Thursday, May 7, 2015



'நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460


கடந்த வருடம், தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி அது,

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி, யாருக்கும் அடங்காத 'முரட்டு காளையாக, சுமார் 17 வயது நபர் சுற்றிக் கொண்டிருந்தார். ஒரு உறவினர், இன்னொரு உறவினரை குடும்பப் பகை காரணமாக கொலை செய்ய, அவரைத் தூண்டி, பட்டப்பகலில் பலர் பார்க்க கொலை செய்ய வைத்தார். பின் காவல் துறை அவரை கைது செய்த 'சில நாட்களிலேயே' ஜாமீனில் வந்தார். நாயகன் 'கமலாஹாசன்' அளவுக்கு, ஊரில் இப்போது அவருக்கு மரியாதை. அடுத்து அரசியலில் நுழைந்து, எம்.எல்.ஏ, அமைச்சர் என்று 'உயர' அவருக்கு 'வளமான' எதிர்காலம் காத்திருக்கிறது. 

தமிழ்நாட்டில் 'இப்படிப்பட்ட வளர்ச்சிக்கான' வரலாற்றுப் பின்னணியை சுருக்கமாக பார்ப்போம்.

விருதுநகர் பகுதியில் நீதிக்கட்சியைச் சேர்ந்த W.P.A செளந்திரபாண்டிய நாடார்,  'ஜமீன்' போல செல்வாக்குடன் இருந்த காலம் அது. தந்தையை இழந்து,11வயதில் பள்ளி படிப்பை முடித்துக் கொண்ட, (http://en.wikipedia.org/wiki/K._Kamaraj) , படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த காமராஜர், காங்கிரஸ் கட்சி வேர் பிடிக்க, 'துணிச்சல் மிகு' தொண்டராக‌ செயல்பட்டார். (‘He regularly practiced ‘silambam’(a typeof martial arts and exercise that is practiced with long sticks and boxing. Page 23, P. Kandaswamy,  The Political Career of K.Kamaraj , (New Delhi: Concept publishing Company, 2001) " ‘பீடி’ புகைப் பிடிக்கும் பழக்கம், அதுவும் அந்த காலத்தில், அவருக்கு ஏற்படும் அளவுக்கு, அவரின் 'நட்பு வட்டம்' (?) இருந்தது. பின் காங்கிரசில் பிரபல தலைவராகி, ஒரு போராட்டத்தில் கைதாகி, ஆந்திராவில் சிறையில் இருந்த போது,  ' சுதேசி' பீடியை வீசி விட்டு, 'விதேசி' சிகிரெட்டை' காமராஜர் புகைக்கத் தொடங்கினார்" என்ற தகவலை, ம.பொ.சி 'எனது போராட்டம்' என்ற சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் காங்கிரஸ் தலைவர்களின், குறிப்பாக சத்தியமூர்த்தியின் வழிகாட்டுதலில், அவர் தன்னை உன்னதமான தலைவராக வளர்த்துக் கொண்டார். Kamaraj  happened  to listen   to   speeches   of   George   Joseph,   Lakshmana   Pillai   and Satyamurthi at Virudunagar. Among all of them Satyamurthi attracted  Kamaraj  and  on  the  same  day  Kamaraj  met  him.  These incidents  of  Jallainwala  Bagh  and  subsequent  meeting  with  Satyamurthi  turned  the life of Kamaraj once for all. Page 24, G. Balan, Kamarajar Vazhkayum Aatchiyum (Life and Administration of Kamaraj), (Chennai: Vanathi Publishers, 2010), ஆனாலும் 1967 காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் வரை, தி.மு.க மற்றும் கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பை சமாளிக்க, ஆங்காங்கே 'அடியாட்கள்' காங்கிரஸ் கட்சியில் இருந்தார்கள்.ஆனால் அவர்களெல்லாம், கட்சியிலும், சமூகத்திலும் சற்று கீழாக ‘சிற்றின’மாகவே மதிக்கப்பட்டார்கள்;  தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது வரை.

