Thursday, June 2, 2016


தமிழ் அழிவு சுனாமியிலிருந்து தமிழை மீட்க முடியுமா?


‘சுயலாப பொதுவாழ்வு வியாபார’ நோக்கின்றி, தமிழ்வழிக்கல்வி மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டுளோர் பார்வைக்கு, கீழ்வரும் தகவல்கள்.

அத்தகையோரின் அனுபவங்களையும் தெரிந்து கொண்டு, என‌து முயற்சிகளை வளர்த்துக் கொள்வதிலும், ஆர்வமுடன் உள்ளேன்.

ஆங்கில வழி 'கான்வெண்ட்' பள்ளிகளுக்கு இணையாக,  கழிவறை, குடிநீர், வகுப்பறை, ‘வகுப்புக்கு ஒரு ஆசிரியர்’  என்ற சிறப்புடன், திருச்சி விமான நிலையத்திலிருந்து கே.கே.நகர் செல்லும் வழியில் உள்ள, ‘அன்னை ஆசிரமம்'  நடத்தும் தமிழ்வழி, அரசு உதவி பெறும் (Aided)  ஆரம்பப் பள்ளி உள்ளது. எனது தூண்டுதல் மற்றும் ஆதரவின் அடிப்படையில், அந்த பள்ளி நிர்வாகம்,  ஒரு துண்டறிக்கையை அச்சிட்டு அப்பகுதி பெற்றோர்களிடம் விநியோகித்துள்ளார்கள்.  குழந்தைகளின் புலன் அறிவு மூளை வளர்ச்சிக்கு (Cognitive skills related brain growth),  10 வயது வரை, தாய்மொழி வழியில் படிப்பதே சிறந்தது, என்பது தொடர்பான உலக அளவிலான‌ ஆய்வு முடிவுகள்,  அதில் உள்ளன. வரும் சூன் மாணவர் சேர்க்கையில்,  அதன் பலன் தெரியும். அதன்பின் அம்முயற்சியை விரிவுபடுத்த எண்ணியுள்ளேன். 

'கான்வெண்ட்' பள்ளிகளுக்கு இணையாக தமிழ்வழி பள்ளிகள் இருந்து, இலவச கல்வி வழங்கினாலும், அதில் தமது பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர்களுக்கு விருப்பமில்லை.  ('ஒரு பள்ளி, ஒரு மாணவன், இரு ஆசிரியர்கள் சேர்க்கைக்கு பெற்றோர்களிடம் கெஞ்சும் அவலம்'; http://www.dinamalar.com/news_detail.asp?id=1533588 ) ஏழைகள் கூட , கடன் வாங்கி நர்சரி பள்ளிகளில் படிக்க வைத்து, 3ஆம் வகுப்புக்கு மேல் பணம் கட்ட முடியாமல், தமிழ்வழிப் பள்ளிகளில் சேர்ப்பதும் நடக்கிறது. அதன் தொடர்விளைவாக, அந்த பெற்றோர்களும், அவ்வாறு தமிழ்வழியில் படிக்கும் பிள்ளைகளும், தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகிறார்கள். 

எனவே இளம் மருத்துவர்கள், பொறியாளர்கள், விரிவுரையாளர்கள் என்று படித்தவர்கள் பார்வைக்கு, மேலே குறிப்பிட்ட ஆய்வு முடிவுகளை கொண்டு சென்று, அவர்கள் தமது பிள்ளைகளை தமிழ் வழியில் சேர்க்க தூண்டும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறேன். அதன்பின் அவர்கள் வழியில், மற்றவர்களும், கிராமங்கள் வரை, தங்கள் பிள்ளைகளை, தமிழ்வழியில் படிக்க வைக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே சில அய்.ஏ.எஸ் அதிகாரிகளும், ஜெயமோகன் உள்ளிட்ட எழுத்தாளர்களும், தமது பிள்ளைகளை தமிழ் வழி அரசு பள்ளிகளில் படிக்க வைத்த செய்திகளும்,  ஊடகத்தில் வெளிவந்துள்ளன. 

அந்த நோக்கில், அண்மையில் சந்தித்த விரிவுரையாளார் ஒருவர் , தமது 3 வயது குழந்தையை, ஆங்கில வழி நர்சரி பள்ளியில் சேர்ப்பதில்லை என்றும், 5 வயதில் தமிழ்வழி பள்ளியில் சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவருக்கு அனுப்பிய, உலக அளவிலான ஆய்வுகள் கீழே.  அவருடனும், அதே போல் இன்னும் பலரிடமும்,  நடத்திய உரையாடலில் கீழ்வரும் தகவல்களும் வெளிப்பட்டன‌.

