Thursday, September 21, 2017

தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை;


 பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட  'பெரியார்'  .வெ.ரா (1)


'தனி மனித உறவுகளில் லாப நட்டம் பார்த்து, நெருங்கும்/ஒதுங்கும், 'விபச்சார' தொழில்நுட்ப புலமையாளர்களை' ஒதுக்கி; என் மீது தாம் காணும் குறைகளையும், என்னுடன் நேர்மையாகவும், சமூக பொறுப்புணர்வுடனும் விவாதிப்பவர்களையே,  எனது சமூக வட்டத்தில் அனுமதித்து வாழ்கிறேன்.' என்பதையும்;

அந்த துணிச்சலிலேயே 'பெரியார்' ஈ.வெ.ரா ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்வா ஆதரவாளர்கள் ஆகிய இரு சாராரிடையே, உணர்ச்சிபூர்வ இரைச்சலை தவிர்த்து, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்க, என்னால் இயன்ற முயற்சிகள் மேற்கொண்டு வருவதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_4.html)

‘பெரியார்' வழிபாட்டுப் போதையிலிருந்து விடுபட்டு, திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும், சுயலாப நோக்கின்றி, .வெ.ரா அவர்களின் நிறைகுறைகளை ஆராய்ந்து, .வெ.ராவின் கொள்கைகளை, .வெ.ராவே வலியுறுத்தியபடி, 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தி, ஏற்றுக் கொள்ளகூடியவைகளை ஏற்று பயணித்து வருவதாக, நான் கருதும்;

சிலரில் ஒருவரான திண்டுக்கல் பொ.முருகானந்தம்;

"பெரியார் பிறந்தநாள்  கொண்டாடப்பட்டு வரும் நாளில் 17.09.17  உங்களது கட்டுரையை எனது  முகநூலிலும், பெரியார் அமைப்பைச்  சேர்ந்த முக்கியத்தலைவர்களுக்கும் அனுப்பலாம்  எனக்  கருதுகிறேன்.
(‘தமிழர்களில் 'தற்குறிகளை'வளர்த்தது; 'பார்ப்பனசூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?’; http://tamilsdirection.blogspot.sg/2016/01/ )

உங்கள் அனுமதியையும்,விருப்பத்தையும் தெரிவித்தால் செய்யத் தயாராக  இருக்கிறேன்."

என்று எனக்கு அண்மையில் ஈ-மடல் அனுப்பினார்.

அதற்கு பின்வருவதை பதிலாக அனுப்பினேன்.

"கீழ்வருவதை முன்னுரையாகவோ, பின்னுரையாகவோ இணைத்து அனுப்பலாம்; 'பெரியார்' பிறந்த நாள் தொடர்பாக அனுப்புவதால்;

''வன்முறை போராட்டங்கள்' வெற்றி பெறாது என்று தெளிவுபடுத்தி, உலகிற்கே முன்னுதாரணமாக, பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதமின்றி, போராட்டங்கள் நடத்தி, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்ததனது அறிவுக்கு தவறென பட்டவைகளை, பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட.வெ.ரா அவர்கள;

பின்னர் 'பெரியார்' சிறையில் சிக்கி, 'கட்சித் தலைவர்களின் பெயர்களை சொல்வதே அவமரியாதை' என்ற சமூக நோயும், காரியம் சாதிக்க காலில் விழும் கலாச்சாரமும், வளர்ந்ததே, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சிரழிவிற்கு இடமளித்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்."

அது தொடர்பாக;

"//தனது அறிவுக்கு தவறென பட்டவைகளை, பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட.வெ.ரா அவர்கள;//

எந்தெந்த விசயங்களில் இது போல இருந்து  இருக்கிறார் என்பது பற்றிய குறிப்புகள் இருந்தால், தங்களது நேரத்தைப் பொறுத்து தெரிவித்து  உதவ  வேண்டுகிறேன்." என்று விளக்கம் கேட்டிருந்தார்.

அதற்கான விளக்கத்தையே, ஆர்வமுள்ள அனைவரின் பார்வைக்கு முன்வைக்கும் நோக்கில், இந்த பதிவை எழுதினேன்.

ராஜாஜியின் தூண்டுதலில் காங்கிரசில் சேர்ந்த .வெ.ரா அவர்கள்;
 'காங்கிரஸ்', 'காந்தி', 'கதர்', 'மதுவிலக்கு' தொடர்பாக;

‘தான் ஏன் ஆதரிக்கிறேன்?’ என்று விளக்கிய பேச்சுக்களும், கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன.