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்’ -  திருக்குறள் 451 

(ஆங்கிலேயர் வருகைக்குப்பின், 'ரேஸ்'(Race) என்ற ஆங்கிலச் சொல்லிற்கு, தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லை, யார் முதலில் திரித்து அறிமுகப்படுத்தினார்கள்? என்பது ஆய்விற்குரியது.
 http://tamilsdirection.blogspot.in/2015/06/depoliticize-4.html )

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இந்திய விடுதலையின் போது காங்கிரஸ் கட்சி மூன்று பிரிவுகளாக தனித்தனியாக செயல்பட்டு வந்தன. விடுதலைக்கு பின் காமராஜர் சார்பான அணியே நிலை பெற, மற்றவை  சுவடின்றி உதிர்ந்தன. சிங்கப்பூர் லீ குவான் யூ மாதிரி, காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த தனது அரசியல் எதிரிகளை ஓரங்கட்டி, காமராஜர் காங்கிரஸ் கட்சியை தனது முழுக்கட்டுப்பட்டில் கொண்டு வந்தார். இந்திய விடுதலைக்குப் பின் நடந்த 1952 முதல் பொது தேர்தலில் தோல்வி கண்ட காங்கிரஸ் , அதன்பின்  1957, 1962 பொது தேர்தல்களில் வெற்றி பெற்றது; காமராஜர் , நேருவின் தூண்டுதலினால் டெல்லி அரசியலுக்கு செல்லும் வரை.

1944இல், திராவிடர் கழகம் தோன்றி, பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் கீழிறங்கி, உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகள் அரங்கேறத் தொடங்கிய போக்கு,  'இன உணர்வு' என்ற பெயரில், 'சிற்றினம்', 'நல்லினம்' போன்ற வேறுபாடுகள் சிதைந்து, குழம்பி, 'சிற்றினம்' தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற வழி வகுத்தா? என்பது பற்றிய ஆய்விற்கு தொடர்புள்ள தகவல்கள் வருமாறு; 

1967 இல், தி.மு.க ஆட்சியைப் பிடித்த பின், அந்த காங்கிரஸ் அடியாட்களில் 'புத்திசாலிகள்', தி.மு.க வில் சேர்ந்து, கட்சியிலும், சமூகத்திலும் மிகுந்த செல்வாக்குடன், செல்வந்தர்களாக வளர்ந்தார்கள். குற்றவாளிகளை கண்டுபிடித்த தண்டிக்க வேண்டிய காவல் துறை, அரசு வக்கீல், நீதித் துறை, சிறைத்துறை ஆகியவற்றில் 'கறுப்பு ஆடுகள்' முளை விட்டு, அவர்களோடு 'சேர்ந்து' வளர்ந்தார்கள். அந்த போக்குகளின் ஊடே, 'எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள்' உள்ளிட்ட அறிவுஜீவிகள் ஆகியோரில் பெரும்பாலோர், சமூகத்தில் செல்வாக்கில் வளர்ந்த 'புதிய சிற்றின' துதிபாடிகளாகவும், 'தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு' பொது அரங்கு வியாபாரிகளாகவும் வளர்ந்தார்கள்.

இந்திய விடுதலைக்குப் பின் தமிழ்நாட்டில் நடந்த முதல் 1952 பொது தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் பெரும்பான்மையின்றி தோற்றது. கம்யூனிஸ்டுகளின் அதரவுடன் முத்துராமலிங்கத்தேவர் ஆட்சி அமைக்க இருந்த வாய்ப்பைக் கெடுத்து, ராஜாஜியின் பங்களிப்பால்,  'கட்சித்தாவல்' (Defection) தமிழ்நாட்டில் அறிமுகமாகி, காங்கிரஸ் ஆட்சியைப்                 பிடித்தது, ( http://thevartrust.blogspot.in/2010/12/history-of-pasumpon-muthuramalinga.html) பின் காமராஜர் எதிர்ப்பு அரசியலில் தி.மு.கவை ஆதரித்து, 1967 பொதுத் தேர்தலில் ஆட்சியை தி.மு.க கைப்பற்ற உதவியது, 1969இல் கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக உதவியது, போன்றவற்றால், தமிழ்நாட்டின் சீரழிவில், ராஜாஜியின் பங்களிப்பும், விருப்பு வெறுப்பற்ற ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.  

