 'உணர்ச்சிபூர்வ தற்குறி' போக்கில், 'பெரியார்' ஆதரவாளர்கள் பயணிக்க காரணமா? என்ற ஆய்வையும் தொடங்கும் வகையில். (http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_26.htmlதமது வரை எல்லைகள் (limitations)  பற்றிய புரிதலின்றி, தமக்கு விளங்காதவைகளை, தவறாக புரிந்து கொண்டு, இழிவுபடுத்தும், கண்டிக்கும் 'குருட்டு பகுத்தறிவாளர்கள்', உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான், 'பகுத்தறிவாளர்கள்' என்ற அடையாளத்தில் இருக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 
(http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_19.html )

தமக்கான ஆதாய வாய்ப்புள்ள மனிதர்களை தேடி சென்று, அவர்களை ஈர்க்கக் கூடிய, தம்மிடம் உள்ள திறமைகளை 'வெளிச்சம்' போட்டு, 'வாலாட்டுவதும்';
ஆதாயம் குறையும் போது, 'வாலாட்டுவதையும்' குறைப்பதும்;
ஆதாயமற்ற மனிதர்களை மட்டம் தட்டி, 'முற்போக்கு யோக்கியராக' தம்மை முன்நிறுத்தி,  தம்மை உயர்த்திக் கொள்வதும்;
'திராவிட மன நோயாளிகளிடம்'  வெளிப்பட்ட தனித்துவ (Unique) கூறுகளாகும்.

எனது வாழ்வில் 'பெரியார்' கொள்கையாளராக நான் வாழ்ந்த கட்டத்திற்கு முன்னும், பின்னும், எனது சமூக வட்டத்தில் இருந்தவர்கள் எல்லாம், விதிவிலக்கின்றி, உண்மையையும், நேர்மையையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த உயர்ந்த மனிதர்களாக இருந்துள்ள சூழலில்;

இடைப்பட்ட கட்டத்தில், 'மனித இழிவுக்கு இலக்கணமான' மனிதர்களுடன் நான் பழகி, அதன் காரணமாகவே 'பெரியார் சமூக கிருமிகள்' உருவான சமூக செயல்நுட்பத்தை நான் கண்டுபிடிக்க நேர்ந்ததும், இயற்கையின் விதியோ? என்று வியந்து வாழ்கிறேன்; அவ்வாறு பழகியதற்கு 'தண்டனையாகவே',  எனது குடும்பத்தில் ஏற்பட்ட சீர்குலைவினையும், 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'(புறநானூறு) என்ற வழியில் ஏற்றுக் கொண்டு; இப்படிப்பட்ட சமூக கிருமிகள் உருவாகவா, .வெ.ராவும் அவர் வழியில் எண்ணற்றோரும் பாடுபட்டனர்? என்ற ஆராய்ச்சியையும் மேற்கொண்டு.

அவ்வாறு 'பெரியார் சமூக கிருமிகள்' செல்வாக்குடன் வளர்ந்த தமிழ்நாட்டில்;

'பல வருடங்களுக்கு முன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சென்னை 'ரவுடி' வீரமணி தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்திகளில்;  (http://www.frontline.in/static/html/fl2016/stories/20030815007913400.htm ) கீழ்வரும் முக்கிய தகவலானது, இடம் பெற்றதாக தெரியவில்லை.

சென்னை மாநிலக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில்,  'தலைமை விருந்தினராக' (Chief Guest) கலந்து கொள்ளும் அளவுக்கு, அந்த கல்லூரியின் மாணவர் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தவர் அந்த 'ரவுடி' வீரமணி ஆவார். அந்த செல்வாக்கில், அரசியலில் நுழைந்து அமைச்சராகும் அளவுக்கு, அவருக்கு 'கூறு' இல்லாததாலேயே, அவர் மரணமடைந்தார், என்பது எனது கருத்தாகும். அவ்வாறு அவர் அமைச்சராகியிருந்தால், அவர் காலில் விழுந்து, துணை வேந்தர் பதவி பெற, போட்டி போடும் பேராசிரியர்கள் வாழும் நாடாக தமிழ்நாடு உள்ளது. 'ரவுடி' வீரமணிக்கு 'இன்னும் அதிக கூறு' இருந்திருந்தால், தமிழ்நாட்டில் 'காசுக்காக' துதி பாடும், 'அறிவு விபச்சார' கவிஞர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் புகழ் பாட, 'தமிழ்ப் புரவலராகவும்' வலம் வந்திருக்க முடியும்.
பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் கட்சித் தலைவர்கள், முதல்வர்கள் காலில் விழுந்து வணங்கும் நாடாக தமிழ்நாடு உள்ளது. ரசிகர்கள் நடிகர்களுக்கும், கட்சித் தொண்டர்கள் தலைவர்களுக்கும் கடவுளர்களாகக்கட் அவுட்வைத்து பாலாபிசேகம் செய்வதைக் குறை சொல்ல முடியுமா?’ (http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

திராவிட கட்சிகளின் அட்சியில் தமிழ்நாடு எந்த அளவுக்கு சீரழிந்தது? என்ற முன்னோட்ட ஆய்விற்கு:

1967க்கு முன் இருந்த சென்னை மாநிலக்கல்லூரி எவ்வாறு இருந்தது? 1967 முதல் எவ்வாறு படிப்படியாக சமூக விரோத சக்திகளிடம் சிக்கி, 'ரவுடி' வீரமணி தலைமை விருந்தினராக பங்கேற்கும் அளவுக்கு சீரழிந்தது? என்ற ஆய்வினை மேற்கொள்வதானது துணை புரியும்.