1925இல் காங்கிரசில் இருந்து வெளியேறி, சுயமரியாத இயக்கம் தொடங்கி, 'குடி அரசு' இதழையும் ஆரம்பித்த பின்;

அவற்றையே பின்னர்தான் ஏன் எதிர்க்க நேரிட்டது?’ என்று விளக்கிய பேச்சுக்களும், கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன.

அவற்றை நான் சென்னை பெரியார் திடலில் உள்ள நூலகத்திலும், திருச்சி பெரியார் மாளிகையில் இருந்த 'குடி அரசு' உள்ளிட்ட இதழ்களிலும் படித்திருக்கிறேன்1967 வரை வெளிவந்துள்ள .வெ.ராவின் பிறந்த நாள் அறிக்கைளிலும், அவர் தன்னைப் பற்றிய, தனது கட்சியைப் பற்றிய, சுய விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைத்ததை, நான் படித்து வியந்திருக்கிறேன்.

ஆர்வமுள்ளவர்கள் அவற்றையும் தேடி படித்தால்;

தனது அறிவுக்கு தவறென பட்டவைகளை, பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்டவர்  .வெ.ரா ஆவார் என்பது தெளிவாகும்.

அவ்வாறு அவர் ஆதரித்த எழுத்துக்களிலும் சரி, அவற்றையே எதிர்த்த எழுத்துக்களிலும் சரி, 1944க்கு முன், அவற்றில் உணர்ச்சிபூர்வ இரைச்சலற்ற அறிவுபூர்வ அணுகுமுறை இருந்ததை, நான் உணர்ந்தேன்அது மட்டுமல்ல, சுயலாப நோக்கற்ற சமூகப் பற்று என்பதன் அடிப்படையிலேயே, அவரின் ஆதர‌வும் இருந்தது; எதிர்ப்பும் இருந்தது; தனது நிலைப்பாட்டின் மாற்றத்தை பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொள்ளும் துணிச்சலும் இருந்தது.

காந்தி இறப்பதற்கு முன் காந்தியை கடுமையாக கண்டித்து எழுதிய .வெ.ரா அவர்கள், காந்தி மறைந்த போது, அவரை வானளாவ புகழ்ந்தார். பின் 1950களில் 'காந்தி பொம்மையை உடைத்தல்', 'காந்தி படங்களை எரித்தல்' போராட்ட விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்தினார்; காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியை ஆதரித்த காலத்தில்பிரதமர் நேருவை கடுமையாக எதிர்த்துக் கொண்டே, முதல்வர் காமராஜரை தீவிரமாக ஆதரித்தார். இவ்வாறு தான் ஆதரித்த போக்கையும் சரி, எதிர்த்த போக்கையும் சரி, பொது அரங்கில் அறிவுபூர்வமாக விவாதிப்பதை ஊக்குவித்தார்.


.வெ.ரா அவர்கள் தனது மனதிற்கு சரியென பட்ட போக்கில் பயணித்த போது, 'பிம்ப' (Ego) சிறையில் சிக்காமல், மான அவமானங்களைப் பற்றி கவலைப்படாமல், பயணித்தவர் என்பதற்கான சான்றினையும் இங்கு பார்ப்போம்.

'குடிஅரசுஇதழில், 'பொதுவுடமை' பிரச்சார கட்டுரைக்காக, காலனி அரசு அந்த இதழை முடக்க முயற்சித்த போது, அதிலிருந்து தப்பி, இதழை தொடர்ந்து நடத்துவதற்காக‌, இதழின் பொறுப்பாளராக இருந்த தனது அண்ணன் கிருஷ்ணசாமியையும், கட்டுரையாளர் ஜீவானந்தத்தையும் காலனி அரசுக்கு மன்னிப்பு மடல்கள் கொடுக்க வைத்தார். அது தொடர்பாக, பொது அரங்கில் விமர்சனம் வந்த போது, அந்த இரண்டு மடல்களுக்கும் தாமே பொறுப்பு, தமது வற்புறுத்தல் காரணமாகவே அவர்கள் இருவரும் மன்னிப்பு மடல்கள் கொடுத்தார்கள், என்று பகிரங்கமாக விளக்கம் கொடுத்தார்.

முதல் தலைமுறையாக படிக்கும் குடும்பங்களின் பிள்ளைகளில் பலர் போராட்டம், தீக்குளித்தல் என்று தமது படிப்பையும், வாழ்வையும் தொலைத்துக் கொள்ளும் போக்கானது, பொது அரங்கில் 'பெரியார்.வெ.ராவின் செல்வாக்கு சரிந்து, தி.மு. வளர்ந்த போக்கில், அரங்கேறிய சமூக நோய்களாகும். இன்று அந்த சமூக நோய்களை கண்டிக்கும் துணிச்சலின்றி, 'பெரியார்' கட்சிகளும் அதே போக்கில், பயணித்து வருவது சரியா?