பெரியாரின் 'திராவிட நாடு பிரிவினை'யை ராஜாஜி ஆதரித்து, 'இந்தியர்' என்ற அடையாளமானது, தமிழ்நாட்டில் பலகீனமாக பங்களிப்பு வழங்கியுள்ளார்.இந்தியாவில் தமிழர்கள் மட்டுமே, 'தமிழர், திராவிடர், இந்தியர்' குழப்பங்களால், அடையாளச்சிதைவுக்கு உள்ளானார்கள். அதனால், 1944இல் விதைக்கப்பட்ட 'உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகளை', (பிற்கால வாரிசு அரசியலுக்கு வழி வகுத்த) 'தனிநபர் விசுவாசமாக' மாற்றி, 1965இல் பெரியாரையே அவமதித்து, ஓரங்கட்டி, 'புதிய சிற்றின' தலைவர்கள் வளர முடிந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். இந்த போக்குகள், 'தனித் தமிழ்நாடு' கோரிக்கையை சீரழித்து, கேலிப்பொருளாக்கியது போலவே, 'தனித் தமிழ் ஈழ' முயற்சிகள் முள்ளிவாய்க்கால் மரணத்தில் முடிய காரணமா? இந்த போக்குகள் தமிழ்நாட்டு தமிழர்களை (depoliticize) அரசியல் நீக்கத்திற்குள்ளாக்கியுள்ளதா? கட்சி, கொள்கை சம்பந்தமின்றி,  மாணவர்கள் மத்தியில் மோடிக்குள்ள அபரீதமான செல்வாக்கிற்கும், நடுத்தர, ஏழை,  தமிழர்களில் பெரும்பாலோரின் மத்தியில், மற்ற எவரையும் விட, ஜெயலலிதாவிற்குள்ள அதீதமான‌ செல்வாக்கிற்கும், உள்ள காரணங்கள் யாவை? அந்த செல்வாக்கில், 'சுருதி பேதமாக' , ஜெயலலிதா விசுவாசிகளில் பலர், சசிகலா நடராஜன் குடும்பத்தை சபிப்பது ஏன்? என்பதும் ஆய்விற்குரியதாகும்..

1967இல் முதல்வரானது முதல், மரணம் அடையும் வரை அண்ணாதுரை, நம்பமுடியாத அளவுக்கு எந்த அளவுக்கு உயர்ந்த மனிதராக வெளிப்பட்டார்? என்பதும், அதன் காரணமாகவே தனது கட்சிக்காரர்களால் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்குள்ளாகி மரணமானார்? என்பது போன்ற கேள்விகளுக்கு, பாரபட்சமற்ற முறையில் விடைகள் காண வேண்டும். காமராஜரின் 'அரசியல் குரு' என்பது,  சத்தியமூர்த்திக்கு பெருமை ஆகும். அது போல அண்ணாவை 'அரசியல் குரு' என்பவர்களால், அண்ணாவுக்கு பெருமையா? அல்லது சிறுமையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இயல்பால் 'சிற்றினமாக' இருந்தவர்கள் எல்லாம், சமூகத்தில் மதிக்கப்பட்டவர்களால், 'சமூக விரயம்' (social waste)   என்று ஒதுக்கப்பட்ட நிலை,  1967க்கு முன் தமிழ்நாட்டில் இருந்த நிலையாகும். சமூகத்தில் 'சிற்றினம்' செல்வாக்காக வலம் வரும்போது, இயல்பில் பலகீனமானவர்கள் எல்லாம், தூண்டப்பட்ட(Induced) சிற்றினமாக 'சீரழிவார்கள்'. அத்தகையோர் எண்ணிக்கையிலும், வலிமையிலும் அதிகரிக்கும் போது, அந்த சமூகத்தில் 'சிற்றினமே' தலைவர்களாக வலம் வர முடியும்.

‘நில நலத்தால் நந்திய நெல்லே போல், தம்தம்
குல நலத்தால் ஆகுவர்,சான்றோர்; கல நலத்தைத்
தீ வளி சென்று சிதைத்தாங்கு, சான்றாண்மை
தீ இனம் சேரக்கெடும்’ -   நாலடியார் 18 நல் இனம் சேர்தல் 9