1970களின் பிற்பகுதியில் தான், ஆங்கிலவழி மெட்ரிகுலேசன் பள்ளிகள் புற்றீசல் போல் வளரத் தொடங்கின. எனவே இன்று சுமார் 50 வயதுக்கும் மேல் வாழ்பவர்கள் (தமிழ் பத்திரிக்கைகளை காசு கொடுத்து வாங்கி படிப்பவர்கள்) பெரும்பாலும் உயர்நிலைக் கல்வி வரை,  தமிழ்மொழி வழியில் படித்தவர்கள் ஆவர். சுமார் 40 வயதுக்கும் குறைவானவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலவழிக் கல்வியில் பயின்றவர்கள் ஆவர். (தமிழ் பத்திரிக்கைகளை பெரும்பாலும் படிக்காதவர்கள்; அரசு பள்ளிகளில் படித்தவர்கள் விதி விலக்கு ) ஒப்பீட்டளவில், ஆங்கிலவழிக் கல்வியில் பயின்ற அவர்களில் பெரும்பாலோர், சுயநலவாதிகளாகவும், சமூக ஒழுக்க நெறிகளை சுயநலத்திற்கு எளிதில் காவு கொடுப்பவர்களாகவும்,  உள்ளனர்.  அந்த சுயநல போக்கில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் எல்லாம், பெரும்பாலும் அவர்களின்,  அடிப்படைக் கல்வியை (Primary Education)  ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிக்க வைத்த, அவர்களின் பெற்றோர்களாக இருக்கிறார்கள். அது கீழே உள்ள ஆய்வுகளோடும்  ஒத்து  போகிறது. அந்த பெற்றோர்களில் பலர் வெளியில் சொல்ல முடியாமல் அனுபவிக்கும் துயரங்களில், +2, கல்லூரி மாணவ/மாணவிகளாக இருக்கும் தமது பிள்ளைகள் எல்லாம், மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide), போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use) போன்றவற்றில் சிக்கி, குடும்பத்திலும் உறவுகளை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதும், இடம் பெறுகின்றன.

தாய்மொழியில்லாத ஆங்கிலவழிக் கல்வியின்,  'சமூக நன்கொடைகளே'(?) இவை என்பதையும், ஏற்கனவே பார்த்தோம். (‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3): சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

‘மக்களின் மொழியும் அவர்களின் அடையாளமும் நெருக்கமான தொடர்புள்ளவையாகும். தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  போன்றவை அதிகரிக்கும். ‘ (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm)


கணித மேதை ராமானுஜம், நோபெல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் மற்றும் சந்திரசேகர், அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட விஞ்ஞானிகளும், புதுமைப்பித்தன், கல்கி உள்ளிட்ட எழுத்தாளர்களும், அது போல, உலக அளவிலான சாதனையாளர்கள் அனைவருமே, அடிப்படைக் கல்வியை தாய்மொழிவழியில்  படித்தவர்கள் ஆவர். அடிப்படைக் கல்வியை தாய்மொழியில்லாத ஆங்கில வழியில் படித்து, சாதனை புரிந்தவர்கள் எவராவது இருக்கிறார்களா? தமிழ்நாட்டில் அடிப்படைக் கல்வியை ஆங்கிலவழியில் படித்தவர்கள் எல்லாம், சாதனையாளர்களாக வெளிவர வாய்ப்பில்லையா?  இல்லை என்பதையே, உலக அளவிலான ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

இன்றுள்ள சூழலில் 5ஆவது வரை, தமிழ் வழியிலும், அதன்பின் ஆங்கில வழியிலும் குழந்தைகளை படிக்க வைப்பதே புத்திசாலித்தனம் ஆகும். தமிழ்வழியில் அடிப்படைக் கல்வியை முடித்து,  10 வயதுக்கு மேல், ஆங்கில‌வழி பயிலும் மாணவர்கள் எல்லாம், 10 வயது வரை, தாய்மொழியில்லாத ஆங்கிலவழியில் படித்த மாணவர்களை விட,  நன்கு படிப்பார்கள் என்பதையும், கீழேயுள்ள‌ ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. 

குறுக்கு வழிகளில் மதிப்பெண்கள் பெற்று, 'அரசியல் தொடர்புகள்' மூலம் பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் என்று வளர்ந்த போக்கும், குழந்தைகளின் புலன் அறிவு மூளை வளர்ச்சிக்கு பாதகமான,‌ ஆங்கிலவழிப் பள்ளிகள் வளர்ந்த போக்கும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவா? என்பது ஆய்விற்குரியதாகும். 'ஒழுக்கக்கேடான' குறுக்கு வழிகளில், 'அரசியல் தொடர்புகள்' மூலம்,  'செல்வர் ஆகி', 'மதிக்கத்தக்க வாழ்வியல் புத்திசாலி' (?) 'முன்மாதிரியானவர்கள்' (Role model), எவ்வாறு 'தமிழ் வேர்க்கொல்லி'களாகவும், சமூக நோய்க்கிருமிகளாகவும், பங்காற்றுகிறார்கள்? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

ஒழுங்காக படித்து, இன்று மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் இருப்பவர்களால், அல்லது அவ்வாறு படித்து பிறதுறைகளில் இருப்பவர்களால்   மட்டுமே,  இந்த ஆய்வுகளை படித்து விளங்கிக் கொள்ள முடியும்.  எனவே அத்தகையோர் பார்வைக்கு,  இந்த ஆய்வுகளை கொண்டு சென்றால் மட்டுமே, தமிழ்வழிக்கல்வி புத்துயிர் பெற முடியும்.