.வெ.ராவால் 'காலித்தனம்', 'சண்டித்தனம்' என்று கண்டிக்கப்பட்ட போராட்ட வடிவங்களை, இன்று கையிலெடுக்கும், ஆதரிக்கும், 'பெரியார்' கட்சிகளின் தலைவர்களில் எவராவது, குறைந்த பட்சம் .வெ.ரா அவர்கள் அவ்வாறு கண்டித்தது தவறு என்று சொல்ல துணிச்சல் இல்லையென்றாலும், தாங்கள் இன்னும் 'பெரியார் வழியில்' 'பெரியார் தந்த புத்தியில்' பயணிப்பதாக சொல்லிக் கொள்வது வெட்கக்கேடில்லையா?


1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பிராமணர்கள் பங்கேற்றது;

காலனி அரசின் சார்பில், ராஜாஜி  .வெ.ராவை சந்தித்து, சென்னை ராஜதானியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு வலியுறுத்தியது;

தமது கட்சி தொண்டர்களுக்கான பயிற்சி வகுப்புகளை, .வெ.ரா தனது பிராமண நண்பரின் தோட்டத்தில் நடத்தியது;

திராவிடநாடு பிரிவினை கோரிக்கைக்கு, ராஜாஜி உள்ளிட்ட பிராமணர்களின் ஆதரவை, .வெ.ரா கோரி பெற்றது (http://tamilsdirection.blogspot.sg/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html  ) ;

சென்னை லட்சுமிபுரம் பிராமணர் அமைப்பில்,.வெ.ரா பேசியது;

ஆந்திராவைச் சேர்ந்த பிராமண நாத்தீகர் கோராவுடன் சேர்ந்து பிரச்சாரங்கள் மேற்கொண்டது;

தமது உடல்நல குறைவிற்கு பிராமண மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றது;

தமது வேனை பழுது நீக்கம் செய்ய 'பிராமண' டி.வி.எஸ் நிறுவனத்தை அணுகியது;

மணியம்மையை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக, ராஜாஜியுடன் ஆலோசனை செய்தது;


சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநாட்டில் சேது ரத்தினம் ஐயர் பங்கேற்றது, கம்யூனிஸ்ட் ஆதரவு பெயரில் பிராமணர்களான பி.இராமமூர்த்தி, ஏ.பாலசுப்பிரமணியம் ஆகியோரையும், காங்கிரசு ஆதரவு பெயரில் பிராமணர்களான பி.எஸ்.சீனிவாசன், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரையும் ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது; (முகநூல் விவாதத்தில் வெளிப்பட்டவை)

தனது ஆருயிர் நண்பர் ராஜாஜியின் பிணம் எரியூட்டப்படுவதற்கு முன், சக்கர நாற்காலியுடன் தன்னைத் தூக்கச்செய்து, மூன்று முறை வலம் வந்து, 'இந்து மத' சடங்கை நிறைவேற்றிய அளவுக்கு, தனிமனித நேயத்தில் 'சிகரமாக' ஈ.வெ.ரா வாழ்ந்தது (http://tamilsdirection.blogspot.sg/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html );

போன்றவை தொடர்பான சான்றுகளின் அடிப்படையில்;

ஈ.வெ.ராவின் மறைவிற்குப் பின்னர், 'பெரியார்' கொள்கையாளர்களில் பலர், 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' (https://en.wikipedia.org/wiki/Xenophobia) மனநோயாளிகளாக வாழ்கிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


ஈ.வெ.ராவின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் அரைகுறையாக புரிந்து கொண்டு, அறிவுபூர்வ விமர்சனங்களை தவிர்த்து, உணர்ச்சிபூர்வ சமூக மன நோயாளிகளாக, 'பெரியார்' சிறைக்கைதிகளாக‌, அவர்கள் பயணிக்கிறார்களா? திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் வலைப்பின்னலில் இடம் பெற்று பயணிக்கும் 'பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம், அம்பலமாகாமல் இருப்பதற்கும், அதுவே காரணமா?

இன்று .வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்தால், எனது ஆய்வுகளை படித்து, ஐயங்களை தெளிவுபடுத்திக் கொண்டு, தமிழ் மொழி மற்றும் இலக்கியங்கள் தொடர்பான, தனது கொள்கைகளை தவறு என்று பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்டிருப்பார்;

என்பதையும் ஏற்கனவே கீழ்வருமாறு பதிவு செய்துள்ளேன்.