இசை ஆராய்ச்சிக்கு முன் , திருச்சி பெரியார் மையத்தில் பங்களிப்பு வழங்கிய காலத்தில், எனது அறிவு உழைப்பு, உடல் உழைப்பு, பணம் ஆகியவற்றை செலவழித்து, (உண்மையில் 'சிற்றினம்') தமிழைத் தவிர, பிறமொழி அறியாத, தமிழிலும் ஆழ்ந்த புலமையற்ற, 'உணர்ச்சிபூர்வ மேதாவிகள்' போதையாளர்களை,   'பெரியார் கொள்கையாளர்' என்று நானே ஏமாந்து, உழைத்து, அதன் மூலம் ‘வலுவானவர்கள்', மேலே குறிப்பிட்ட‌,  'கறுப்பு ஆடுகள்' கூட்டத்தோடு சேர்ந்து, தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்தோடு, தமிழ்நாட்டின் கனி வளங்களை சூறையாடியதோடு திருப்தி அடையாமல், உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து வரும் குடும்பங்களையும், தூண்டப்பட்ட(Induced) சிற்றினமாக, சிதைப்பது என்பது, தமிழ்நாட்டின் உச்சக்கட்ட வீழ்ச்சியின் அறிகுறியே ஆகும்.நேர்மையான முறையில் 'செல்வம், செல்வாக்கு' சம்பாதிக்கும் தகுதி, திறமைகளற்ற‌, தீ இன இயல்புள்ள சிற்றினமானது, சான்றாண்மை தீ இனம் சேர்க்கையால், நம்பமுடியாத அளவுக்கு வலிமை பெறுவதால், சமூகத்திற்கு வரும் கேடு பற்றிய ஆய்வுக்குகந்த‌ களமாக, தமிழ்நாடு உள்ளது.  

‘நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460

உச்சக்கட்ட வீழ்ச்சியில் தமிழ்நாடு இருப்பதால், இனி தமிழ்நாட்டின் மீட்சி காலம் தொடங்கும் நேரம் வந்துவிட்டது.

அண்ணாவிற்கு பின், அவர் மன வருத்தத்தில் மரணமடைய காரணமான‌ போக்குகளை திருத்தி, தமிழ்நாட்டை நல்வழியில் திருப்ப என்ன முயற்சிகள் நடந்தன? அல்லது நடக்கவில்லை? இனி எவ்வாறு திருத்த முயற்சிகள் மேற்கொள்வது? அத்தகைய பணியில் ஈடுபடுபவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தால், அம்முயற்சி வெற்றி பெறும்? என்பது இப்போதுள்ள கேள்விகளாகும்.

அக்கேள்விகளுக்கான‌ விடைகளை திறந்த மனதுடன் ஆய்ந்து, கண்டுபிடித்து, செயல்படுத்த‌ தவறினால், முதலில் குறிப்பிட்ட கிராமத்தில், நாயகன் 'கமலாஹாசன்' அளவுக்கு இப்போது மரியாதை பெற்றுள்ள அந்த நபர், அடுத்து அரசியலில் நுழைந்து, எம்.எல்.ஏ, அமைச்சர் என்று 'உயர', 'தமிழ் உணர்வு, இன உணர்வு' தலைவர்கள் ஆதரவுடன் வலம் வருவதைத் தடுக்க முடியாது. அதற்கான சூழல் தமிழ்நாட்டில் இருப்பதை கீழ்வரும் செய்தியும் உணர்த்துகிறது.

கடந்த வாரம் சென்னை எல்லையில்,  ஆந்திராவுக்கு ரெயில் மூலம் ரேசன் அரிசியை பெண்கள் கடத்த முய‌ன்றதை, தடுத்த கிராம நிர்வாக அதிகாரியை, அந்த பெண்கள் அடித்த செய்தி, தொலைகாட்சிகளில் ஒளிபரப்பானது. 'ஜிகிர் தண்டா' திரைப்படத்தில் கதாநாயகி, அறிமுக காட்சியில், துணிக்கடையில் சேலை திருடுவது காட்டப்பட்டது. அரசில் உயர் பதவிகளில் இருந்தவர்கள், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கோடி திருடியும், அவர்களுக்கு தண்டனையில்லையென்றால், பிழைப்பிற்கு ரேசன் அரிசியை கடத்துவது தவறா? இப்போது 'நியுட்ரினோ' திட்டத்தை எதிர்ப்பவர்களில், கடந்த சுமார் 20 வருடங்களாக நடந்து வரும் கிரானைட், தாது மணல் கொள்ளையைக் கண்டு கொள்ளாதவர்கள், 'வாய்க்கரிசி' பெற்று வாயை மூடிக் கொள்ள,  எதிர்க்கும் போது,  துணிக்கடையில் சேலை திருடுவது த‌வறா? என்ற கேள்விகள் சாதாரண மக்களிடம் எழுவதை குறை சொல்ல முடியுமா? இவை போன்ற கேள்விகளை, சாதாரண மக்களிடம், 1967க்கு முன், கற்பனை கூட செய்திருக்க முடியுமா?