தமது குழந்தையை தமிழ்வழியில் சேர்க்க முடிவு செய்துள்ள விரிவுரையாளருக்கு,  நான் அனுப்பிய ‘Research references ;

1.     தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்’

From : http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html 

2. ‘Children Learn Better in Their Mother Tongue; Advancing research on mother tongue-based multilingual education’; http://www.globalpartnership.org/blog/children-learn-better-their-mother-tongue 

3.  All the international forums like UNESCO, the World Bank, World Declaration on ‘Education for All’ (EFA), the UNO General Assembly’s Convention on the Child’s Rights etc has stressed to educate children at least at primary level using mother tongue as medium of instruction. Because researches have shown that mother tongue-based schooling significantly improves learning.’;  http://www.isaet.org/images/extraimages/P1214011.pdf 

4.‘when learners start school in a language that is still new to them, it leads to a   teacher-centred approach and reinforces passiveness and silence in classrooms. This in turn suppresses young learners’ potential and liberty to express themselves freely. It dulls the enthusiasm of young minds, inhibits their creativity, and makes the learning experience unpleasant. All of which is bound to have a negative effect on learning outcomes.’

Angelina Kioko is a professor of English and Linguistics at United States International University, Nairobi, Kenya. 

https://www.britishcouncil.org/voices-magazine/why-schools-should-teach-young-learners-home-language 
(1950-களிலிருந்தே, யுனெஸ்கோ(UNESCO) உள்ளிட்டு, மேற்குறிப்பிட்ட ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஈ.வெ.ராவின் பார்வைக்கு, அந்த ஆய்வுகள் போயிருந்தால், அவர் 'தாய்ப்பால் பைத்தியம்' என்று, தாய்மொழி வழிக் கல்வியை இழிவுபடுத்திய தனது தவறுக்கு, பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து, தாய்மொழிவழிக் கல்வியை ஆதரித்து அறிக்கை விட்டிருப்பார். இன்றுள்ள 'பெரியார்' கட்சிகளாவது, அதைச் செய்வார்களா?)

சென்னையில் ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகள் எல்லாம் , ஊழலின் கோரப்பசிக்கு இரையானதை எதிர்க்காத 'சமூக குற்றம்' காரணமாக, சென்னை மக்கள் வெள்ள பாதிப்புகளில் சிக்கினார்கள்.

அதே போல் தமிழ் அழிவு சுனாமி அறிகுறிகள் பற்றிய  கவலையின்றி, ‘நாமும்,  நமது குடும்பமும் பிழைத்தால் போதும்’ என்று நாம் வாழ்கிறோமா? அதன் விளைவாக, இன்னும் 2 தலைமுறைகளில், நமது வாரிசுகள் எல்லாம், தமிழில் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரியாத, தமிழ் வேரழிந்த, உலக அகதிகளாக வாழ்வதை, தவிர்க்க முடியுமா?

தமிழ்நாட்டில் விளையாட்டுப் பள்ளி(Play School)  முதல் ஆங்கில வழியில் படித்து, இன்று +2 மற்றும் கல்லூரி மாணவர்களாயிருக்கும் பலருக்கு,  தமிழில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாது, என்பது தமிழ் அழிவு சுனாமி அறிகுறியாகும். தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணத்துடன், கூடவே பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றையும் இழந்து, சமூக கிருமிகளின் ஆதிக்கத்தில், தமிழ் வேரற்ற 'தமிங்கீலிசர்களின்' நாடாக, தமிழ்நாடு மாறிவரும் போக்கை கண்டு கொள்ளாமல்; ('தமக்கென வாழா மன நோயாளிகள்'; http://tamilsdirection.blogspot.in/2015/02/12_17.html ) அப்போக்கு வெற்றி பெறுமானால், 'பெரியார்' மூலம் உருவான‌ 'சமூக கிருமி'களின் பங்களிப்பால், வரலாற்றில் ஈ.வெ.ரா குற்றவாளியாகவே, அவரின் (அவர் வழியில் என் போன்ற எண்ணற்றவர்களின்) சுயநலம் பாரா உழைப்பும் தியாகமும் பயன்பட்டதாக, கருதப்படாதா? என்ற கவலையும் இருக்கிறது. ( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html


குறிப்பு:
படிக்கும் போதே கண்களில் நீரை வரவழைத்த, நம்பிக்கையூட்டிய செய்தி:
‘புதுக்கோட்டை - வல்லம்பக்காட்டில் முன்மாதிரி அரசுப் பள்ளியாக மாற்றியமைத்த கிராம மக்கள்’;
http://tamil.thehindu.com/tamilnadu/

No comments:

Post a Comment