‘தாய் மொழிப்பற்றை 'தாய்ப்பால் பைத்தியம்' என்று கேலி செய்து. 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என அறிவித்து, 'தமிழ்ப் பாரம்பரியமும் பண்பாடும் தமிழர்க்குக் கேடானவை' என்று, தமக்குக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு, பெரியார் .வெ.ரா அவர்கள்,   தமது அறிவு அனுபவ அடிப்படையில், பிரச்சாரம் செய்தார். தமது நிலைப்பாட்டிற்கு எதிரான சான்றுகள் வெளிப்பட்டு, தமக்கும் அது சரியெனப்பட்டால், தமது நிலைப்பாடு தவறு என்று பகிரங்மாக அறிவித்து, தனது நிலைப்பாட்டை, அவர் மாற்றிக் கொண்டதற்கு பல சான்றுகள் உண்டு. உலகிலேயே வெட்கப்படாமல் அது போன்று தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்து மாற்றிக் கொண்டவர் பெரியார் .வெ.ரா  மட்டுமே, எனக்கு தெரிந்த வரையில்.ஒரு மொழியானது அம்மொழி பேசும் மக்களின் அடையாளத்துடனும், அச்சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினுடனும், எவ்வளவு நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளது, என்பது பற்றி உலக அளவில் வெளிப்பட்டுள்ளசான்றுகளின் அடிப்படையிலும், பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி வெளிவந்துள்ள எனது ஆய்வுகளின் அடிப்படையிலும், பெரியார் .வெ.ரா இன்று உயிரோடு இருந்தால், தமிழைப் பற்றிய மேற்குறிப்பிட்ட  தனது நிலைப்பாடுகள் தவறு என்று அறிவித்து, தனது நிலைப்பாட்டைத் திருத்திக் கொண்டிருப்பார், என்பதை எவராலும் மறுக்க முடியுமா?’ (‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3)- சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்’; http://tamilsdirection.blogspot.sg/2014/09/ )

இன்று இந்துத்வா ஆதரவாளர்களில் பலர், ஈ.வெ.ரா அவர்களை, 'காலனி ஆட்சியின் அடிவருடி' என்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். அது சரி என்றால்;

காலனி ஆட்சியில் ஈ.வெ.ரா அவர்கள் அளவுக்கு, சிறைத் தண்டனைகளை, தான் நடத்திய பத்திரிக்கைகளுக்கு தடை, அபராதங்களை,  சந்தித்த;

தமிழ்நாட்டில் ராஜாஜி, காமராஜர், சத்தியமூர்த்தி உள்ளிட்டு, அவரின் சமகால காங்கிரஸ், மற்றும் இந்துத்வா ஆதரவாளர்கள் எவரேனும் வாழ்ந்ததாக தெரிவித்தால், அவை தொடர்பான சான்றுகளை நான் ஆய்வுக்கு உட்படுத்துவதில் ஆர்வமாக உள்ளேன்.

ஈ.வெ.ரா தொடர்பான உண்மைகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், காலனி ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து, அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களை படிக்கலாம்.

அதே போல, 'இனம்' மற்றும் 'சாதி' ஆகிய சொற்களின் பொருளானது, காலனிய சூழ்ச்சியில் திரிந்தது தொடர்பான, எனது ஆய்வுகளையும், ஈ.வெ.ரா இன்று படித்தால், அவரின் 'இந்திய தேசிய' எதிர்ப்பு என்பதானது;

திராவிட அரசியல் கொள்ளை சூழ்ச்சியில், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் சீரழிய வழி வகுத்தது, என்பதையும் பகிரங்கமாக அறிவித்து, 'திராவிடர்/திராவிட 'குழப்பங்களிலிருந்து விடுபட்டு, தெளிவான 'தமிழர்' அடையாளத்தை, 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு இணக்கமாகவே வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

‘இந்திய விடுதலையை 'உரிமை மாற்ற' ஏற்பாடாக கருதி, ஈ.வெ.ரா வெளியிட்ட கருத்து வருமாறு:

"வடநாட்டு வணிக முதலைகள், மேல்நாட்டு வணிக வேந்தர்களுக்கு கங்காணிகளாகத் தென்னாட்டு மக்களைச் சுரண்டுவதற்கே திட்டமிட்டு, வேலை செய்யப்பட்டு, இதற்கு தேசியமுலாம் பூசப்படுகிறது." குடிஅரசு 27.12.1948

தென்னாட்டு மக்களை விட, அதிக பாதிப்புக்கள்ளான வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் பலர், தமிழ்நாட்டிற்கு கூலிகளாக வேலை பார்க்க வரும் காலக்கட்டம் இதுவாகும்.