1944இல், திராவிடர் கழகம் தோன்றி, பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் கீழிறங்கி, உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகள் அரங்கேறத் தொடங்கிய போக்கு,  'இன உணர்வு' என்ற பெயரில் 'சிற்றினம்' தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்று மதிக்கத் தக்கவர்களானதால், என்னை போன்றவர்கள் சமூகத்தில் 'வாழத்தெரியாத முட்டாள்களாக' சமூக விரயமாக' ஒதுக்கப்படும் நிலை வந்துள்ளதா? என்ற ஐயம்,  திருச்சி ‘பெரியார் மையம்’ அனுபவங்கள் காரணமாக, எனக்குள் எழுந்தது. அகத்தில் சீரழிந்த சிற்றினமானது, 'இழிவான குறுக்கு வழிகளில்',  செல்வம், செல்வாக்கு ஈட்டி, தீயினமாக வலிமை பெற, பெரியாரின் கொள்கைகளும், நிலைப்பாடுகளும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன? ஒப்பீட்டளவில், இந்து முஸ்லீம்களை விட, கிறித்துவ குடும்பங்கள், எளிதில் சிற்றினமாக சிதைந்து வருகின்றனவா? மதமாற்ற சமூக செயல்நுட்பத்தில் (Social mechanism of the conversion)  முஸ்லிம்களுக்கும், கிறித்துவர்களுக்கும் இடையில் வேறுபாடு உண்டா? கிறித்துவ  NGOக்களுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும், திராவிடக் கட்சிகளுக்கும் உள்ள தொடர்பு எந்த வகையிலானது? பெரியார் கொள்கையாளர்களில், தமது சொந்த வாழ்வுக்கு 'சுயநலக் கள்வர் நெறி', வெளிவேடத்திற்கு 'சமூக நீதி, ஊழல் எதிர்ப்பு' என்று வாழும், இரட்டை வேடதாரிகள் யார்?, யார்? என்ற ஆய்வுகளில்,  நான் ஈடுபட அந்த அனுபவங்கள் காரணமாகும்.

அதன்பின்,  'தீ இனம்' என்று நான் அடையாளம் கண்டவர்களை விட்டு விலகி, 'நல்லினம் யார்?' என்று ஆராய்ந்து, அத்தகையோரை எனது சமூக வட்டமாகக் கொண்டு வாழத் தொடங்கிய பின் தான், தமிழ்நாட்டில் இருளிலிருந்து வெளியேறி, வெளிச்சத்திற்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது. எனது ஆய்வு முயற்சிகளில், நம்ப முடியாத அளவுக்கு முன்னேற்றங்களும் (http://musictholkappiam.blogspot.in/; & http://drvee.in/) ஏற்பட்டன. வணங்கத்தகும் மனிதர்கள் எனது சமூக வட்டத்தில் இடம் பெறும் போக்குகளும் அதிகரித்தன. ‘உயிருடன் வாழும் பிணங்களின்’ நாற்றத்திலிருந்து விடுபட்டு, சுத்தமான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிட்டியதே அதற்கு காரணமாகும். ('கொள்கை' பிணம் தின்னும் கழுகுகளாகவா? நாமே 'கொள்கைப் பிணமாக'வா? எப்படி நாம் வாழ்கிறோம்?’;

http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

'சிற்றினம் அஞ்சும் பெருமை' (திருக்குறள் 451);'அஞ்சுவது அஞ்சாமை பேதமை' (திருக்குறள் 428) 'சான்றாண்மை தீ இனம் சேரக்கெடும்’(நாலடியார் 18; நல் இனம் சேர்தல்; 9) பழந்தமிழ் இலக்கியங்களை 'தீதாக'க் கருதும், ‘உயிருடன் வாழும் பிணங்களின்’ நாற்றத்தில், நான் சிக்கியதில் வியப்புண்டோ? பின், தப்பி, சுத்தமான காற்றை சுவாசிப்பதிலும் வியப்புண்டோ? சிகிரெட் புகையை அனுபவிப்பவர்களிடமிருந்து, அந்த புகையை வெறுப்பவர்கள் விலகினால் தானே, சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்.