தாய்மொழிக்கும் (தமிழுக்கும்) அம்மொழி மக்களுக்கும் (தமிழர்களுக்கும்) இடையிலான தொடர்புகள் பற்றிய‌ உலக ஆய்வு முடிவுகள் பற்றி தெரியாமல், ஈ.வெ.ரா அவர்கள் பய‌ணித்தது போலவே; (http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html )
காலனிய சூழ்ச்சியிலான 'இனப் பார்வையில்' ஊழலின் சமூகக்கேடுகள் புரியாமல் பயணித்ததானது, 'திராவிட' ஆளுங்கட்சிகளின் 'மெகா' ஊழல்களுக்கும் 'வக்காலத்து' வாங்கும் 'திராவிட ஊழல் பாதுகாப்பு வீரர்களாக', 'பெரியார்' கட்சிகள் செயல்பட வழி வகுத்ததா?

அத்தகைய சமூக சூழலில், தமிழ்நாட்டில் 'அரசியல் அமாவாசைகளாக' பயணித்த அறிவுஜீவிகள் எல்லாம், இன்றைய மாணவர்கள், இளைஞர்களிடம் எடுபடும் வாய்ப்பும் குறைந்து வருகிறது.

இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் 'உணர்ச்சிபூர்வ' பேச்சை, எழுத்தை, நம்பி ஏமாறும் போக்கிலிருந்து விடுபட்டவர்கள் ஆவர். வாழ்வில் சாதனை புரிந்தவர்களின் பேச்சுக்கள் மட்டுமே அவர்களை ஈர்த்து வருகின்றன.

அவர்களை ஈர்க்கும் சாதனைகளோடு, நான்  இசைத் தகவல் தொழில்நுட்ப புலமையாளராக வாழும் இந்த கட்டத்தில் (http://drvee.in/ );


அவர்களோடு பழகும், உரையாடும் வாய்ப்புகள் எல்லாம், சமூகவியல் ஆய்வுகள் மூலம் தமிழ்நாட்டை அழிவுபூர்வ சமூக மடைமாற்றத்திலிருந்து மீட்டு, ஆக்கபூர்வமாக திசை திருப்ப துணை புரிந்து வருகின்றன. எனவே 'திராவிடர்/திராவிட' அடையாள குழப்பத்தில், 'தமிழ் அடையாள அழிப்பு' போக்கானது முடிந்து, 'தமிழ் அடையாள மீட்சி'யானது, பரிமாற்ற பலன் பெறும் போக்கில், 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு இணக்கமாகும் சமூக செயல்நுட்பமானது, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் அரங்கேறும் காலமானது, அதிக தொலைவில் இல்லை

மேற்கத்திய சமூக வரலாற்றில் உருவான 'நேஷ்னலிசம்' (Nationalism)  என்ற ஆங்கிலச் சொல்லை, 'தேசியம்' என்று தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இறக்குமதி செய்த குழப்பம் பற்றிய தெளிவின்றி, நான் பயணித்த காலத்தில் உருவானது ' பெரியாரியல் பார்வையில் இந்திய தேசியம்' என்ற நூலாகும். அந்த குழப்பத்திலிருந்து நான் தெளிவு பெற்று, இன்று  ரோமிலா தாபார் போன்ற 'முற்போக்கு அறிஞர்கள்' எல்லாம், அதே குழப்பத்தில் சிக்கி, பயணித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.
‘ What is wrong with importing Euro-centric nationalism to India?
A criticism on Romila Thapar’s ‘ON NATIONALISM’ ‘ ; http://tamilsdirection.blogspot.in/2016/07/what-is-wrong-withimporting-euro.html

ரோமிலா தாபாரை பாராட்டும் தமிழ்நாட்டு 'இந்துத்வா எதிர்ப்பு' அறிவுஜீவிகளில் எவரும், மேலே குறிப்பிட்ட பதிவினை, அறிவுபூர்வமாக விமர்சிப்பதை, நான் வரவேற்கிறேன். அறிவுபூர்வ விவாதங்களை தவிர்த்து, தமக்குள்ள 'மீடியா' செல்வாக்கை நம்பி, உணர்ச்சிபூர்வ போக்கில் பயணிப்பவர்கள் எல்லாம், இணைய யுகத்தில், இன்றைய படித்த மாணவர்கள், இளைஞர்கள் பார்வையில், சருகாகி உதிர்வதை, எவராலும் தவிர்க்க முடியாது.

(வளரும்)

No comments:

Post a Comment