இந்திய ஊழல் கோரப்பசியாளர்களிடம், செல்வாக்கை இழந்த, மேல்நாட்டு வணிக வேந்தர்கள் ஆதரவுடன் உருவானது தான், 'ஆம் ஆத்மி கட்சியா'? என்ற கேள்வியை எழுப்பும் சான்றுகளும், வெளிவரத் தொடங்கியுள்ளன(http://tamilsdirection.blogspot.sg/2015/02/12.html  & http://tamilsdirection.blogspot.sg/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html & https://www.youtube.com/watch?v=ipDFDFYiCcU & https://www.youtube.com/watch?v=3iy_g5tq_P8 & கெஜ்ரி‍ - கமல் காமெடி; http://www.dinamalar.com/news_detail.asp?id=1860122மேல்நாட்டு வணிக வேந்தர்கள் ஆதரவுடன்,  திராவிட அரசியல் கொள்ளையை உரசாமல், தமிழ்நாட்டில், என்.ஜி.ஓக்கள் வளர்ந்து வந்த போக்கின் பின்பலத்தில், தமிழ்நாட்டில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மண்ணைக் கவ்விய, ஆம் ஆத்மி கட்சி, கமலுடன் கூட்டு சேர்ந்தது நல்ல காமெடியே ஆகும்.

இன்று 'வடநாட்டு வணிக முதலைகளை' மிரட்டி, தமது செல்வத்தையும், வியாபாரத்தையும் 'திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்கள்' பெருக்கி வந்துள்ளது தொடர்பான சான்றுகள், ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. 'வார்டு' கவுன்சிலரே பலநூறு கோடி அதிபராகி வருகின்றனர். அதற்கு விலையாக தரப்பட்டதே தமிழுக்கும், தமிழருக்கும்  தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட இழப்புகளும் சேதங்களும் ஆகும்.’ ( ‘கோபம்: 'பெரியாரின்' தோல்வியும், அண்ணாவின் வெற்றியும் (2)- ஒரு பின்னூட்டமும்(Feedback)  விளக்கமும்’; http://tamilsdirection.blogspot.sg/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html )

'பெரியார்' ஈ.வெ.ரா வலியுறுத்திய 'பொதுத் தொண்டருக்கான இலக்கணப்படி வாழ்பவர்களில், ஒப்பீட்டளவில், இன்று  ஆர்.எஸ்.எஸில் அதிகமாகவும், 'பெரியார்' கட்சிகளில் குறைவாகவும் இருந்தால் வியப்பில்லை. (‘ஈ.வெ.ராவின் 'பொதுத் தொண்டனுக்கான அளவுகோலின்படி, நமது  'யோக்கியதை '  எப்படி?’; http://tamilsdirection.blogspot.sg/2016/10/blog-post.htmlஈ.வெ.ராவின் பொதுத் தொண்டருக்கான இலக்கணம் மற்றும் போராட்ட வடிவங்களை ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் பரீசிலித்து, இந்த காலக்கட்டதிற்கு ஏற்ற வகையில் வளர்த்து எடுத்து;


பிரிவினை சமூக நோயிலிருந்து 'தமிழர்' என்ற அடையாளத்தை மீட்கும், 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் ப‌ரிமாற்ற ஆக்கபூர்வ (Mutually beneficial) திசையில் பிணைக்கும்;

போக்கில் பயணித்தால், அது தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வழி வகுக்கும்.

யாரை/ எதை  ஆதரித்து/எதிர்த்து பேசி/எழுதி யார், யார், என்னென்ன பலன்கள் பெற்று வாழ்கிறார்கள்? என்பது தொடர்பான 'இரகசியங்கள்' எல்லாம், வெட்ட வெளிச்சமாகி வரும் டிஜிட்டல் யுகத்தில்:

சாதாரண மக்களிடையிலும், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியிலும்,  பேச்சும் எழுத்தும்  வ‌லுவிழந்து, யாரானாலும், வாழும் வாழ்வே தகவல்  பரிமாற்ற வலிமையை வெளிப்படுத்தி  வரும் காலம் இது.