தமிழ்நாட்டில் சிறிய கட்சிகள் முதல், பெரிய கட்சிகள் வரை, ஆதாயத் தொண்டர்கள் பலத்தையே பெருமளவு நம்பி பயணிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? என்று ஆராய்ந்தேன். சாதாரணமாக வாழும் தமிழர்கள், என்னை விட புத்திசாலிகளாக, அந்த 'தீ இனம்' மனிதர்கள் எவ்வளவு ' தமிழ், தமிழ் உணர்வு, செல்வ வெளிச்சம்' போட்டாலும், மயங்காமல், அந்த 'ச‌மூக விபச்சாரிகளை' இழிவாகக் கருதி, ஒதுங்கி வாழ்வது, அல்லது பணம் தேவைப்பட்டால் அவர்களிடம் 'ஆதாயத் தொண்டராக' பணியாற்றி, தேவை முடிந்த பின் விலகி வாழ்வது, எனக்கே வியப்பான அனுபவமாகும். எனவே தமிழ்வழியின் மரணப்பயணத்தைத் தடுத்து, 'சுயநல கள்வர்கள் பதர்கள்' ஆதிக்கத்திலிருந்து, தமிழ்நாட்டை விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வலிமை பெற்றுள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில், பா.ஜ.க உள்ளிட்டு, தேசிய, திராவிட உள்ளிட்ட‌ அனைத்து கட்சிகளிலும், 'அடியாளாக' நுழைந்து, அரசியலில் வளர்ந்தவர்கள் யார் யார் இடம் பெற்றிருந்தார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.

எனவே கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, 'நல் இனம்' யார், யார் என்று தேடி, ஒன்றிணைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

‘மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்’ - திருக்குறள் 455

தமிழ்நாட்டில் அவ்வாறு 'தெரிந்த இனம்' மூலம், தமிழ் மொழியின் மரணப்பயணத்தையும், சுய‌நலக்களவராகி, தமிழர்கள் பதர்களாகி வரும் போக்கையும் வென்று, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சி உறுதி என்பதை, கீழ்வரும் திருக்குறள் தெளிவுபடுத்தியுள்ளது.

‘தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்’ - திருக்குறள் 462

அந்த முயற்சிக்கு தொல்காப்பியமும் வழி காட்டியுள்ளது.

‘மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்து கொண்டு,
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்
நுனித்தகு புலவர் கூறிய நூலே’
தொல்காப்பியம்; மரபு இயல் 112

எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில், நான் 'பெரியார் சமூக கிருமிகளாக' அடையாளம் கண்டவர்களில்;

1944இல் இளைஞர்களாயிருந்து, 1970களின் கடைசியில் நான் பெரியார் இயக்கத்தினுள் நுழைந்து, எனக்கு அறிமுகமானவர்களில் எவரும் கிடையாது. 1947க்குப் பின் வசதியான/வசதி குறைவான குடும்பங்களில் பிறந்து, ஒழுங்குடனும், பொறுப்புடனும் நன்கு படித்து, பெரியார் ஆதரவாளர்களாக, வளர்ந்தவர்களில் எவரும் கிடையாது. வசதி குறைவான குடும்பத்தில் பிறந்து, படிக்கிற காலத்தில் 'காலித்தனமாக' இருந்து கொண்டு, அல்லது 'காலிகளின் வால்கள் நண்பர்களாக' இருந்து கொண்டு, 'பெரியார்'' ஆதரவாளர்களாக, வாழ்வை 'அனுபவித்து', அதன் மூலம் பெற்ற‌ 'அறிவின்' துணையோடு, 'திராவிட அரசியல் கொள்ளைக் கும்பலுடன்' கூட்டு சேர்ந்து, 'குறுக்கு வழிகளில்', 'பெரியார் சமுக கிருமி' செயல்நுட்பத்தில், 'அதிவேக பணக்காரர்களாவதோடு, தமது சமூக வட்டத்தில், அந்த 'தனித்துவமான' கள்வர் நோயையும், அவர்கள் பரப்பி வருகிறார்கள்; சமூகத்தில் உள்ள அறிவுக்கு எதிரான உணர்ச்சிபூர்வ போக்குகளின் துணையோடும், ('ஊழல் எதிர்ப்பு அலையில்' மோடி பிரதமரான பின்னரும்) அரசின் ஊழல் ஒழிப்பில் உள்ள ஓட்டைகளின் துணையோடும்.