எனவே ஈ.வெ.ராவின் பொதுத் தொண்டருக்கான இலக்கணத்தின்படி வாழ்பவர்களை பெரும்பான்மையாக கொண்ட இயக்கமே இனி தமிழ்நாட்டில் எடுபடும். தாய்மொழிவழிக்கல்வி ஆதரவு போக்கில், தமிழையும், தமிழ் இலக்கியங்களையும் ஆதரித்து தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் செயல்படும் வேகத்திற்கு ஏற்ப, 'விழித்துக் கொள்ளாத' 'பெரியார்'கட்சிகள் எல்லாம் சருகாகி உதிரும் போக்கும் தொடங்கி விட்டது;

என்பதை திறந்த மனதுடன், உணர்நுட்பத்துடன், சாதாரண மக்களிடையிலும், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியிலும், வாழும் வாய்ப்புள்ளவர்கள் அறிவார்கள். நீதிக்கட்சியில் பிராமணர் இருப்பது தொடர்பான விவாதத்தில், ஈ.வெ.ரா அவர்கள் முன் வைத்த‌ கருத்துக்களின் அடிப்படையில், 'விழித்துக் கொள்ளும்' 'பெரியார்' கட்சிகள், மேலே குறிப்பிட்ட போக்கில் பயணிக்கும் ஆர்.எஸ்.எஸுடன், (தாய்மொழிவழிக்கல்வி போன்ற)  உடன்படும் பொதுப் பிரச்சினைகளில் ஒன்று சேர்ந்து பயணிப்பதானது, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சியை துரிதப்படுத்தும்.

ஈ.வெ.ரா அவர்கள் முன்வைத்த பிரிவினை கோரிக்கையானது, எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் பொதுவாழ்வு வியாபாரத்திற்கு பயன்படும் சமூக நோயாகி விட்டது? என்பதை அடுத்து பார்ப்போம்.

'காவிரியில் கர்நாடக அரசு அணைகள் கட்டிக் கொள்வதில் ஆட்சேபணையில்லை'என்று முதல்வரான கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்தில் அறிவித்த போதும்;

க‌ச்சத்திவை அன்றைய பிரதமர் இந்திரா தாரை வார்த்ததற்கு துணை போன போதும்;

வைகோ தி.மு.கவில் இருந்து கொண்டு, க‌லைஞர் புகழ் பாடிய பேச்சுக்கள் வெளிவந்திருக்கின்றன.

பின் தி.மு.கவை விட்டு, பலர் தீக்குளிக்க வெளியேறிய போது, பேசிய பேச்சுக்கள்;

அதன்பின் தி.மு.கவுடன் கூட்டணி வைத்து பேசிய பேச்சுக்கள்;

தடாவில் தன்னை கைது செய்த, முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து பேசிய பேச்சுக்கள்;

பின் அதே ஜெயலலிதாவுடன் தேர்தல் கூட்டணி வைத்து பேசிய பேச்சுக்கள்;

தா.கிருட்டிணன் கொலைக்குப் பின், மதுரையில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் அழகிரியைக் கண்டித்து பேசிய பேச்சுக்கள் (https://www.youtube.com/watch?v=wdqbVYKpIHs );

பின் பாராளுமன்ற தேர்தலின் போது, அழகரியுடன் நேசமாகி, ஆதரவு கோரிய பேச்சுக்கள்;

என்று தமிழ்நாட்டில் அரசியலில் குட்டிக்கரணங்கள் அடித்ததில், முதல் இடம் வைகோவிற்கு இருந்தால் வியப்பில்லை.

அந்த அளவுக்கு குட்டிக்கரண புகழ் பெற்ற வைகோ அண்மையில்;

தமிழ்நாடு என் தாய்நாடு. இந்தியா என்பது இடைக்கால ஏற்பாடு என்ற கருத்தினை வெளியிட்டிருக்கிறார். (https://www.youtube.com/watch?v=0_zI9Cz9t5E  )

நீட் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு போன்ற பிரச்சினைகளில், உணர்ச்சிபூர்வ பாதகப் போக்கினைத் தவிர்த்து, ஆக்கபூர்வ புத்திசாலித்தன போக்கில் அணுகுவது பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2017/09/blog-post.html )

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தினை, மத்திய அரசின் உள்துறை மனித வள மேம்பாட்டு துறை, சட்டத்துறை, ஆகிய துறைகளின் ஆமோதிப்புடன், சுகாதாரத் துறையை அடைந்த பின், சந்தித்த குளறுபடிகளால்;

உச்சநீதிமன்றத்தில் பாதகமான தீர்ப்பு வந்தது, என்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. (http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/sep/20/was-tamil-nadus-neet-ordinance-not-even-read-by-union-health-ministry-1659848.html)

மத்திய அரசு துறைகளுக்கிடையில், அதிலும் அவசரமான சூழலில், இது போன்ற தவறுகளுக்கு வாய்ப்புகள் இருப்பது, மத்தியில் கூட்டணி அரசில் அங்கம் வகித்த கட்சியின் தலைவரான வை.கோவிற்கு தெரியாதா? தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கவா, உள் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, சட்டத்துறை ஆகிய மூன்று துறைகள் ஒப்புதல் வழங்கினர்? புத்திசாலித்தனமாக, மத்திய அரசிடம் அதற்கு நிவாரணமாக, அடுத்து சில வருடங்களுக்காவது விதிவிலக்கு வழங்கும் சட்டபூர்வ வாய்ப்புகளை ஆராயுமாறு அழுத்தம் கொடுத்து காரியம் சாதிப்பது புத்திசாலித்தனமா

மாறாக, வைகோ மேலே குறிப்பிட்ட காணொளியில் தெரிவித்துள்ளவாறு பிரிவினை பேசி, அதைக் கெடுப்பவர்கள் எல்லாம் பொதுவாழ்விலிருந்து ஒதுங்கும் வரை, தமிழ்நாட்டிற்கு உருப்படியாக ஏதும் சாதிக்க முடியுமா?

அது தொடர்பாக, துக்ளக்கில் வெளிவந்துள்ள கீழ்வரும் விளக்கமானது, எனது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ்நாடு என் தாய்நாடு. இந்தியா என்பது இடைக்கால ஏற்பாடு’- என்கிறாரே வைகோ? என்று எம்.செல்லையா, சாத்தூர்-3 என்ற வாசகர் கேட்டிருக்கிறார். வைகோ தமிழ்நாட்டைத் நம்முடைய தாய்மொழி நாடு என்று கூறியிருந்தால் நான் மனமுவந்து ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், அவர் கூறியது பச்சைப் பிரிவினைவாதம்.

தமிழ்நாட்டில் கடந்த 60-களில் பலர் பிரிவினை பற்றிப் பேசினார்கள் என்பதே கூட இப்போது மக்களுக்குத் தெரியாது. காரணம், அவர்களே பின்பு மாறிவிட்டனர். 1938-ல் ஹிந்தியை எதிர்த்து தனித்தமிழ் நாடு கேட்டு, பின்பு தனி திராவிட நாடு வேண்டும் என்று கேட்ட பெரியார், பிறகு தமிழைக்காட்டுமிராண்டி மொழிஎன்றும், தமிழர்கள்காட்டுமிராண்டிகள்என்றும் கூறி, தேசிய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பிரதிபலித்த காங்கிரஸை ஆதரித்தார்.

அண்ணாதுரை திராவிடநாடு அடைய தி.மு..வை உருவாக்கினார். ஆனால், 1963-ஆம் ஆண்டு அண்ணாதுரையே திராவிடநாடு கொள்கையை வெளிப்படையாகக் கைவிட்டார். தமிழ்நாடு ஆன்மிகத்தால் பாரதத்துடன் இணைந்தது மட்டுமல்லாமல், பாரத நாட்டுக்கே ஆன்மிகத்தில் தலைமை வகிக்கக் கூடிய தகுதி பெற்றது. இன்றும் வட இந்தியாவில், ‘ஆன்மிகம் தென்னிந்தியாவில்தான் இருக்கிறதுஎன்று கூறுவதை நாம் கேட்கிறோம்.

தவிர, திராவிட நாடு என்று எதை தி.மு.. குறிப்பிட்டதோ, அங்கிருந்துதான் ஆன்மிக ஒளி பாரதம் முழுவதும் விசியது. திராவிட தேசங்களாகக் கருதப்படும் கேரளாவில்தான் அத்வைத ஞானத்தை அளித்த சங்கரரும், தமிழ்நாட்டிலிருந்து விசிஷ்டாத்வைத தத்துவத்தை விவரித்த ராமானுஜரும், கர்நாடகத்திலிருந்து துவைதத்தை விளக்கிய மத்வரும் பிறந்தனர். சங்கரருடைய பரமகுருவான கௌடபாதாச்சாரியாரை, வடஇந்தியாவில், ‘திராவிடாச்சாரியார்என்று அழைக கிறார்கள். சங்கரர் தன்னை, திராவிட சிசு (திராவிடத்தின் குழந்தை) என்று அவர் எழுதிய சௌந்தர்ய லஹரியில் கூறுகிறார். ஆகவே, திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரிக்கவே முடியாது.

எனவே, திராவிடமோ, தமிழோ இனமல்ல; பிரதேசங்கள். திராவிடமோ, தமிழோ தேசியத்திலிருந்து பிரிக்கக் கூடியது அல்ல. இது திராவிட பிரதேசங்களிலும், தமிழ்நாட்டிலும் இருக்கும் சாதாரண மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர்கள் பிரிவினையை ஆதரிக்கவில்லை. அதைப் புரிந்துகொண்டுதான், எவரையும் எதிர்கொள்ளும் தைரியம் மிக்க பெரியாரும், மக்களைத் தன் நாவன்மையால் மகுடியாக்கி மயக்கிய அண்ணாதுரையும் கூடப் பிரிவினை வாதத்தைக் கை விட்டனர்.