ஆக, 'சிற்றினம்', 'தீ இனம்' யார், யார் என்று அடையாளம் கண்டு, அவர்களை விட்டு விலகி, 'துணிச்சலுடன்', அதனால் விளையும் இழப்புகளை விரும்பி ஏற்று,  ‘நல் இனமாக' வாழ்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்வதன் மூலமே, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டில் மீட்சிக்கு,  நாம் பங்களிப்பு வழங்க முடியும். அதற்கு முன்னுதாரணமாக வாழ்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதானது, தமிழின்,
தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு நம்பிக்கை தருவதாகும்.
------------------------------------

2 comments:

  1. வீட்டிலே தீப் பிடித்து விட்டது. அதை அணைக்க வேண்டியது உடனடி அவசரத் தேவை. இதை உங்கள் பதிவு உணர்த்துவதாகப் புரிகிறேன். சந்தர்ப்பவாதிகள் அரசியல் என்பது மாறி வன்மையாளர்களின் திமிர் அரசியல் வரை வந்து விட்டோம்.
    பெரிய திருடர்கள் மத்தியில் "சேலை" த் திருட்டுதவறில்லை என்கிற உங்கள் பார்வையின் ஆழம் கவனிக்க வேண்டியது. சமூகமே சீரழிந்நு உள்ளது. இதையே வீட்டில் தீ என்று குறிப்பிட்டேன்.
    ஒரு வீட்டில் தீப்பிடித்தால் அதை அணைக்க நீர் ஊற்ற வேண்டும். அது பரவாமல் தடுக்க அண்டையில் உள்ள தீ பரவாத வீடுகளயும் நீரூற்றி நனைக்க வேண்டும்.
    தீப் பிடித்த வீடு இன்றை இளைஞர் மற்றும் பெரியவர் கொண்ட சமூகம்.
    தீப்பிடிக்காத அண்டை வீடுகள் புதுமை மாறா தமிழ்ச் சிறார்கள்.
    சிறுவர்களை இந்த வயதிலேயே நற்சிந்தனை புகட்டிக் காக்க வேண்டும்.
    ஒரு சிந்தனை:
    இது பற்றி முன்பு ஒரு முறை பதிவு செய்த நினைவு.
    தமிழருக்கு ஒரு பொது அடையாளம் தமிழ்மறை. மறை என்றால் தினமும் ஓத வேண்டும். பொருள் புரியாவிட்டாலும் மந்திரமாய் தினம் ஓத வேண்டும்
    ஒரு அதிகாரம் 70 வார்த்தைகள் காலையிலும் இரவிலும் குடும்பமாய் ஓத வேண்டும்.
    அறத்துப் பால் 38 அதிகாரம் முடிந்ததும் மறுபடி முதல் அதிகாரம்.
    இதே முறையில் பள்ளிகளில் காலை வணக்கம் அனைத்து மாணவரும்
    இளமைப் பருவத்திலிருந்து உரு ஏற்றி வளரும் தலைமுறையில் நல்லவர் நற்சிந்தனையாளரம எண்ணிக்கை பெருகும்
    கலவியாளர்கள் இணைந்து இது பற்றிக் குரல் கொடுக்கலாம். இயக்கங்கள் உருவாக்கலாம். இதில் அரசியல் இல்லை. உண்மையானவர்கள் ஈடுபட வைக்கலாம். அமைப்பு உள்ளவர்கள் செயல்பட இயலும்

    ReplyDelete
    Replies
    1. 'திருட்டு, குறுக்கு வழியில்' பணக்காரராகும் நோய் இல்லாத குடும்பங்களில், இதை நடைமுறைப்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கலாம். இல்லையெனில், குழந்தைகள் மத்தியில், திருக்குறள், கேலிப் பொருளாகிவிடும் அபாயமும் உண்டு.

      Delete