இப்படி, ஜாம்பவான்களே, சரிப்பட்டு வராதுஎன்று குப்பையில் போட்ட விஷயத்தை, வைகோ கையில் எடுத்துப் பேசுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வைகோ பாரதியாரை ஒருமுறை நன்றாகப் படிப்பது நல்லது. அவரைப் போல் தமிழையும் தமிழ்நாட்டையும் நேசிக்கவும், இந்திய தேசியத்தைப் போற்றவும் அவர் தெரிந்துகொள்வார். குழம்பியிருக்கும் வைகோவுக்கு பாரதியார் மூலம் தெளிவு பிறக்கலாம்”-
துக்ளக் 19.09.2017-  'நினைத்துப் பார்க்கிறேன்- எஸ்.குருமூர்த்தி

மேலே குறிப்பிட்ட விளக்கத்தில், பிரிவினை கோரிக்கையை முன்வைத்துக் கொண்டே, காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியை .வெ.ரா அவர்கள் ஆதரித்த போக்கில்;

பொதுமக்கள் கருத்துருவாக்கத்தில் (public opinion formation), ஏற்கனவே 'திராவிடர்/தமிழர்/திராவிட 'குழப்பங்களில் சிக்கியிருந்த பிரிவினை கோரிக்கையானது எந்த அளவுக்கு பலகீனமாகி, அக்கோரிக்கையானது பொதுவாழ்வு வியாபாரத்திற்கு, முதலில்லாத மூலதனமாக மாறியது? என்பது தொடர்பான எனது ஆய்வுகளை அடுத்து எழுத எண்ணியுள்ளேன்.

நேரு குடும்ப ஆட்சியில், இந்திய விடுதலைக்குப்பின் தேச கட்டுமானமானது (Nation Building) சீர்குலைவிற்குள்ளான சவாலை, பிரதமர் மோடி சந்தித்து வருவதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். ( http://tamilsdirection.blogspot.sg/2016/10/caution-bjps-support-to-strengthen.html )

'பெரியார்' .வெ.ரா ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்வா ஆதரவாளர்கள் ஆகிய இரு சாராரிடையே, உணர்ச்சிபூர்வ இரைச்சலை தவிர்த்து, அறிவுபூர்வ விவாதங்கள் மூலமாக, பிரிவினை சமூக நோயிலிருந்து 'தமிழர்என்ற அடையாளம் மீண்டு, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் ரிமாற்ற ஆக்கபூர்வ (Mutually beneficial) திசையில் பயணிக்கும் சமூக செயல்நுட்பம் உருவாகும் என்பதும்;

அது பிரதமர் மோடி சந்தித்துள்ள தேசகட்டுமான சிக்கலுக்கு தீர்வாக,  மேலே துக்ளக் தெரிவித்த தென்னாட்டு பங்களிப்பு வரிசையில், அமையக் கூடும் என்பதும்;

எனது கணிப்பாகும்


குறிப்பு:

"அப்போது (நான் 'பெரியார்' கொள்கையாளராக இருந்த காலத்தில்) அவர் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தாரா? அந்த நோய்க்கான மருந்தை எப்போது கண்டு பிடித்தார்? அவரோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட எங்களைப் போன்றவர்களுக்கு ஏன் மருந்தைக் கொடுக்காமல் தான் மட்டும் மருந்தை உட்கொண்டு சரியானார்? இந்தக் கேள்விகள் உடன் செயலாற்றிய எங்களுக்கு ஏற்படுவது நியாயமா? இல்லையா?”

என்று என் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனம் தொடர்பாக;

நியாயமான கேள்விகள். ஆமாம். நான் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை, எனது இசை ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்து, என்னால் முடிந்தவரை, 2005லிருந்து, என்னை (தஞ்சை இரத்தினகிரி, மனோகரன் உள்ளிட்டு) சந்தித்த 'பெரியார்' ஆதரவாளர்களிடம் விளக்கி வருகிறேன்; பதிவுகள் வெளியிட்டு வருகிறேன். 2006 ‘தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலரில்’  வெளிவந்த, கீழ்வரும் கட்டுரை, ஆர்வமுள்ளவர்கள் பார்வைக்கு;

கறுப்புவெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்’ ; http://tamilsdirection.blogspot.sg/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html

'பிராமண எதிர்ப்பு செனோபோபியாவும், ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியாவும்' 
http://tamilsdirection.blogspot.com/2018/11/5.html 

No comments:

Post a Comment